Friday, December 31, 2010

இதயம் இடம் மாற்றி ....



முயற்சி
எல்லாம்
முடிந்தே
போனது!

கற்பனை
எல்லாம்
கனவாய்
மாறியது!

மனமும்
தொலைந்து
மௌனம்
தொடர்கிறது..!

இதயம்
அழுது
கண்களில்
கண்ணீர்
கரைகிறது!

வார்த்தை
வற்றி
கவிதை
மறந்தது!

மெய்யும்
பொய்யும்
ஒன்றாய்
ஆனது!



மிக தூரமாய்
என் அருகில்
இல்லாத
காரணத்தால்
உன் இதயம்
தொடுவது
சிரமம்
என்று...

எந்தன்
இதயம் இடம் மாற்றி
உந்தன்
இதயம் அருகில் வைத்துவிட்டேன்
மிக பத்திரமாய்
இருக்கும் என்ற நம்பிக்கையில்...



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்



Wednesday, December 29, 2010

இன்று ஒரு தகவல்....

பிஸ்கி: யாரையும் புண்படுத்த இந்த பதிவு இல்லை
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது எல்லாம் தெரிந்தவங்களும் கிடையாது எல்லாம் படம் அவ்ளோதான் ....
பிடிச்ச வாசியுங்க பிடிக்கலையா போய்கிட்டே இருங்க.



"கைக்கூ"

மரக்கட்டை


இறந்தது
மனிதன்தானே
என்னையும் ஏன்
கூட புதைக்கிறாய்
என்றது
சவப்பெட்டி..!

நீதி:
அதனா பட்டதாவது வாழப்போறது கொஞ்சம் நாள்தான் நீதான் இருந்தும் உருப்பிடாம போய்விட்ட.. இறந்தும் வாழும் என்னை ஏன் இம்சை பண்ற அப்படின்னு மரக்கட்டை சொல்லியது.!


போதனை :
முடிந்தால் உடல் தானம் பண்ணுங்கள் ....


நன்றி: இதுவரை எனது மொக்கை பதிவுகளும் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கும் எனது தமிழ்ப்பிழைகளையும்
பொறுத்து அருள்மாறு கேட்டுகொள்கிறோம். ஒரு சில பதிவுகளில் தங்க்லீஷ் கமெண்ட் போட்டு இருப்பேன் அதற்கும் மன்னிக்கவும்..

பதிவு எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரிய வில்லை தெரிந்தால் சொல்லி தரவும் கற்றுக்கொள்கிறேன்..தெரிந்தால் அது பற்றி ஒரு தொடர்ப்பதிவு எழுதவும்...

கடைசியா ஒரு கவிதை சொல்லாட்டி
பதிவு முற்று பெறாது..

தவறு செய்பவன் மனிதன்
தவறை திருத்திக்கொள்பவன்
மாமனிதன்...

மறக்க மட்டும்
மூளை வேண்டாம்
மன்னிக்கவும்
இதயம் வேண்டும்

தனிமனிதன்
உலகம் இல்லை
சகாக்கள்
இல்லாமல்
எனது உலகமும்
இல்லை
''அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை.''

நன்றி
வணக்கம்
உங்கள் வீட்டுப்பிள்ளை
சிவா

Sunday, December 26, 2010

எனக்கும் பிடித்த ஒரு சில பாடல்கள்


முஸ்கி:தொடர் பதிவுக்கு அழைத்த சகோ மதிக்கு நன்றி

எனக்கும் பிடித்த ஒரு சில பாடல்கள்



1.படம்: தளபதி

இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி
(இந்த பாடல் மிக பிடிக்கும்
(அதில் வரும் சுருதி...தாளம் எல்லாம் மிக நன்றாக இருக்கும் )


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

பாடல் - 2.திருமலை
இசை: ?
பாடியவர்: ?




நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

பாடல் : 3
படம் : ரட்சகன்




கனவா... இல்லை காற்றா...
கனவா... நீ.. காற்றா...
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே...
இந்திரா லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

(கையில்...)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி... (-- twice)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது... (-- twice)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் மற்றொரு பூ விழுந்தாள்
என்னால் தாங்க முடியாது

(கையில்...).

பாடல் : 4
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து



தகிட ததிமி தகிட ததிமி தம்தானா

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)

பாடல் : 5
படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா
பாடல்:- நா.முத்துக்குமார்



நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

பாடல் : 6
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு



காதல் வந்தால் சொல்லி அனுப்பு...

Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
(காதல்..)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
(காதல்..)
என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
(காதல்..)
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு


பாடல் : 7
படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்




டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட


பாடல் : 8
படம்: ராவணன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்:வைரமுத்து
பாடியவர்: ஸ்ரேயா கோஷால்



கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகிறதே


(கள்வரே கள்வரே)



பாடல் : 9
படம் - தீனா
பாடல் - சொல்லாமல் தொட்டுச்..
.


