Sunday, April 24, 2011

எனக்குப் பிடித்த நாட்களும் நிமிடங்களும்...


இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்..

நான் சந்தித்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...

மும்முரமாய் மீன் குழம்பு வைத்துகொண்டு இருக்கும்போது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
என் நண்பன் ரமேஷ் பத்து வருடம் கழித்து தொலை பேசியில் அழைத்து தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிய தினம், பிறகு கண்டு பிடிக்க இயலாமல் "நீங்கள் யாரு என்று கூறுங்கள்," என்று கெஞ்சி அவனிடம் திட்டு வாங்கி பிறகு நலம் விசாரித்து பழைய கதைகள் எல்லாம் பேசி சிறிது மகிழ்ந்த தினம் நேற்று.


பிறகு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடைப்பயணத்தில்...
ஒரு அண்ணன் தங்கை இருவருக்கும் ஐந்தும் நான்கும் வயது இருக்கும். தன் தங்கை அழ அண்ணன் ஒரு கையில் இருந்த சாக்லட்டை அந்த தங்கையிடம் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சி மிக அழகானது. தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....

முன்னர் ஒரு மாலை நேரத்தில் குட்டிக் குட்டிக் குழந்தைகள் மிக அழகாய் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தபொது அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சின்னப் பையன் ஏதோ ஒன்றுக்குப் பிடிவாதம் பிடித்து, தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.


பிறகு பூங்காவில் வேகமாய் ஓடி வந்த ஒரு குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றதை தூரத்தில் இருந்து பார்க்கையில் மனதில் ஒரு நம்பிக்கை...


அருகில் உள்ள மரப்பலகையில் 'ஒரு காலத்தில் நானெல்லாம் அப்படி இப்பிடி' என்று மகிழ்ச்சியுடன் பழங்கதை கட்டிக்கொண்டு இருந்த பெருசுகள்.
அவர்கள் புன்னகையில் வாழ்ந்து மகிழ்ந்த சந்தோசம். அவர்களுக்குள் எவ்வளவோ சோகம் இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் அந்த நண்பர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்த நிமிடத்தில் நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம் என்று மனதில் சிரித்துகொண்டு இருக்கையில் ஒரு வித சந்தோசம்...

வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே இருப்பதாய் நினைத்து இருக்கும் நிமிடத்தை சந்தோசமாய் அமைதியாய் நகர்த்த வேண்டும் என்று எண்ணி வரும் பிரச்சனைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள அவ்விடத்தை விட்டு மெல்ல காற்றடிக்கும் திசையில் நடக்க ஆரம்பித்தேன்....

நட்பில் பிரிவு என்பது இல்லை
அப்படி பிரிந்தால் அது நட்பு இல்லை

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...




வாசித்தமைக்கு நன்றி
வாங்க வாங்க எல்லாம் வெயிலில் வந்து இருப்பீங்க. ஜில்னுனு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க...



மீண்டும் சந்திப்போம்....

Wednesday, April 13, 2011

என்ன தலைப்பு வைக்க....?



பொறுப்பு உணர்ச்சி :

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

நேத்து:
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


ஒரு குட்டி கதை:
அதாவது ஒரு காலத்தில் ராமு சோமு என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்
அவர்களில் சோமு ராமுவிடம் ராமு ராமு உனக்கு நல்ல நண்பனாக எப்பொதும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு வந்தான் இதைக் கேட்ட ராமு உன்னை போல நண்பன் கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும் சொல்லி நன்றி சொன்னான் அப்போ அந்த வழிய ஒரு கரடி வந்துட்டு...
உடனே சோமு ஹயோ ஹயோ என்ன பண்றது தெரியலே அப்படின்னு ஓடி போய் மரத்து மேல் ஏறி அமர்ந்து கொண்டான் அப்பறம் ராமுக்குதான் மரம் ஏற தெரியாதே உடனே ஒரு யோசனை செய்தான் ராமு கரடி அருகில் வருவது போல் இருந்ததும் கீழே விழுந்து செத்து போனவன் போல கிடந்தான்..
கரடி அருகில் வந்து முகந்து பாத்து தூர போயிட்டு..அப்புறம் கரடி போனதும் சோமு ஓடி வந்து
ராமு கரடி உன் காதில என்னடா சொன்னிச்சு உன்ன எதுமே பண்ண வில்லையே என்ன சொல்லிடு போய்ட்டுன்னு கேட்டான்..அதற்கு ராமு துன்பம் வரும்போது கூட யாரு இருக்காங்களோ அவங்கதான் உண்மையான நண்பன் அப்டின்னு சொல்லிட்டு போனது என்றான். இதை கேட்ட சோமு வெட்கி தலை குனிந்தான். தனது தவறை மன்னிக்கும் மாறும் கேட்டான்..அப்பறம் இருவரும் நண்பர்களை சந்தோசமாய்
சென்றார்கள்....

தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்

வாசித்ததில் பிடித்தது:

குருநாதர் தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு.

சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார். ”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர்.....

Thursday, March 17, 2011

நாங்களும் கவிதை எழுதுவோம்ல



முஸ்கி :

நாங்களும் கவிதை எழுதுவோம்ல...நட்புக்காக ஒரு சின்ன...


கடவுள்
எல்லா இடமும் இருக்க முடியாது என்பதால்
அன்னையைப் படைத்தான்
முதல் அறிவைக் கொடுக்க தந்தையும்
தொடரும் அறிவைக் கொடுக்க குருவையும் கொடுத்தான்
இவர்கள் அனைவரும்
எப்போதும் என்னுடன் இருக்க முடியாது என்பதால்
உனது நட்பை படைத்தான்
இறைவன் ...

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள் …

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள் …
(இந்த கவிதை நான் எழுத வில்லை ...)


நட்பு போல ஒரு இதயம் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...

டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...

பிராத்தனைகள்:
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுனாமியில்
இறைவனிடம் சேர்ந்த மனித உயிர்களுக்கு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்...

எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்.

என்றும் நட்புடன்
உலகத்தின் ஒரு மூலையில்
...

Saturday, February 26, 2011

அன்புத் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


எல்லாரும் வாங்க வாங்க
சாக்லேட் எடுத்துக்கோங்க
அட நிறைய எடுத்துக்கோங்க

ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா
இன்று
தேதியில்
...வருடங்களுக்கு
முன்பு பிறந்த நம்ம தோழி ஒருவருக்கு பிறந்த நாள்
அதுவும் எந்த மாதம் கடைசிக்கும் முந்தின நாள்
அதாங்க நாளைக்கு (27.02.2011)
எல்லாரும் வாழ்த்துங்க...

ஓகே
சிங் பர்த்டே சாங்
ஹாப்பி
பர்த்டே டு யு
பர்த்டே டு யு
பர்த்டே டு யு

அன்புத் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நட்பை
புரிந்து
தவறை
மெல்ல குட்டி
அன்பால்
திருத்தி
என்னை
நல்வழிப்படுத்தும்
என்நட்பே



கண்ணில்
காற்றுப்பட்டாலும்
கண்கலங்குவாய்
என் நட்பே

நின்
நட்பின்
அன்பைச் சொல்ல
எந்த
மொழியிலும் இல்லை
இந்த பிறவியும்
எனக்கு
போதவில்லை
என்றும்
எல்லா நலமும் பெற்று
என்றும்
உன் நட்பாய் இருக்க

அன்பிலும்
கருணையிலும்
குறைவில்லாத
நலத்தை
கொடுக்கும்
இறைவனை
வேண்டுகிறேன்


எத்துனை துன்பம்
வந்தாலும்
கண் கலங்காதே
வரும்காலம்
நலமாய்
இருக்கும்
என் நட்பே

பாசமான
அன்பில்
உன்
நட்பின்
நினைவில்
எதோ ஒரு மூலையில்
நானும்
நீ எப்பொதும்
நலமாய் இருக்க
வேண்டிக்கொண்டு இருப்பேன்

ஹாப்பி பர்த்டே
.
என்றும் நட்புடன்
உன் நண்பன்


டிஸ்கி:வாழ்த்து தெரிவித்த தெரிவிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கு எல்லாம்
நன்றிகள் ..

Friday, February 18, 2011

டீக்கடை.....(ஐம்பதாவது பதிவாம் )

முஸ்கி : சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு.....





"ஏய்! அவன் இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்லடா.. கூட இருந்தே இப்படி பண்ணுவானு.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பண்ணிட்டு நம்மை எல்லாம் தலை குனிய வச்சுட்டு போய்ட்டான். அவன் மட்டும் என் கையில சிக்கினான்னு வை, மவனே அவன் காலிடா," என்றான் குமார்.

சதீஷ் "ஏன்டா அவனுக்கு மூளை இப்படி நாசமா போனது? எப்போவும் ஒண்ணும் தெரியாதவன் போல இருப்பான். நானும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்குடா," என்று அவன் பங்குக்கு
புலம்பித் தள்ளினான்.

