Thursday, May 26, 2011

கிராமத்து கனவிலே...(1)




மிதமான காலைப்பொழுது அழகாய் பகலவன் பல் துலக்கி அதிகாலையிலே எழுந்து விட்டான் போல. அதுவரை கனவில் இருந்தான் ஜீவா. அழகான கிராமம், பெயர் தெரியாத குருவிகளின் ரீங்காரம், குயில்களின் கூவல், பொழுது விடிந்து இரை தேடப் புறப்படும் பறவைகள், அல்லி அதிகமாக இருந்த குளக்கரை ஓரம் ஒற்றை காலில் நடனம் ஆடும் கொக்கு, நானும் இருக்கேன்னு குளக்கரையில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள்...

இதமாய் ஒரு மெல்லிய காற்று படும் படாமலும் வீசிக்கொண்டு இருந்தது. இந்த இளஞ்சூரியன் லேசாய் சுட்டாலும் அது ஒரு வித உத்வேகம் கொடுத்தது. வண்டுகள் எல்லாம் அதன் பணியை தொடங்க ஆரம்பித்து விட்டன. பூக்களின் தேன் வாசம் காற்றில் வந்து கொண்டு இருந்தது.

அந்த சிறு கிராமம் மெல்ல எழுந்து கொண்டு இருந்தது.

அப்போதுதான், "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

"அவனை விட சின்ன பிளைங்க எல்லாம் காலையில எழுந்து குளித்து அமைதியாக படித்து கொண்டு இருக்கின்றனர். இவனுக்கு மட்டும் ஸ்கூல் இல்லையா?" என்று எப்போதும் பேசும் பாராட்டுகள் ஒரு பக்கம் திரும்பி படுத்தாலும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மெல்ல கனவில் இருந்து எழுந்தான். அம்மா, "இந்தாடா, டீ குடிச்சிட்டு போ." என்று சொல்லி விட்டு அவர் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தார்.

மெல்ல சோம்பல் முறித்து எழுந்து போர்வை எல்லாம் மடித்து வைத்து விட்டு குளிக்கச்சென்றான். குளித்து வந்து நேரம் பார்த்தப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது. 'ஆகா! நேரம் ஆகிவிட்டதே.' என்று உள்மனம் துடித்துக் கொண்டு இருந்தது. மனசுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ஜீவா. பின்ன! லேட் ஆகி போனால் பள்ளி சென்று அங்கும் திட்டு வாங்க வேண்டுமே. பள்ளியைச் சுற்றி ஓடி வர வேண்டுமே, என்று விரைவாக அம்மா சுட்ட பஞ்சு இட்லியை மிளகாய்ப் பொடியோட தேங்காய் சட்னியையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான்.


மதியம் சாப்பாடும் ரெடி பண்ணி அவன் பையில் வைத்திட்டு "மிச்சம் வைக்காம சாப்பிடு கண்ணா." என்று பாசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தைக்கு "சரிம்மா." என்று சொல்லிக்கொண்டு தனது மிதி வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போகும் வழியில் போகும் வழியில் அவனது நண்பர்கள் ராஜேஷும் ,கணேஷும் சேர்ந்து கொண்டனர். மூவரும் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் நான்காவது குருப்பில் படித்து கொண்டு இருந்தனர். அந்த பள்ளிக்கூடம் அவனது வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சரியாக ஒன்பது நாற்பதுக்கு எல்லாம் வகுப்பில் இருந்தனர். இந்த வருடத்தின் முதன் நாள் முதல் இன்று வரை அனைவரும் வருங்காலம் பற்றிய பயத்துடன்... எப்படி படிப்பது என்று பல யோசனைகள் ஒவ்வொரு மாணவருக்கும் இருந்தது.

இதில் ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதை பொறுத்து இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள். இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர். இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....


ஓகே மீதி அடுத்த பகுதியில்...

Monday, May 23, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...


இந்த போட்டோ எதுக்குன நாந்தான் firstu விஷ் பண்றேன் அதுக்காக ஹாப்பி பர்த்டே பேபி..




வானத்து தேவர்களும்
பூமியின் புண்ணிய
பதிவர்களும்
உலகத்தில் உள்ள அத்தனை
கவிதை அரசர்களும்
நேசம் தரும் தேவதைகளும்
பாசம் தரும் குழந்தைகளும்
நட்பை தரும் நண்பர்களும்...

ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவும்
இந்திய வானொலியும்
தத்தம் வாழ்த்துக்களை

பிரபல பதிவர்
கவிதை நாயகி

(கவிதையை கொலை பண்றவங்க)
சுபத்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றன..

