Friday, October 22, 2010

வாடிக்கை...!!!




எங்கே போனது இந்த மனித நேயம் எல்லாம் நேற்று வாங்கின "அறை" கனத்தில எல்லாம் வறண்டு போயிட்டு...

இந்த வாசிங் மிசின் கூட இப்போ வர வர மனசாட்சியே இல்லாம இருக்கு...
வாசிங் மிசின் கட புடனு சத்தம் போட்டு துணி மணிகள் எல்லாம் என்னைய தூக்கி கம்பியில காயபோடுனு சத்தம் கொடுத்து நின்றது..

எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெயிலில் காயபோட போனால் அங்கே
பாழாய் போன மேகம் சூரியனை மறைத்துக்கொண்டு நிக்குது,சரி அடிக்கிற காத்திலவது காயும் நினைச்சு காயபோட்ட அப்போதான் ஊரில இருக்கிற புழுதி மண்ணை எல்லாம் காத்து பத்திரிக்கை வைத்து அழைத்துக்கொண்டு வருது.. !என்ன பண்ண எல்லாம் என்னோட நேரம்..!!

அப்பறம் ஒருவழியா கிளிப் மாட்டி ,விடு விடு என சமையல் அறைக்குள் நுழைகிறேன் ,ஏதோ ரசம்,எத்தன வேகமா சமையல் முடிக்க ரசம் வைக்கலாம் சரி என்று எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு காஸ் அடுப்பை பத்த வைத்தல் காஸ் இல்லை..ஹயோ நேரம் வேற ஆகிட்டே இருக்கே..இன்னைக்கும் நல்ல திட்டு வாங்க போறேன்.கூட அடியும் விழுமேனு "நினைத்தப்ப அப்பாவை
திட்டி தீர்த்தேன் நல்ல இடமாம் நல்ல இடம்.. எல்லாம் சுத்த பொய்...

என்னைய காசு கொடுக்காத வேலை ஆளா வைத்து போயட்டங்கலேபொலம்பிகிட்டு இருந்தேன்.அப்புறம் காஸ் போன் பண்ணி அது வந்து ஒரு வழிய மிளகு ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் பண்ணியாச்சு..

அப்போதுதான் வாசனையை மோப்பம் பிடித்துகொண்டே என்ன உருளை கிழங்கு வறுவல் போல பக்கத்துவீட்டு பாட்டி உள்ளே சவுண்ட் விட்டுகிட்டே வந்துச்சு,அந்த பாட்டிக்கு பல்லு மட்டும் இல்லை,ஆனால் வாய திறந்தால் போதும் ஊரு கதை எல்லாம் நாறு நார கிழிக்கும்..அப்படி இருந்த கூட பரவல,நா அது பேசறதுக்கு எல்லாம் ஆமம் சாமி போடணும்.

வந்தா சும்மா இருக்குமா,இருக்காது அங்க என்ன இருக்கு எங்க என்ன இருக்கு கேட்டு உயிரை வாங்கிரும்...

அப்பறம் என்ன அதுக்கு ஒரு காபி போட்டு கொடுத்து அனுப்பிவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.சே என்ன வாழ்க்கை..ஒரு பீச் உண்டா ஒரு திருவிழா உண்டா,தினமும் இந்த வீடே கதியா வாழ வேண்டிருக்கு..

"என்னபண்ண எல்லாருக்கும் எல்லாம் அமையுமா?..இப்போ யேசித்து என்ன பயன்!!!!?"

பிறகு ஒரு முக்கியமான வேலை மறந்துவிட்டேன் "இந்த மகி அக்கா (http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_19.html)ப்ளாக்ல போட்ட வெந்தய தோசைக்கு ஊற வைத்தது நினைவுக்கு வந்தது."ஓடிபோய் கிரைண்டேற ஓடவிட்டு ஒரு வழிய மாவும் அரைத்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் அது ஐந்து முப்பது.
அவரசம் அவசரமாய் வீடு பெருக்கி ஒன்டவைது ஒதுங்க வைத்து அப்பா அப்பா எவ்ளோ வேலை,எவ்ளோ வேலை..

இப்போதான் அம்மா பட்ட கஷ்டம் மனசுக்கு வந்துச்சு.. அம்மாவும் இப்படிதான கஷ்டப்பட்டு இருப்பாங்கனு தோன்றியது.அம்மாவை பாக்கனும்போல இருந்துச்சு..என்ன இருந்தாலும் தனிய இருந்தால் இப்படித்தான் கஷ்டபடனும்.மாமனார் மாமியார் இருந்தா எவ்ளோ ஒத்தாசைய இருக்கும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டேன்..!

அப்போது வீட்டுக்கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது..ஒரு வழிய அடுத்த திட்டு வாங்க என்னை ஆயத்த படுத்திகொண்டு இருந்தேன்.

"எப்படி சமைத்தாலும் என் மனைவிஎன்னை திட்டாமல் போக போவது இல்லை....!!!!

பின்குறிப்பு: (சும்மா ஒரு கற்பனை...)
ஒரு குட்டி கமெடி (எங்கோ ரசித்தது)
என் மனைவி வேகமா ஓடிவந்து ஒரு விசியம் சொன்னாள் ." நமக்கு ஜோசியம் பார்த்த ஜோசியர் செத்து போய்ட்டாராம் ..பிறகு அப்படியானு கேட்டுவிட்டு...(பின்ன பண்ண பாவம் எல்லாம் சும்மா விடுமானு மனசுக்குள் முனுமுனுத்தேன் )

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...