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
..



பாடல் :10
படம் - துள்ளாத மனமும் துள்ளும்
வரிகள் - வைரமுத்து
குரல் - உன்னி கிருஷ்ணன்
இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்




இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

பிஸ்கி:
(உங்களுக்கு பிடித்த ஒரு பாடல் சொல்லுங்க)
நன்றி
வணக்கம்.

Friday, December 24, 2010

Employed in Foreign...

முஸ்கி : நான் வாசித்த ஒரு மெயிலில் வந்த கவிதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தூக்கம் விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
" கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

" இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

Wednesday, December 22, 2010

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...!




அனைவருக்கும்
பதிவு உலக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்
எனது அன்பான
இனிய கிறிஸ்மஸ்
மற்றும்
ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
மேரி கிறிஸ்மஸ்
மேரி கிறிஸ்மஸ்
மேரி கிறிஸ்மஸ் ....

நன்றி.

இப்படிக்கு
நட்புடன்
சிவா

Saturday, December 18, 2010

கடலை போடறது....(கடலை.)..!



முஸ்கி:

நாம இப்போ பார்க்க போற விசியம் கடலை போடறது பத்தி இல்லை...கடலை பத்தி..அதாவது நிலக்கடலை..வேர்க்கடலை...
உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விசயம் இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்ட என்ன என்று யோசிக்கும்போது .....

எங்கயோ வாசித்த சில தகவல்கள் :


கடலை என்பது மிகவும் உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகச் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும்..

[B]கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
[/B] வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி 3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப்பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிடவேண்டும்.


கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? உடலுக்குக் கெடுதி இல்லையா? தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.

இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட
கொழுப்புகள் உருவாகிவிடும். கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய் களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண் ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

[B]வேர்க்கடலை எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்? [/B]

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு.

வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது.

அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

[B]சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவா?[/B]

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.

எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.


[B]வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன? [/B]

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.

எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக் காது; குறையும்.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடு வதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.

அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்து விடுகின்றன. நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.


ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு விடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.


[B]வேர்க்கடலை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? [/B] ..அதாவது உங்க இஷ்டத்துக்கு சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது அடுத்த நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வரும்...நாம மேட்டருக்கு வருவோம்..

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடு வதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது.

மிக்க நன்றி பொறுமையுடன் வாசித்தமைக்கு



கடலை போடறதுக்கு பதிலா கடலை சாப்பிடலாமே அப்படி யாரவது நினைத்தால் உங்கள் வாழ்க்கை அமோகம் ஆகும்."ஏதனும் தவறுகள் இருப்பினும் பொறுத்து கமெண்டில் அருள்க"

Wednesday, December 15, 2010

நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லலாம் !!!




நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லலாம் .....

வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...


பதிவுலகில்
அமைதியாய்
ஆர்ப்பாட்டம்
இல்லாமல்
தேவதை பத்திரிக்கையில்
வலம் வந்துள்ள
தோழி ப்ரியாவிற்கு (http://enmanadhilirundhu.blogspot.com/)



இன்னும் பல பரிசுகளும்
விருதுகளும் பெற்று
உங்கள் வாழ்க்கை பயணமும்
பதிவுலகம் பயணமும்
சிறக்க
வாழ்த்து
தெரிவித்துக்கொள்கிறோம்

இப்படிக்கு
உங்கள்
வாசகர்களில் ஒரு வாசகன்.

Tuesday, December 14, 2010

சுத்துதே பூமி ...

முஸ்கி:)
எந்த பாடலை விரும்பி கேட்டவர்கள்
அண்ணன் மொக்கை செல்வா
மெகா கவி பாண்டியன் (டேர்றோர்)
அப்புறம் என் ப்ளாக் பக்கம் வரும் அனைவரும் விரும்பி கேட்கின்றனர் .....


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே


பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி



ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்..

Saturday, December 11, 2010

சமைத்து தான் பாருங்க....

நான் எப்போ சமைக்க ஆரம்பித்தேன்னு கேட்க கூடாது....
அதனால
சகோவும் தோழியும் ஆகிய
ஒருவர் எழுதிய டிப்ஸ்...


சமைத்து தான் பாருங்க..(read two times)
http://mathisree.blogspot.com/2010/12/blog-post_10.html

(செல்வா உங்களுக்கு நன்றி உங்களை போல நானும் ஒரு சின்னதா போஸ்ட் போட்டுவிட்டேன் எப்புடி)

சமையல் சரியாய் வந்தா என்னை பாராட்டுங்க..

இல்லை என்றல் டிப்ஸ் கொடுத்தவங்களை பாரட்டுங்க..

நன்றி
வணக்கம்...

