Wednesday, September 21, 2011

குட்டிவாசகம்...




குட்டிவாசகம்:

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது
இருந்தாலும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையில்
அன்பான நட்பின் ஆதரவோடு உண்மையான நட்பின் பாசத்தோடு
சந்தோசமாய் வாழ்வோம்..

இருக்கும்
வரையிலும்
மற்றவரை
சந்தோஷப்படுத்தி
வாழ்வோம்.

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.

எவ்வளவு நாள் இருப்போம் யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை யாரையும் புறம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஓகே போதும் போதும்......

இப்போ ஒரு
குட்டிக் கிறுக்கல்...

என்னவளின்
சாயம் பூசா
இதழ்
பார்த்து
தாமரை

பிரம்மனிடம்
சண்டை இட்டது!

அவள் இதழ்
என்னைவிட
அழகாய் இருக்க
காரணம்
என்னவென்று?..


சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!

அதில்
தவிக்க
வைத்த
நிமிடத்தையும்
சேர்த்து ...!


டிஸ்கி:

இன்று உடன் பிறவா (SIS + FRIEND )தோழிக்கு பிறந்த நாள்
எப்போதும் போல வெற்றிக்கரமாக
முதல் வாழ்த்து சொல்லி வாழ்த்திவிட்டேன்.
இன்று மட்டும் அல்ல எப்போதும் நலமாய் வாழ நீங்களும் வாழ்த்துங்கள்
(முதல் வடை போல முதல் வாழ்த்து சொல்றதுகூட ஒரு சந்தோசம்தாங்க..)
ஹாப்பி பர்த்டே பேபி)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...