Wednesday, January 11, 2012

பொங்கல் வாழ்த்துக்கள் ...

அனைவருக்கும்

வணக்கம்(/\)
வணக்கம்(/\)
வணக்கம்(/\)


அன்பான தைத்திருநாள் வாழ்த்துக்கள்.



கடந்த வருடம் ரொம்ப
கடினமான நிமிடங்களும் சந்தோசமான தருணங்களும் கலந்து
அழகாய்க் கடந்து போனது.

அன்பே உருவான பாசமான பதிவு உலக உறவுகள்... மற்றும் கிடைத்த நட்புக்கும் நட்பின் பாசத்துக்கும் அனைத்துக்கும்



இறைக்கு நன்றி. (தேங்க்ஸ் பிள்ளையாரப்பா)

பொங்கல் எங்கே வைத்தாலும் பொங்கல் பொங்கல்தான்..
அதனால் எங்கே இருந்தாலும் பொங்கல் வைத்து
கொண்டாடுங்க.

பொங்கலுக்கு ஊருக்குப் போறேன்... .
ஊரில் விளம்பர தட்டி எல்லாம் கட்டி வரவேற்பு பலமாய் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ம்... ரொம்ப வருஷம் கழிச்சு அம்மா, அப்பா, தம்பிங்க எல்லோரும்ம் சேர்ந்து கொண்டாடப் போகிறோம். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம்... திரும்பி வரப்ப ஒரு கஷ்டம் வரும் அதை நினைத்தால் போக விரும்பவில்லை.போகாமல் இருந்தால் இன்னும் வருத்தம் வரும்.

போக வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் இருந்து திரும்பத் திரும்ப அழைப்பு, மறுக்க முடியவில்லை. அதனால் இங்கு உள்ள வேலைகள் எல்லாம் வேகவேகமா முடித்து வேறு ஒரு நண்பரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன், ஒரு பதினைந்து நாள்... இல்லை இருபது நாட்கள் இருப்பேன்.

பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க வந்துவிடுவேன்
வீட்டில் நெட் வசதி இல்லை..நெட் செல்வது கடினம் தான்
ஊரில் இருக்கும் அத்தனை நாளும் நெட் பக்கம் போகமாட்டேன் விடுமுறை விட்டாச்சு......

பிறகு வீட்டில் அம்மாவுக்கு அப்பாவுக்கு தம்பிக்கு எல்லாம் எனக்கு தெரிந்த சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். (என்னை சமைக்க விடமாட்டார்கள் என்று தெரியும். கடந்த முறை சாதம் வைத்ததில் அடிப்பிடித்து ஒரு பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிட வேண்டிய தகவல்.) இந்த முறை அப்படி ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுவேன். :)

சிவன் கோவில், பெருமாள் கோவில் எல்லாம் போகணும். அங்கே பொங்கல் சாப்பிடணும். (பிரதோஷம் அன்று தயிர்சாதம் புளியோதரை அருமையாய் இருக்கும்.)

சைக்கிள் எடுத்து ஊர் எல்லாம் சுத்தி வரணும். அத்தை பொண்ணு பொன்னிக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல, விசாரிக்கணும். :)



டிஸ்கி 1:


பிறந்த நாள் வாழ்த்து

வாழ்த்த வயதில்லை இருந்தாலும்
வணங்கி மகிழ்கிறோம்

இவர் பற்றி...

கற்பனையின்
வடிவம்
காகிதமாய் இருந்தாலும்
கண்ணாடி
உடைந்தும் போனாலும்
உருவம் கொடுக்கும்
பிரம்மா.

கண்டிப்பில்
கனிவான
வாத்தியார்
வளர்ந்தும் வளர்ச்சி அடையாத குழந்தைகளுக்கு
அன்பாய் சொல்லி தரும்
அன்னை தெரசா!

ஆமை முதல் பட்டம் பூச்சி வரை இவர் வீட்டில் இடம் உண்டு...

நாளை 13.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு அனைத்து உலக தலைவர்களும்,பதிவு உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர் ..

நானும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்


HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

நம்ம வீட்டுக்கு வந்தால் நல்லா சாப்பிட்டுதான் போகணும்
வாங்க வாங்க சாப்பிட்டு விட்டு வாழ்த்திட்டு போங்க..


மொய்ப்பணம் பேபி அதிரா வீட்டில் பிடிக்க படுகிறது:)


டிஸ்கி 2:
பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறோம்
இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு அனைவரையும் சந்தோஷ படுத்த விரும்புகிறோம்

சும்மா 1....

வாழும் வாழ்க்கை
கடினமாத்தான் இருக்கு
ஆனால் பிடித்து இருக்கிறது.
வாழ்ந்துதான் பார்ப்போமே .
என்னவள் இருக்கிறாள்
என்ற நம்பிக்கையில்..

சும்மா 2....

நாளை நம்பிக்கை மட்டுமே.
இன்று, இந்த நிமிடம்
மட்டும் நிஜம்.
அதனால்
சந்தோசமாய்
அமைதியாய்
இருக்கும் வாழ்வை வாழ்ந்து,
நன்றி சொல்லிப் போவோம்
வாழ்வின் அடுத்த படிக்கட்டுக்கு.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...