"இதுக்குத்தான் அவன நம்மகூட சேர்க்காதீங்கனு அப்போவே சொன்னேன்," என்ற ரமேஷ் "நீங்க தான் பாவம் அது இதுன்னு சொல்லிவிட்டு இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க," என்று அவர்களை உசுப்பி விட்டான். "எனக்கு அப்போவே தெரியும். இந்த ராஸ்கல் எதாச்சும் பண்ணிட்டு நம்மை நாளைக்கு மாட்டிவிடாம போகமாட்டான் என்று," அவர்களை இன்னும் ஏத்தி விட்டுக் கொண்டு இருந்தான்.

சரி, விடுங்க அப்படி என்னதான் பண்ணிட்டான்னு கேக்கறீங்களா? அந்த மூணாவது தெரு மாரி.. நல்லவந்தாங்க எந்த பழக்கமும் இல்லை. ஆனாலும் இவர்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டான். டெக்னிசியனாக ஒரு கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க சுமாராக இருந்தாலும் கொஞ்சம் அமைதியானவன். ஒரு கோவில் திருவிழாவில் அந்த கமலாவின் கருவிழியில் எப்படியோ மாட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்வையால் மனதை பரிமாறிக் கொண்டு... நம்ம
தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணு கமலாவ டாவடிச்சு... பொண்ண கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.

'எப்பவும் இந்த எடுபட்ட வீணாப் போன நண்பர்கள் கூட சேர்ந்துகொண்டு டீக்கடையில் போற வரவங்களை கிண்டல் பண்ணி காலத்தை ஓட்டினாலும், பையன் கில்லாடி தான் அந்த வாத்தியாருக்கு ஒரே பொண்ணு எப்படியும் அவர்களைக் கண்டு பிடிச்சு அடிய போட்டாலும் கடைசியா மருமகனா ஏத்துப்பாங்கனு ஒரு திட்டம் போட்டு பொண்ணை கொண்டு போய்ட்டான்,' என்று ஒன்றுக்கு நூறாக கிராமத்துக்குள் பேசிகொண்டார்கள்.

அவன் நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்களையும் விடவில்லை தெரு மக்கள்.
ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கேள்வி கேட்டு ஒருவழி செய்து விட்டனர். எத்தனையோ முறை "அவன் எங்கு சென்றான் என்று தெரியாது," என்று கூறியும் விடவில்லை.

அந்த வாத்தியார் பாவம் நல்லவர். என்ன, திருக்குறள் தவறாகச் சொன்னால் முட்டி போடச் சொல்லுவார். திரும்பச் சரியாகச் சொல்லும் வரையிலும் விடமாட்டார்.

அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் பட்டுத் திருந்தட்டும் என்று சொல்லிவ் விட்டு அவர் வேலையைப் பார்க்கத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.

கிராமத்திலும் ஒரு மாதம் மட்டும் அந்த பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தது. அவர் காதில் விழுந்தால் அப்போது அவர் கண்கள் கொஞ்சம் கலங்கும் தாய். இல்லாமல் பாசம் காட்டி வளர்த்த பெண் அல்லவா? இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய், 'தன் பெண் எங்கு இருந்தாலும் நலமாய் இருக்கட்டும்,' என்று வேண்டிக் கொண்டார்.

ஒரு சில உறவினர்கள் கூறும் கேலிப் பேச்சும் உற்ற நண்பர்கள் கூறும் ஆதரவும் அவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அவரின் மௌனம் அதிகம் ஆகியது. அந்த மௌனமே அனைவரின் பேச்சையும் குறைக்கச் செய்தது.

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரின் மகள் கைக் குழந்தையுடன் கணவனோடு பிறந்த ஊருக்கு வருகிறாள். ஊரே வியப்புடன் பார்க்கின்றது. அவன் மிக நல்ல படியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளது புன்முறுவலில்,

முகத்தில் காட்டிய சந்தோஷத்தில் அனைவரும் அறிந்து கொண்டனர். ஒருவர் ஒருவராக விசாரிக்கத் தொடங்கினர்.

அனைவரிடமும் தன் கணவன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேறு ஊரில் தங்கிவிட்டதாகக் கூறினாள். அனைவரும் திட்டிய திட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு "நல்லபடியா இரும்மா," என்று வாழ்த்தி விட்டு அவளது வீடு வரைக்கும் வந்து அவளது தந்தையிடம் சமாதனம் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து அழ அவர் மனம் இளகி, பேரப்பிள்ளையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டு சாமிமாடம் நோக்கிச் சென்றார். அவரின் மௌனமும் மெல்ல குழந்தையின் கொஞ்சலில் கரைந்தது.