Monday, December 6, 2010

மனதைத் தொட்ட வரிகள் !!!

முஸ்கி :-

அன்பர்களே...
நண்பர்களே....
நிறைய எழுத யோசித்து ஒன்றுமே தோன்றவில்லை
அதனால் எங்கோ படித்த வாசித்த ஒரு சில வரிகளை பகிர்ந்து கொண்டு (ஒரு போஸ்ட் போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு..)
இதே போல உங்களுக்கு பிடித்த வரிகளை விட்டு சொல்லுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்..

ஓகே ஸ்டார்ட் மியூசிக்..

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


மீண்டும் வருவேன் விரைவில்...
இப்படிக்கு
உங்கள் வீட்டுப்பிள்ளை சிவா

Saturday, November 20, 2010

அன்புள்ள தோழிக்கு...

'அவசியம் கலந்து கொள்ள வேண்டும்,' என்று அவர்களிடம் எனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுத் திரும்பி வரும்போது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. காலம் பின்னோக்கி நகர்ந்தது. கடந்த காலத்தின் நிமிடங்களை நானும் புரட்டிப் பார்க்கின்றேன் ...

எத்தனை கனவுகள்! எல்லாம் காலத்தின் போக்கில், சூழ்நிலையின் சுழலில்
சிக்கிக் கலைந்து போனது.. அழாத நாட்களும் சந்தோசம் குறையாத நாட்களும் நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன.. காலம்தான் எத்தனை வேகமாய் மாறுகிறது.. இல்லை மனிதர்கள் இல்லை.. மனம் காலத்தை விட மிக வேகமாய் மாறியதை உணர்ந்தேன்..





பல முறை உன்னை சந்தித்து இருக்கிறேன் எதுவும் தோன்றவில்லை ஒரு முறை நீ விடுமுறையில் சென்றபோது நானும் ஒரு சராசரியாய் உணர்ந்தேன் ஒரு உறவின் பிரிவின் வலியை.மறுக்கவும் மறைக்கும் முடியவில்லை.!

விடுமுறை முடிந்து அவர்கள் வீட்டில் செய்த அச்சு முறுக்கையும் அதிரசத்தையும் எனக்க எடுத்து வந்து கொடுத்தபோது என்னை பற்றி நினைக்க கூட ஒருவர் இருக்கிறாங்க நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

விடுமுறை முடிந்து உன் வீட்டில் செய்த அச்சுமுறுக்கையும் அதிரசத்தையும் எனக்காக எடுத்து வந்து கொடுத்தபோது என்னைப் பற்றி நினைக்கக் கூட ஒருவர் இருக்கிறாங்க என்று நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு தலைவலி வந்தது உண்டு. என்னைப் போலவே பலரும் இருந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். சின்னச் சின்னப் பொய்களும் எனக்கு பிடித்துப் போன நாட்கள்.

இன்னும் ஒரு முறை ஒரு கேள்வி என்னிடம்....
பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்... "அடுத்த பிறவி பிறந்தால் நீ என்னவாகப் பிறக்க நினைக்கிறாய்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் மறுத்து
ஒரு மௌனப் புன்னகை தாமரை மொட்டு போல உதிர்த்துவிட்டுச் சென்றது இன்னமும் மனதில் வாடாமல் இருக்கிறது.

இப்படி எளிதாய்க் கேட்கும் பல கேள்விகளுக்கான விடைகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாய்க் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும், "அதி புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது," என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்துச் செல்லும் நாட்களை இனி எங்கே தேடுவேன்..

தினமும் பேசின வார்த்தைகள் நினைவில் இல்லை.
திட்டிய ஆராதனைகள் அறவே மறந்து விட்டது....

சூழ்நிலையின் சந்தர்ப்பத்தால் நீ என்னை விட்டுச் சென்ற நிமிடம் தவிர ஏதும் நினைவில் இல்லை...அதைவிடப் பெரிய தண்டனை... அந்த நிமிடம் போல கொடுமையான நிமிடமும் இல்லை...அதுபோல நாட்கள் எதுவும் இல்லை...


பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.

எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது...

இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்...




Friday, October 22, 2010

வாடிக்கை...!!!




எங்கே போனது இந்த மனித நேயம் எல்லாம் நேற்று வாங்கின "அறை" கனத்தில எல்லாம் வறண்டு போயிட்டு...

இந்த வாசிங் மிசின் கூட இப்போ வர வர மனசாட்சியே இல்லாம இருக்கு...
வாசிங் மிசின் கட புடனு சத்தம் போட்டு துணி மணிகள் எல்லாம் என்னைய தூக்கி கம்பியில காயபோடுனு சத்தம் கொடுத்து நின்றது..

எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெயிலில் காயபோட போனால் அங்கே
பாழாய் போன மேகம் சூரியனை மறைத்துக்கொண்டு நிக்குது,சரி அடிக்கிற காத்திலவது காயும் நினைச்சு காயபோட்ட அப்போதான் ஊரில இருக்கிற புழுதி மண்ணை எல்லாம் காத்து பத்திரிக்கை வைத்து அழைத்துக்கொண்டு வருது.. !என்ன பண்ண எல்லாம் என்னோட நேரம்..!!

அப்பறம் ஒருவழியா கிளிப் மாட்டி ,விடு விடு என சமையல் அறைக்குள் நுழைகிறேன் ,ஏதோ ரசம்,எத்தன வேகமா சமையல் முடிக்க ரசம் வைக்கலாம் சரி என்று எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு காஸ் அடுப்பை பத்த வைத்தல் காஸ் இல்லை..ஹயோ நேரம் வேற ஆகிட்டே இருக்கே..இன்னைக்கும் நல்ல திட்டு வாங்க போறேன்.கூட அடியும் விழுமேனு "நினைத்தப்ப அப்பாவை
திட்டி தீர்த்தேன் நல்ல இடமாம் நல்ல இடம்.. எல்லாம் சுத்த பொய்...

என்னைய காசு கொடுக்காத வேலை ஆளா வைத்து போயட்டங்கலேபொலம்பிகிட்டு இருந்தேன்.அப்புறம் காஸ் போன் பண்ணி அது வந்து ஒரு வழிய மிளகு ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் பண்ணியாச்சு..

அப்போதுதான் வாசனையை மோப்பம் பிடித்துகொண்டே என்ன உருளை கிழங்கு வறுவல் போல பக்கத்துவீட்டு பாட்டி உள்ளே சவுண்ட் விட்டுகிட்டே வந்துச்சு,அந்த பாட்டிக்கு பல்லு மட்டும் இல்லை,ஆனால் வாய திறந்தால் போதும் ஊரு கதை எல்லாம் நாறு நார கிழிக்கும்..அப்படி இருந்த கூட பரவல,நா அது பேசறதுக்கு எல்லாம் ஆமம் சாமி போடணும்.

வந்தா சும்மா இருக்குமா,இருக்காது அங்க என்ன இருக்கு எங்க என்ன இருக்கு கேட்டு உயிரை வாங்கிரும்...

அப்பறம் என்ன அதுக்கு ஒரு காபி போட்டு கொடுத்து அனுப்பிவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.சே என்ன வாழ்க்கை..ஒரு பீச் உண்டா ஒரு திருவிழா உண்டா,தினமும் இந்த வீடே கதியா வாழ வேண்டிருக்கு..

"என்னபண்ண எல்லாருக்கும் எல்லாம் அமையுமா?..இப்போ யேசித்து என்ன பயன்!!!!?"

பிறகு ஒரு முக்கியமான வேலை மறந்துவிட்டேன் "இந்த மகி அக்கா (http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_19.html)ப்ளாக்ல போட்ட வெந்தய தோசைக்கு ஊற வைத்தது நினைவுக்கு வந்தது."ஓடிபோய் கிரைண்டேற ஓடவிட்டு ஒரு வழிய மாவும் அரைத்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் அது ஐந்து முப்பது.
அவரசம் அவசரமாய் வீடு பெருக்கி ஒன்டவைது ஒதுங்க வைத்து அப்பா அப்பா எவ்ளோ வேலை,எவ்ளோ வேலை..

இப்போதான் அம்மா பட்ட கஷ்டம் மனசுக்கு வந்துச்சு.. அம்மாவும் இப்படிதான கஷ்டப்பட்டு இருப்பாங்கனு தோன்றியது.அம்மாவை பாக்கனும்போல இருந்துச்சு..என்ன இருந்தாலும் தனிய இருந்தால் இப்படித்தான் கஷ்டபடனும்.மாமனார் மாமியார் இருந்தா எவ்ளோ ஒத்தாசைய இருக்கும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டேன்..!

அப்போது வீட்டுக்கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது..ஒரு வழிய அடுத்த திட்டு வாங்க என்னை ஆயத்த படுத்திகொண்டு இருந்தேன்.

"எப்படி சமைத்தாலும் என் மனைவிஎன்னை திட்டாமல் போக போவது இல்லை....!!!!

பின்குறிப்பு: (சும்மா ஒரு கற்பனை...)
ஒரு குட்டி கமெடி (எங்கோ ரசித்தது)
என் மனைவி வேகமா ஓடிவந்து ஒரு விசியம் சொன்னாள் ." நமக்கு ஜோசியம் பார்த்த ஜோசியர் செத்து போய்ட்டாராம் ..பிறகு அப்படியானு கேட்டுவிட்டு...(பின்ன பண்ண பாவம் எல்லாம் சும்மா விடுமானு மனசுக்குள் முனுமுனுத்தேன் )

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...