என்றும் நீண்ட ஆயுளோட
நல்ல நலமுடன் வாழ
எல்லாம் வல்ல இறையை
நானும் வேண்டுகிறேன்

சாமி இந்த புள்ளைக்கு நல்ல புத்திகொடு...
கவிதையாய் எழுதி எங்களை எல்லாம் கொன்னுகிட்டு இருக்கு.....

சுபா உங்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி
எல்லாரும் இருந்து சாப்ட்டு




விட்டு பரிசு பொருள் கொடுத்து

வாழ்த்திட்டு போங்க


நூறு பலூன் விட்டு அதில ஹாப்பி பர்த்டே
எழுத விருப்பம்..
பசிக்கிற அனைவருக்கும் சாப்பாடு போட்டு உனக்கு வாழ்த்து சொல்ல விருப்பம் ..
என்னால அவ்ளோலாம் பண்ண முடியுமான்னு தெரியல...

ஆனாலும் பதிவுலகத்தில கிடைத்த நட்பு
மனசார நீ நல்ல இருக்கணும் வாழ்த்றேன்
சந்தோசமா இரு..
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு...
ஒரு சாதாரண வாசகன் சிவா

ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ..
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...


ஓகே ஸ்டார்ட் மியூசிக்


டிஸ்கி:
என்னடா இவன் ஒரு ஒருத்தருக்கும் வாழ்த்து சொல்லியே
போஸ்ட் போடறான்னு திட்ட கூடாது...(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம் .(போஸ்ட் போடாட்டி பிறந்த நாள் குழந்தை திட்டுவாங்க..)இந்த குழந்தை என்ன பண்ணும் நீங்களே சொல்லுங்க...)

Tuesday, May 17, 2011

அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன் நானும்.....

திறக்கப்பட்ட
ஜன்னலில்
எதிர்ப்பட்ட
தென்றல்...




நினைவு தரும்
கணத்தில்
விழியோரம்
விரும்பி வரும்
அரும்புகள்...




கானலாய்
மாறும்
கவலைகள் ...


தனிமை
தீப்பெட்டிக்குள்
அடைக்கப் பட்ட
இரவுகள்..



பக்குவபடதா
நிலையில்
புகுத்தப் பட்ட
கஷ்டங்கள்...!


நம்பிக்கை எனும்
வழி
கொண்டு வந்த
நட்புகள்.





போகும் வழியில்
நாளைப் பற்றி
யோசிக்காத
புன்னகைத்த
பூக்கள்..



இவை எல்லாம்
என்னை இன்னும் யோசிக்க வைக்கின்றன.

இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
இனிமையாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென..

வாழ்க்கை எனும் நாட்காட்டியில்
முடிந்து போன விசயங்கள் பற்றி யோசிப்பதில்
பயன் இல்லை என்று
கடந்து போன நாட்கள் உணர்த்துகின்றன..

அருமையாய் ஆண்டவன் கொடுத்த நிமிடத்தை
அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன்
நானும்...


நானும்...

முடிந்த வரையில்
முடியாதவர்களுக்கு
உதவி செய்து
கடக்கும் நாட்களை
நட்புகளோடு பகிர்ந்து கொண்டு
நாட்கள் மட்டும் அல்ல,
இருக்கும் நிமிடங்களும்
சந்தோசமாய் நகரும்
என்ற நம்பிக்கையோடு........


Thursday, May 12, 2011

எதிர்கட்சிகள் செய்த சதியால் நேற்று வாழ்த்த முடியவில்லை ...

பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்தநாள் ..13.5.11


பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்த நாள் ..
அட ஆமாங்க நாம பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா மேடம் அவர்களுக்கு
பிறந்த நாள் இன்று 13.5.11
அகில உலக பதிவர்களும்
அனைத்து நாட்டு பிரதமர்களும்
பொது மக்களும்
தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர் ..

ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..

எல்லாரும் வாங்க கொஞ்சம் வெட்டி பேச்சு பேசிக்கிட்டே வாழ்த்து சொல்லுங்க...
ஹாப்பி பர்த்டே டு யு சித்ரா அக்கா.உங்கள் வாசகர்களில் ஒருவன்.

என்னதான் சூப்பர் ஸ்டார் இருந்தாலும் நம்ம சித்ரா அக்கா போல ஸ்டார் யாரும் இல்லைங்க
பதிவு உலக மேதை
பதிவு உலக சுற்றும் மேதை ...

பதிவர்
சாதா பதிவர் ..(லைக் மீ )
பிரபல பதிவர் ....
அணைத்து பதிவருக்கும்
தெரிந்த ஒரே பதிவர்
இவங்க மட்டும்....

போகாத நாடு இல்லை
போடாத கமெண்டும் இல்லை
வெட்டி பேச்சில
விவரம் சொல்றவங்க
இவங்கதான்...