ம்.. நம்ம மாரிமுத்து வீட்டில் முதலில் எற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு ஒருவழியாக அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

அவனது நண்பர்கள் ரமேஷ், குமார் எல்லாம் வந்து அவனை கிண்டல், கேலியோடு கொஞ்சம் அடியும் போட்டு மீண்டும் டீக்கடையில் ஐக்கியம் ஆனார்கள்.


டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."

Monday, February 14, 2011

எனது தேவதைக்கு....!!!



உன்னை
பார்த்த
நிமிடங்கள்
நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் ...!

கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!

எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை!




எதாவது ஒரு தருணம்
விழியின் ஓரத்தில்
கரைவது
என்னை
அறியாமல்
விழும்
துளிகள்.
இன்னும்
கன்னத்தில்...!!!

ரோஜா

கொடுத்தது இல்லை
அது உன்னைப் பார்த்து
வெட்கப்படும்
என்பதால்...!

வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகள்
கொடுத்ததும் இல்லை
வெற்றான
வார்த்தைகளில்
என் அன்பை
முடித்துவிட
விரும்பவில்லை ...!

பரிசு பொருளும்

கொடுத்தது இல்லை
பழசாகி விடும்
என்பதால் ..!

எப்பொதும்
உனக்காய்
புத்தம்
புதிதாய்


துடித்து..
நினைத்து...
வாழ்ந்து
கொண்டு
இருக்கும்....


ஒரே ஒரு
இதயத்தைக்
கொடுத்து
விடுகிறேன்
பத்திரமாய்
வைத்துக்கொள்
என் தேவதையே ...

Friday, February 11, 2011

காதலி கிடைக்க ஒரு சில யோசனைகள் .... (Dont worry.)


இந்த பதிவு ஒரு ஜாலிக்காக யாரயும் கஷ்ட படுத்த இல்லை..
(எல்லாம் சகோ தம்பி அண்ணா என்று அழைத்து உயிரை வாங்குகிறது என்று புலம்பும்
என் உயிர் நண்பன் ஒருவனுக்காக இந்த பதிவு )

யாரவது தேவதைய பார்த்து இருந்தா சொல்லுங்க
இதுவரை எந்த தேவதையையும் நான் பார்க்க வில்லை என்று.
நினைப்பவர்கள் கவலை வேண்டாம்...

இந்த வருடமாவது
காதலிக்க
ஒரு தோழி கிடைக்கணும் சாமி...அப்பிடின்னு
நம்ம முருகனை வேண்டிக்கிட்டு...

ஒரு தோழி கிடைக்க
முக்கிய விதிமுறைகள்
என்ன என்ன ?

முதலில் ஒரு வேலை ...
கொஞ்சம் லட்சணம் ...
கொஞ்சம் ஸ்டைல்
கொஞ்சம் மொக்கை
கொஞ்சம் ரொமாண்டிக்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் இருத்தல் அவசியம்
சொல்ல மறந்துவிட்டேன்
போன் கார்டு
கிரெடிட் கார்டு அவசியம்..

முக்கிய விதிகள் :
அவள் தோழிகளை
மறந்தும் கூட விசாரித்து விடவோ
பார்த்து விடவோ கூடாது


பிறகு இதர விதிமுறைகள்
ஒரு நாளைக்கு இருபத்தி மூன்று மணி நேரம்
பேசிகொண்டே அல்லது பேசுவதை
கேட்டுக்கொண்டே இருக்கவேணும்

ஒரு
காதல் கடிதம் கண்டிப்பாய் எழுத தெரிந்து இருக்க வேண்டும்.

கண்ணே மணியே அப்படி ஆரம்பிக்கணும்
தப்பு தப்பா எழுதணும்

கைக்கூ

அவள் நம்மிடம் கெஞ்சும்போது
சாமிகிட்ட வரம் கேக்கலாம்
சாமியே நம்மகிட்ட வரம் கேட்டா...
அப்படின்னு
உளறவேண்டும்

உன் கண்கள்
அந்த வெள்ளி
நிலவின்
சிறு துண்டு
என்று
வஞ்சனை இல்லாமல்
பொய் சொல்ல வேண்டும்

உன் பார்வைகள்
சூரியனை
மங்க வைக்கும்
ஒளிக்கதிர்கள்
என்று
உண்மை சொல்ல வேண்டும்

தூங்கமுடியல
சாப்பிட முடியல
என் வீட்டு
ஜன்னல் முதல் கொண்டு
உன்வரவை
எதிர்பார்த்து
கொண்டு இருக்கிறது
என்று எல்லாம்
அள்ளிவிட வேண்டும்

பக்கம் பக்கமாக
பிழை இல்லாமல்
புத்தம் புதிதாய்
கவிதை எழுத தெரியவில்லையே ...

