Tuesday, December 20, 2011

தலைப்பு தெரியாத கவிதைகள்...




கிறுக்கி வைக்கிறேன்

வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...


மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்.


உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.


கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு!

தினம் தினம்
மழை வரும் நேரம்
ஏதோ ஏதோ
ஒரு நினைவு
மழையின்
ஒரு ஒரு துளியிலும்!


உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...


டிஸ்கி :

அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
எல்லாரும் சந்தோசமா எப்பொதும் நலமுடன் இருக்க கடவுளிடம்
வேண்டுகிறேன்.



Friday, December 9, 2011

இந்த வார புலம்பல் ...




என்னால முடியல:....(((((


நண்பனுக்கு கல்யாணம் நல்ல விசியம்தான் ...
நிச்சயம் நல்ல விசியம்தான்..
ஆனால் கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையில இடைவெளி விடக்கூடாது
அப்படி விட்டா..அது அது தொலைபேசி கம்பெனிக்குதான் நல்ல விசியம்
கூட இருக்கும் நமக்கு அது ராகு காலம்...

அப்படி யாருக்காவது பிக்ஸ் ஆகிட்டா..அவங்கள நம்ம கூட கூட்டு சேக்க கூடாது..
யார இருந்தாலும் கழட்டி விட்ரனும் ..இவிங்க தொல்ல தாங்க முடியல சாமி
வேலை விட்டு வந்த ஆரம்பித்த போன் அடுத்த நாள் வேலைக்கு போற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காங்க ...அப்படி என்னதான்(.&*&**&^#^#$^%$^%$#...).....:)

ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...

இனி வேற கல்யாணம் ஆகாத நண்பனா கூட்டு சேர்க்க வேண்டியதுதான் ...அவ்வவ்

லைப் இஸ் டு லவ் மச்சி:

ம் என்ன வாழ்க்கைடா சாமின்னு ஒருசில நேரம் வேண்டி வரும்...
ஆனால் இது உண்மைதான் போல் இருக்கு

போராடிக்கொண்டே இருப்பதால்
வாழ்கையின் நேரம் முடிந்து விடுகிறது
அதனால எல்லாரும்
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...

(தத்துவம் சொன்னவர் - சிவா )


இந்த வாரம் மொக்கை :

ரொம்ப யோசிக்காதீங்க சும்மா...
வாழ்க்கை ஒரு அழகான பயணம்
எவ்ளோதூரம் பயணம் அழகா இருக்கும் என்பது நம்ம கைலதான் இருக்கு...
பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.



இந்த வார கவிதை:

ம்
யோசித்து பார்க்கிறேன்
ஒரு வரிகூட
வர வில்லை
கவிதையாய்
அதனால்
எழுதிய
பேப்பரை கசக்கி
எறிந்தேன் ...

குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்து "

அடடே ...
நமக்கும் கவிதை
வந்துட்டே ...:


(யாரும் அடிக்க கூடாது சிவா பாவம் )

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...