Monday, May 14, 2012

சின்ன சின்ன நியாபகங்கள்

அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..

ஏழாவது படிக்கும்போது நடந்த ஒரு சின்ன சம்பவம்...

நானு,லவா (குமார்) அவனுக்கு முடி சுருட்டை சுருட்டையா இருக்கும் அதனால அந்த பேரு)
அப்புறம் பாத்திர கடை மகேஷு அப்பறம் ரமேஷ் அப்புறம் கதை மாதவன் நாங்க ஒரு குரூப் பிறகு மாதவன் கதை சொல்லும்ஸ்பெஷலிஸ்ட்.




சமுக அறிவியல் ஆசிரியர் வருவார் வந்து யாரவது ஒரு பையன எழுப்பி விட்டு நீ நாலாம் பாடம் முதலாம் பானிப்பட்டு போர்ல இருந்து படின்னு சொல்லிட்டு தூக்கம் கொள்ள ஆரம்பித்து விடுவார்..திடிரென்று யாரையாவது ஒருவனை எழுப்பி அவனை படிக்கச் சொல்லுவார்,அவர் தூங்கறது யாருக்கும் தெரியா கூடாதாம்.நாங்க மனசுக்குள்ள திட்டுவோம்...மகேஷ் திட்டறதுதான் செம சிரிப்பா இருக்கும்..செம விட்டு அடிச்சுக்கிட்டு இருப்போம்.

அப்புறம் அந்த அதிக சத்தம்போட்டு ஒரு பையன் மைக் இல்லாம படிக்கும் சுகுமார் அவ்வளோ சத்தமா படிப்பான். பயபுள்ள உள்ள மைக் ஏதும் வச்சு இருக்கோணு அவன் படிச்சு முடித்ததும் நாங்க கிண்டல் பண்ணுவோம்.அவன் அவன் கடமையே என்று படிக்க நாங்கள் எங்கள் கடமையை செய்துகொண்டு யாரு கவனிச்சா நாங்க ஒரு பக்கம் அமைதியா பட கதை கேட்டுக்கொண்டு இருப்போம்.

நம்ம கதை மாதவன் விலாவரியா அப்படி இப்படி என்று அழகா சொல்லுவான். அவனுக்கு மதியம் கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தால்தான் மீதி கதை தொடரும் அது வேறு விசியம்



இப்படி இருக்கையில்ல ஒரு நாள் வாத்தியார் எழுந்து அவன் விட்ட இடத்தில இருந்து படின்னு சொல்ல நம்ம லவாகிட்ட சொல்ல அவன் வேற பக்கம் படிக்க ஒரே சிரிப்பு அலை..அப்பறம் நடந்தது என்ன உங்களுக்கு தெரிந்து இருக்குமே.செம திட்டு அடி வேற லாவவுக்கு எங்களுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டு.அதனால நாங்க உடனே மீட்டிங் போட்டு நம்மல்ல ஒருத்தர் யாரும் படிச்சா அதை கவனிக்கணும் என்று கேட்கும்போது இந்த வரி என்று காட்டணும்..அப்பறம் அடி வாங்கறது இல்லை அந்த பொறுப்பு நம்மகிட்ட வந்தாச்சு..

பிறகு பரீட்சை பற்றி இந்த பாடத்தில் நம்ம மகேஷு பதில் எழுதி இருந்தான் பாருங்க அட இப்படி எல்லாம் நாங்க எழுதுவான்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்" என்று எழுதி இருந்தான் ".அடுத்தநாள் பேப்பர் கொடுக்கும்போது வாத்தியார் அதை படித்து காமித்து நாலுபோடு போட்டது வேறு கதை.

இப்போ பார்த்தாலும் என்னடா அப்படித்தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கியான்னு கேட்டு கிண்டல் பண்றது உண்டு.

ஒரு ஒரு நாளும் ஒரு கலாட்டா நடக்கும்,ஊரில உள்ள கதை எல்லாம் திரைக்கதை போல மாதவன் சொல்லுவான் என்னன்னா சொன்ன படத்தோட கதைய திரும்ப வேற கதை கேக்கும்போது அதை மிக்ஸ் பண்ணி சொல்லும்போது பிடிச்சுடுவோம்..டே இந்த கதை நேத்து சொன்ன அப்டின்னு கேட்ட இல்லடா மறந்து போச்சுன்னு சொல்லி அடிவாங்காம தப்பிடுவான்.ஆனால் அவன் இப்போ கதை சொன்னாலும் கேக்கலாம்.



இப்படி பல கதை இருக்கு நேரம் கிடைக்கும்போது சொல்றேன்.ஓகே ஸ்டார்ட் மியூசிக்
இந்த வாரம் அனைவருக்கும் இனிதே தொடரட்டும்.





அன்புடன்
சிவா

படங்கள் உதவி
நன்றி கூகிள்

61 comments:

Mahi said...