எது எல்லாம்
பண்ணியும்

காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்.
அம்மா அப்பா பார்க்கும் பெண்ணுக்கு
லவ் லெட்டர் எழுதவும்...

டிஸ்க்கி:)
(ஊரில லவ் பண்ணாத
உங்க சொந்தகாரவங்க இருந்தா
தொடர்பு கொள்ளவும் )

Tuesday, February 8, 2011

சேமிப்பு குணம்......



அம்மா என்று அழுது கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் மூன்றாவது படிக்கும் ஒரே மகன் ராஜேஷ்,உள்ளே இருந்து பதறிக் கொண்டு அவனது தாய் மகேஸ்வரி ஓடிவந்தாள், தைத்துக்கொண்டு இருந்த தையல் எந்திரத்திடம் இருந்து...
"என்ன கண்ணு? ஏன்டா தங்கம் பள்ளிக்கூடம் போகலை? போன உடனே திரும்பி வந்துவிட்ட" என்று கேட்டுக்கொண்டே. அவனது விழியோரம் இருக்கும் கண்ணீரை கண்டு அவளது கண்களும் கசிந்துவிட்டது.

"டீச்சர் பீஸ் கட்டலை என்று வீட்டுக்கு சென்று வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா." அவன் படிப்பது சாதாரண பள்ளிக்கூடம் தான். அதிலும் அந்த பீஸ் இந்த பீஸ் என்று கேட்டு ஒரு வழி பண்ணிவிட்டனர். "கண்ணு நாந்தான் நாளைக்கு வந்து கட்றேன்னு சொன்னேன்லப்பா'" என்றாள். "நீ இதே தான்மா டெய்லி சொல்ற. கிளாஸ்ல எல்லாரும் பீஸ் கட்டிட்டாங்க அம்மா. டீச்சர் என்னை ஏன்டா பீஸ் கட்டவில்லை என்று கேக்கும்போது என்னை எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க அம்மா. நீ சீக்கிரம கட்டிடுமா," என்று சொல்லி அழுது கொண்டே உள்ளே ஓடினான்.

அவளும் என்னதான் செய்வாள் அவளது கணவன் இறந்து ஒரு வருடம் ஆகிறது. பிடிவாதமாக மறுமணம் செய்து கொள்ளவில்லை; நல்ல வேளை அவள் கணவன் விட்டுச்சென்ற சிறிய சொந்த வீடு ஒன்று இருந்தது. தனது மகனுக்காக வாழ வேண்டும் என்று ஒரு வைரக்கியத்தோடு குற்றம் சொன்ன உறவுகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அவளுக்கு தெரிந்த இந்த தையல் வேலையை வைத்துக் கொண்டு அன்புமகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று காலங்களை கடந்து வருகிறாள்...

இப்போது எல்லாம் முன்பு போல அதிக வருமானம் இல்லை. இருந்தாலும் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்கள் இரண்டு பேருக்கும் போதுமானதாக இருந்தது. இப்படி எதிர்பாராமல் வரும் செலவுகளை ஒரு சில நேரம் சமாளிக்கக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

காதோரம் இருக்கும் ஒரு கல்லுதோடு நினைவுக்கு வந்தது. உடனே ஓடிச் சென்று அருகில் உள்ள மீனாட்சி அடகுக் கடையில் வைத்துப் பள்ளிக்குக் கட்ட வேண்டும், என்று வீட்டுக்குள் பணத்துடன் வந்தாள். தனது மகன் சிரித்த முகத்துடன் "அம்மா என்கிட்ட நூத்தி எழுபது ஐம்பது பைசா இருக்கும்மா, இந்தாம்மா'" என்றான்.

