Wednesday, March 14, 2012

சந்தோசமாக...!

பகிர படாத
உணர்வுகளை
எல்லாம்
என் மௌனங்களின் மூலம்
தெரியப்படுத்த
விரும்புகிறேன்..

எப்பொதும்
மௌனமாய் இருக்கும் நீ
என்றாவது ஒரு நாள்
புரிந்துகொள்வாய் என
பத்திரமாய்
வைத்து இருக்கிறேன்...!

தினம் தினம்
பேசும் வார்த்தைகள்
எல்லாம்

நிமிடமாய்
கரைந்து
போனாலும்

மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...

என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்.....!

மறுக்கப்பட்ட
விடுதலை போல
சிறைப்பட்டேன்
உந்தன்
பார்வையில்....!

இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...

இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.

Wednesday, March 7, 2012

மழை!!!

உன் இரு
விழிகளும்
மழைத்துளியில்
விளையாடும்
கன நேரம்
கரைந்து
போகிறேன்!



மழையில்
விழாத
உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!




மெல்லிய
சாரலில்
வானவில்லாய்
உன் புன்னகை!

இடி
மின்னலாய்
கோவப்பார்வை!



குடை
இருந்தும்
நனைந்து
நான்!

எப்போது முடியும்
இந்த
மழை!!!

Monday, March 5, 2012

பார்வை....

உன்னைத்
தொடர்ந்த நாட்கள்..
அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை
அதை நானும்
எதிர்பார்க்கவில்லை!!!


ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக
உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

ஒரு முறைப்பா
இல்லை அழைப்பா
எனக்குத் தெரியாது
ஆனால்
பிடிக்கும்..!!!

உந்தன்
பார்வையின்
நிழலையும்
தொட்டது
இல்லை நான்..!

பேச நினைக்கும்
நேரத்தில்
விலகிப் போனாய்,

யாரும் நம்மைப் பற்றி
பேசிவிடக் கூடாது
என்பதற்காக

எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!

DISKI:)
எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை
கோடி நன்றிகள் இமா டீச்சர் :)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...