//அதாவது ஒரு காலத்தில் இபிகோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..// ???! ஃப்ளாஷ்பேக்-க்குக்கும் ண்டியன் பீனல் கோடுக்கும் என்ன சம்பந்தம் சிவா?! கி.மு. - கி.பி. போடறதுக்கு பதிலா இபிகோ--போட்டுட்டீங்களா?! :))))

Mahi said...

"இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்" என்று எழுதி இருந்தான் ".//// ஹாஹா! ஹாஹா! என்ன ஒரு சின்சியரான ஸ்டூடன்ட்?! :)

நினைத்தாலே இனிக்கும் நல்ல நினைவுகள் சிவா!
உங்களுக்கும் இந்த வாரம் இனிதே துவங்க வாழ்த்துக்கள்!

Unknown said...

வாங்க மகிமா ஒரு டவுட் ஆகிட்டு
நன்றி திருத்தத்துக்கு

Unknown said...

Mahi said...
"இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்" என்று எழுதி இருந்தான் ".//// ஹாஹா! ஹாஹா! என்ன ஒரு சின்சியரான ஸ்டூடன்ட்?! :)

நினைத்தாலே இனிக்கும் நல்ல நினைவுகள் சிவா!
உங்களுக்கும் இந்த வாரம் இனிதே துவங்க வாழ்த்துக்கள்!

May 14, 2012 11:33 AM

நன்றி மகிமா.
வருகைக்கும் வாழ்த்துக்கும்

Anonymous said...

சிவா அங்கிள் சின்ன சின்ன நியாபகமா ....


ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலகுரிங்கள் பொங்க...சூப்பர்

Anonymous said...

சின்ன சின்ன நியாபகம்கங்கள்...///



ரீச்சர் ஓடி வாங்கோ ....தலைப்புலையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...அங்கிள் தலைல குட்டுங்கோ ...

Anonymous said...

அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..
////


ச சா அப்புடிலாம் நாங்கள் போக மாட்டம் அங்கிள் ....

பதினைந்தாம் நூற்றா ண்டில் நடந்த சம்பவம் தானே

MANO நாஞ்சில் மனோ said...

மலரும் நினைவுகள் இனிமையாதான் இருக்கு.....!!! தொடருங்கள்....

இமா க்றிஸ் said...

இ.பி.கோ தெரியும், அதென்ன கி.பி.கோ!! கெ.கி மாதிரி ஏதாச்சுமா??

இதூ... பொன்னியை கெ.கிஸ் மறக்கணும்னு எழுதின போஸ்ட். வீணா டைம் வேஸ்ட் ஆக்காதீங்க சிவா. அதுல்லாம் நாங்க மறக்க மாட்டோம்.

அந்த க்ரூப்ல எது சிவா? சிரிக்காம ஒரு பையன் நிக்கறாங்களே, அவங்கதானே!!

குட்டி சிவா க்யூட்.

அது என்ன வகை பட்டாம்பூச்சி!!!

இன்னமும் ஸ்கூல்ல இருக்கிற மாதிரியே இருக்கு எழுத்து. இப்போதான் தெரியுது சிவா எதனால இப்புடி தப்பு தப்பா டைப்பிங் என்று. ஹ்ம்! குருவும் கூறைப்புடைவையும் அமைப்பு சிவா. ;)))

இமா க்றிஸ் said...

உங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் உங்களைப் போலவே அறிவாளிங்களா இருக்காங்க சிவா. ;))))

முற்றும் அறிந்த அதிரா said...

..தோஓஓஓஒ வந்திட்டேன்.. ஆஆஆ கச்சான் அல்வா போச்சே:)) மகிக்கு கர்ர்ர்ர்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

முதலாவது படத்தில எது சிவா?:)) கண்டு பிடிக்க முடியேல்லை:))

Unknown said...

கலை said...
சிவா அங்கிள் சின்ன சின்ன நியாபகமா ....


ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலகுரிங்கள் பொங்க...சூப்பர்

May 14, 2012 1:32 PM //

வாங்க கலை ஆன்ட்டி
ம் கொஞ்சம் நியாபகம்...

இமா க்றிஸ் said...

அதீஸ்ஸ்... எனக்கு அதில ஒருவர் டொமார் ஆக இருக்கலாமோ எண்டு ஒரு சின்ன சந்தேகம். ;)) எப்பிடியும் ஃபோட்டொ எடுக்கேக்க கொஞ்சம் டீசண்டாத்தானே நிப்பினம்! ;)

Unknown said...

கலை said...
சின்ன சின்ன நியாபகம்கங்கள்...///



ரீச்சர் ஓடி வாங்கோ ....தலைப்புலையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...அங்கிள் தலைல குட்டுங்கோ ...

May 14, 2012 1:34 PM /

நாந்தான் மாற்றி விட்டேனே இப்போ
குட்ட முடியாதே..

Unknown said...