ஏதுடா உனக்கு எவ்ளோ பணம் என்று கேட்ட அவள் கோவத்துடன் போது
"அம்மா தினமும் நீ மிட்டாய் வாங்கிச் சாப்பிடக் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாயும் சேர்த்து வைத்து இருந்தேன்மா," என்றான் அந்த மூன்றாம் வகுப்புச் சிறுவன். அந்த நேரம் அவள் உள்ளம் அளவில்லா பூரிப்பு அடைந்தது. தினமும் தன் கஷ்டம் உணர்ந்து வளர்ந்து இருக்கும் தனது மகனை அள்ளி முத்தம் கொடுத்து "என் தங்கம்," என்றாள். அந்த நேரம் அவளுக்கு வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இளமையில் வறுமையை எவ்வளவு தூரம் அறிந்து இருக்க வேண்டும், அதனால்தானே சேமிக்கும் பழக்கம் இந்தச் சின்ன வயதில் வந்து இருக்கிறது. சிறுவயதில் அவளும் தன மகன் போல சிறு சிறுக சேமித்து வைத்து இருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தான் சொல்லி கொடுக்காமலே இப்படி சேமிக்கும் குணம் வந்ததை எண்ணி மகிழ ஆரம்பித்தாள்.

இனிமேல் தான் மகன் பள்ளிக்கு பீஸ் அவ்வப்போதே கட்டிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனது தையல் மிசினுடைய இன்னும் வேலைகளை விரிவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது மகன் தந்த சந்தோசத்தை மனதில் வைத்துகொண்டு வாழ்க்கையின் கஷ்டங்களை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்தாள் அவளது வாழ்க்கை பயணத்தை......

பிஸ்கி:

எனது சின்ன முயற்சி மொக்கைய இருந்தாலும் திட்டவோ
எண்ணினாலும் சலிக்காமல் கம்மேண்டில் கொட்டவும்..
எவ்ளோ படங்களை திரும்ப திரும்ப பார்க்கிறோம் அதில இந்த கதையும் மனசில வைத்துககொளுங்கள்....

Monday, January 31, 2011

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்...




எனக்குள் வந்தது ஒரு மடல்....

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்.

ஹாய் பிரவின்,

எப்படி இருக்க? நலமா?

நானும் நலமாய் இருப்பதாய்ப் பொய் சொல்லுகிறேன். உண்மையில் அப்படி இல்லை; ஏதோ ஒரு மாற்றம் என்னில் உணர்கிறேன். அருகில் இருந்த தருணங்களில் எதையும் அறிய முடியவில்லை, நீ தொலைவில் சென்ற பிறகு உணர்கின்றேன்.

என் உணர்வுகளையும் மதிக்கும் ஒரு மனிதனை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். நேர்கொண்டு பார்க்கும் உன் கண்கள் முதற்கொண்டு, அளவாக உள்ள உனது கால் நகம் வரைக்கும் என் நெஞ்சில் புகைப்படமாய்.. வந்து கொண்டே இருக்கிறது..

காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.

உன்னை நான் மட்டும் தேடவில்லை; பக்கத்து வீட்டு வாண்டுகளும் "பிரவின் அண்ணா மீண்டும் எப்போ வருவாங்க?" என்று என்னை நச்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதில் நானும் அடங்கும் எப்போது மீண்டும் என்னிடம் வம்பு இழுப்பாய் என்று...

பட்டம் விட்டு சிறுவர்களோட சேர்ந்து நீயும் கண்ணாம்மூச்சி ஆடி..அவர்களில் ஒருவனாய்
நீ செலவிட்ட விடுமுறைத் தினங்கள் அவர்களோடுதான் அதிகம். இருந்தாலும், கிடைத்த இடைப்பட்ட நேரங்களில் என்னிடம் குட்டிக் குட்டி வம்பு, சண்டைகள் தவறாமல் இழுத்துக்கொண்டே தான் இருந்தாய். அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.

தொடரும்...

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!

Thursday, January 20, 2011

நிலவும் நினைவும் ....!


அழகான
இரவுகளின் நடுவில்
ஒரு நாளில் உன் முகம்
மேக இருட்டில் இருந்து
வெண்தங்கத்தை
முலாம் பூசிக்கொண்டு
கொண்டு
வான்வழியில் நீ
மாதம் ஒரு முறை
வந்து கரைந்து போகிறாய்..

உன்னைத் தொடும் முயற்சியில்
பூமியின் மேற்பரப்பில்
அடுக்கடுக்காய்
செங்கல்
எல்லாம்
வண்ணம் பூசிய
கட்டிடங்கள்..


நீடித்திடும்
இரவின் தனிமையில்
மட்டும் இல்லை..,
முடிந்து
போகும்
ஒரு
ஒரு
தினமும்
சருகுகளின்
மீது
கால் பதித்த
தடம்
போல
என்னைச்சிறைபிடித்திடும்
உந்தன் நினைவுகள்

தூரச்சென்று
திரும்பி பார்க்கும்
பார்வைகள்
நீண்டு போகாத
என்று எண்ணிய
நிமிடங்களும்
முடிந்து போகாத நாட்களும்
மறந்துவந்து
கரைந்து
போயின...