டிஸ்கி : தகவல் உபயம் reva
அட இன்னைக்கு பார்த்து வார்த்தைகள் எல்லாம் லீவ் விட்டு போயிட்டு
அதனால கவிதை எல்லாம் எழுத முடியல
இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்டு
வாழ்த்தி வணங்குகிறேன் ...
இல்லாத இறைவனையும் வேண்டுகிறேன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
அனைத்து நலன்களையும்
எப்பொதும் அளித்திட வேண்டுகிறேன்.....!!!



வாழ்த்து கவிதை எழுதியவர்
கவிதை உபயம் reva


கொஞ்சம் கொஞ்சும் வாழ்த்து.....

பூமிக்கு வந்த வான் நிலவே....
தேய்பிறைக் காண
எங்கள் முழுநிலவே...

(இன்னைக்கு தேர்தல் ரிசல்ட் வேற அதான் ஒரு ப்லோல...ஹி ஹி )

நாணம் குடைபிடிக்க,
பனித்துளி உன் வெட்கம்
நிறைக்க
இன்று பூத்த மலருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கொஞ்சும் உன் முதல் பேச்சை,
கொஞ்சம் கேட்டாலே,
சிலாகித்துப் போகும்
பதிவர் கூட்டம்....

இதயமில்லா உலகமிதில்,
இணையத்தில் இணைந்திட்ட
இயக்கமற்ற இதயங்களில்,
நல் இதயம் உண்டென்றால்,
உரக்கச் சொல்வோம்
உன் பெயரையும்....
(எல்லாருக்கும் மாங்கு மாங்குன்னு கமெண்ட் போடுறேங்கள்ள, அந்த நல்லா உள்ளத்த சொல்லுறோம்.. ஹி ஹி....)

அசராத உன் பேச்சை,
அழகான உன் தமிழை,
அன்பான உன் நட்பை,
தெளிவான உன் அறிவை,
உன்னோடு இருந்து
பகிரும் பாக்கியம்
நட்பாய் நாங்கள் பெற்றோம்...

உன்னோடு பால்யக் கதைகள்
பேசி மகிழ்த்ததில்லை.
உன் பதிவினால்
பாசக் கதைகள் கேட்டிருக்கிறோம்....

பறந்த இந்த உலகில்,
சுற்றும் பணத்தின் பயணத்தில்,
பைசா செலவில்லாமல்,
அமெரிக்க தெருக்களில்,
உலா வருகிறோம் உன்னோடு
நட்பின் கரங்கள் பற்றி...

சிறகிழந்த பறவைகளாய்,
சிக்கித்தவிக்கும் சில நேரங்களில்
பறக்க தவிக்கும்
எங்கள் தவிப்பை
தீர்க்க வந்த பதிவுலகில்,
பாசக் கரம் நீட்டும்
எங்கள் நட்பே....

நலங்கள் பல நீ பெற்று,
நயமாய் நீயும்
வாழ்த்திடவே
அன்பென்னும் கடவுளை
அன்போடு வேண்டுகிறோம்...


எங்கள் அன்பு சித்து அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்க பல்லாண்டு.

Friday, May 6, 2011

வழி தெரியாத பயணம்...


கண் முன்னே
கண்ணீராய்
கரையும்
எனது கனவுகள்...!

எதுவரை
தொடரும்
வழி(லி)
தெரியாத
பயணம்...?


காலத்தின்
மாற்றத்தை
முடிந்தால்
விரைந்து
மறக்க
வேண்டுகிறேன் ..

வலி
இருக்கும்
உனது நினைவுகளை
மட்டும்
என்னோடு
வைத்துக்கொண்டு...



தொடர்ந்து
வந்த பாதையில்
காணாமல்
போன வழித்தடங்கள்
ஆனது
வாழ்க்கை...!

கண்முன்னே
கரைந்த
கனவில்
உடைந்து போன
உள்ளத்தில்
யாருக்கும் தெரியாமல்
உள்ளுக்குள்
பீறிட்டு பொங்கிய
அழுகையை
சத்தம் வராமல்
விம்மி அழுதது
யாருக்கு
தெரியப் போகிறது...!

பசி மறந்து
உறக்கம் தொலைந்து
தன்னிலை மறந்து
தவித்த பொழுதில்...!

மறந்து போன
மௌனங்களில்
புலம்பித் தீர்த்த
வார்த்தைகள்
ஊமை ஆகிப் போனது...!

தூக்கத்தில்
துரத்தும்
கனவுகள் கூட
துக்கத்தை
தந்து போகிறது...!

எதுவும் நிலை
இல்லாத உலகில்
இந்த நிமிடம் கூட
எனக்கு சொந்தம்
இல்லையே ...!

இருக்கும்
நிமிடங்களுடன்
உன்னை நினைத்தே
கடந்து செல்கிறது
வாழ்க்கையும்....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...