Monday, January 10, 2011

LEAVE LETTER

LEAVE LETTER

From:

N.Siva,

10th Standard "B" Section,

Anbaivida Ayutham Illai Primary School.



To:

All Blog Owners,

Blogs follow dot.com,

All Blogs University Google,

U.S.A.

Sub:


Due to Exam am on leave....


Respected Sir/Madam (All Blog owners),

As am suffering from Exam fever..so am unable to Attend and see all the

blogs i follow and not able to put any comments. Please grant me leave for two

three month only.Thank you very much..


I wish All the blogs get over 100 comments for every post.

Thanking you,


Yours Obediently,

Name: N.Siva.

Date: 10.01.11


(P.K) SORRY FOR ANY SPELLING MISTAKES.THANKS IN ADVANCE)

Friday, December 31, 2010

இதயம் இடம் மாற்றி ....



முயற்சி
எல்லாம்
முடிந்தே
போனது!

கற்பனை
எல்லாம்
கனவாய்
மாறியது!

மனமும்
தொலைந்து
மௌனம்
தொடர்கிறது..!

இதயம்
அழுது
கண்களில்
கண்ணீர்
கரைகிறது!

வார்த்தை
வற்றி
கவிதை
மறந்தது!

மெய்யும்
பொய்யும்
ஒன்றாய்
ஆனது!



மிக தூரமாய்
என் அருகில்
இல்லாத
காரணத்தால்
உன் இதயம்
தொடுவது
சிரமம்
என்று...

எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்...



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்



Wednesday, December 29, 2010

இன்று ஒரு தகவல்....

பிஸ்கி: யாரையும் புண்படுத்த இந்த பதிவு இல்லை
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது எல்லாம் தெரிந்தவங்களும் கிடையாது எல்லாம் படம் அவ்ளோதான் ....
பிடிச்ச வாசியுங்க பிடிக்கலையா போய்கிட்டே இருங்க.



"கைக்கூ"

மரக்கட்டை


இறந்தது
மனிதன்தானே
என்னையும் ஏன்
கூட புதைக்கிறாய்
என்றது
சவப்பெட்டி..!

நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!


போதனை :
முடிந்தால் உடல் தானம் பண்ணுங்கள் ....


நன்றி: இதுவரை எனது மொக்கை பதிவுகளும் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கும் எனது தமிழ்ப்பிழைகளையும்
பொறுத்து அருள்மாறு கேட்டுகொள்கிறோம். ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..

பதிவு எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரிய வில்லை தெரிந்தால் சொல்லி தரவும் கற்றுக்கொள்கிறேன்..தெரிந்தால் அது பற்றி ஒரு தொடர்ப்பதிவு எழுதவும்...

கடைசியா ஒரு கவிதை சொல்லாட்டி
பதிவு முற்று பெறாது..

தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...

மறக்க மட்டும்
மூளை வேண்டாம்
மன்னிக்கவும்
இதயம் வேண்டும்

தனிமனிதன்
உலகம் இல்லை
சகாக்கள்
இல்லாமல்
எனது உலகமும்
இல்லை
''அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை.''

நன்றி
வணக்கம்
உங்கள் வீட்டுப்பிள்ளை
சிவா

Sunday, December 26, 2010

எனக்கும் பிடித்த ஒரு சில பாடல்கள்


முஸ்கி:தொடர் பதிவுக்கு அழைத்த சகோ மதிக்கு நன்றி

எனக்கும் பிடித்த ஒரு சில பாடல்கள்



1.படம்: தளபதி

இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி
(இந்த பாடல் மிக பிடிக்கும்
(அதில் வரும் சுருதி...தாளம் எல்லாம் மிக நன்றாக இருக்கும் )


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

பாடல் - 2.திருமலை
இசை: ?
பாடியவர்: ?




நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

பாடல் : 3
படம் : ரட்சகன்




கனவா... இல்லை காற்றா...
கனவா... நீ.. காற்றா...
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே...
இந்திரா லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

(கையில்...)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி... (-- twice)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது... (-- twice)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் மற்றொரு பூ விழுந்தாள்
என்னால் தாங்க முடியாது

(கையில்...).

பாடல் : 4
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து



தகிட ததிமி தகிட ததிமி தம்தானா

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)

பாடல் : 5
படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா
பாடல்:- நா.முத்துக்குமார்



நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

பாடல் : 6
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு



காதல் வந்தால் சொல்லி அனுப்பு...

Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
(காதல்..)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
(காதல்..)
என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
(காதல்..)
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு


பாடல் : 7
படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்




டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட


பாடல் : 8
படம்: ராவணன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்:வைரமுத்து
பாடியவர்: ஸ்ரேயா கோஷால்



கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகிறதே


(கள்வரே கள்வரே)



பாடல் : 9
படம் - தீனா
பாடல் - சொல்லாமல் தொட்டுச்..
.


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
..



பாடல் :10
படம் - துள்ளாத மனமும் துள்ளும்
வரிகள் - வைரமுத்து
குரல் - உன்னி கிருஷ்ணன்
இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்




இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

பிஸ்கி:
(உங்களுக்கு பிடித்த ஒரு பாடல் சொல்லுங்க)
நன்றி
வணக்கம்.

Friday, December 24, 2010

Employed in Foreign...

முஸ்கி : நான் வாசித்த ஒரு மெயிலில் வந்த கவிதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தூக்கம் விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
" கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

" இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

Wednesday, December 22, 2010

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...!




அனைவருக்கும்
பதிவு உலக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்
எனது அன்பான
இனிய கிறிஸ்மஸ்
மற்றும்
ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
மேரி கிறிஸ்மஸ்
மேரி கிறிஸ்மஸ்
மேரி கிறிஸ்மஸ் ....

நன்றி.

இப்படிக்கு
நட்புடன்
சிவா

Saturday, December 18, 2010

கடலை போடறது....(கடலை.)..!



முஸ்கி:

நாம இப்போ பார்க்க போற விசியம் கடலை போடறது பத்தி இல்லை...கடலை பத்தி..அதாவது நிலக்கடலை..வேர்க்கடலை...
உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விசயம் இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்ட என்ன என்று யோசிக்கும்போது .....

எங்கயோ வாசித்த சில தகவல்கள் :


கடலை என்பது மிகவும் உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகச் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும்..

[B]கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
[/B] வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி 3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப்பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிடவேண்டும்.


கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? உடலுக்குக் கெடுதி இல்லையா? தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.

இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட
கொழுப்புகள் உருவாகிவிடும். கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய் களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண் ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

[B]வேர்க்கடலை எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்? [/B]

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு.

வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது.

அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

[B]சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவா?[/B]

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.

எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.


[B]வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன? [/B]

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.

எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக் காது; குறையும்.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடு வதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.

அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்து விடுகின்றன. நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.


ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு விடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.


[B]வேர்க்கடலை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? [/B] ..அதாவது உங்க இஷ்டத்துக்கு சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது அடுத்த நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வரும்...நாம மேட்டருக்கு வருவோம்..

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடு வதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது.

மிக்க நன்றி பொறுமையுடன் வாசித்தமைக்கு



கடலை போடறதுக்கு பதிலா கடலை சாப்பிடலாமே அப்படி யாரவது நினைத்தால் உங்கள் வாழ்க்கை அமோகம் ஆகும்."ஏதனும் தவறுகள் இருப்பினும் பொறுத்து கமெண்டில் அருள்க"

Wednesday, December 15, 2010

நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லலாம் !!!




நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லலாம் .....

வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...


பதிவுலகில்
அமைதியாய்
ஆர்ப்பாட்டம்
இல்லாமல்
தேவதை பத்திரிக்கையில்
வலம் வந்துள்ள
தோழி ப்ரியாவிற்கு (http://enmanadhilirundhu.blogspot.com/)



இன்னும் பல பரிசுகளும்
விருதுகளும் பெற்று
உங்கள் வாழ்க்கை பயணமும்
பதிவுலகம் பயணமும்
சிறக்க
வாழ்த்து
தெரிவித்துக்கொள்கிறோம்

இப்படிக்கு
உங்கள்
வாசகர்களில் ஒரு வாசகன்.

Tuesday, December 14, 2010

சுத்துதே பூமி ...

முஸ்கி:)
எந்த பாடலை விரும்பி கேட்டவர்கள்
அண்ணன் மொக்கை செல்வா
மெகா கவி பாண்டியன் (டேர்றோர்)
அப்புறம் என் ப்ளாக் பக்கம் வரும் அனைவரும் விரும்பி கேட்கின்றனர் .....


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே


பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி



ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...