கலை said...
அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..
////


ச சா அப்புடிலாம் நாங்கள் போக மாட்டம் அங்கிள் ....

பதினைந்தாம் நூற்றா ண்டில் நடந்த சம்பவம் தானே

May 14, 2012 1:36 PM //

ushh appaa..what to say...avvv..

Unknown said...

கலை said...
அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..
////


ச சா அப்புடிலாம் நாங்கள் போக மாட்டம் அங்கிள் ....

பதினைந்தாம் நூற்றா ண்டில் நடந்த சம்பவம் தானே

May 14, 2012 1:36 PM //

ushh appaa..what to say...avvv..

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
மலரும் நினைவுகள் இனிமையாதான் இருக்கு.....!!! தொடருங்கள்....

May 14, 2012 1:47 PM /
வாங்க மனோ அண்ணா
ம் ம் தொடர்கிறேன்
நன்றி

Unknown said...

இமா said...
இ.பி.கோ தெரியும், அதென்ன கி.பி.கோ!! கெ.கி மாதிரி ஏதாச்சுமா??

இதூ... பொன்னியை கெ.கிஸ் மறக்கணும்னு எழுதின போஸ்ட். வீணா டைம் வேஸ்ட் ஆக்காதீங்க சிவா. அதுல்லாம் நாங்க மறக்க மாட்டோம்.

அந்த க்ரூப்ல எது சிவா? சிரிக்காம ஒரு பையன் நிக்கறாங்களே, அவங்கதானே!!

குட்டி சிவா க்யூட்.

அது என்ன வகை பட்டாம்பூச்சி!!!

இன்னமும் ஸ்கூல்ல இருக்கிற மாதிரியே இருக்கு எழுத்து. இப்போதான் தெரியுது சிவா எதனால இப்புடி தப்பு தப்பா டைப்பிங் என்று. ஹ்ம்! குருவும் கூறைப்புடைவையும் அமைப்பு சிவா. ;)))

May 14, 2012 3:14 PM //
வாங்க இமா
ம் பொன்னியா அது யாரு?...:)
ம் சிவா அதில இல்லையே...
ம் கூகுளே ஆண்டவரை கேக்கணும்
அது என்ன குரு கூறைப்புடவை அமைப்பு...புதுசு புதுசா சங்கம் ஓபன் பண்றங்கா..அவ்வ
நன்றி.

Unknown said...

இமா said...
உங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் உங்களைப் போலவே அறிவாளிங்களா இருக்காங்க சிவா. ;))))

May 14, ௨௦௧//

நட்பு அப்படி ஹஹஹா
நன்றி

Unknown said...

athira said...
..தோஓஓஓஒ வந்திட்டேன்.. ஆஆஆ கச்சான் அல்வா போச்சே:)) மகிக்கு கர்ர்ர்ர்:)))

May 14, 2012 5:42 PM //

வாங்க பேபி அதிரா ..
அடடா சரி பரவல்ல உங்களுக்கு தனிய அல்வா எடுத்து வைத்து இருக்கிறேன்
பார்சல் வருகிறது :)

Unknown said...

athira said...
முதலாவது படத்தில எது சிவா?:)) கண்டு பிடிக்க முடியேல்லை:))

May 14, 2012 5:43 PM //
சிவா அதில இல்லையாக்கும்
நானு லீவு அன்று:)
நல்ல வேளை
என்னைய கண்டு பிடிக்கல...

Unknown said...

இமா said...
அதீஸ்ஸ்... எனக்கு அதில ஒருவர் டொமார் ஆக இருக்கலாமோ எண்டு ஒரு சின்ன சந்தேகம். ;)) எப்பிடியும் ஃபோட்டொ எடுக்கேக்க கொஞ்சம் டீசண்டாத்தானே நிப்பினம்! ;)

May 14, 2012 5:52 PM //

ஹஹா டொமார் என்றால் என்ன...சிறு குறிப்பு வரைக..
நோ அப்போ போட்டோ எடுக்க எப்படி நிக்கணும் எண்டே தெரியாது

இமா க்றிஸ் said...

டீச்சருக்கே கேள்வித்தாள் செட் பண்ணுறீங்களோ சிவா?
ஹ்ம்! இதோ சிறுகுறிப்பு... http://vanathys.blogspot.co.nz/2010/05/blog-post_07.html

முற்றும் அறிந்த அதிரா said...

எங்கட றீச்சருக்கு இண்டைக்கு விடுமுறைபோல:))).. இந்தப் படத்தில மட்டும்தான் டொமாருக்கு மூக்கால எதுவும் வரேல்லை:)))

முற்றும் அறிந்த அதிரா said...

அந்தநாள் ஞாபகம்... சிவாட நெஞ்சிலே வந்ததே.. பொன்னியே..பொன்னியே..பொன்னியேஏஏஏஏஏஏ:))

முற்றும் அறிந்த அதிரா said...

அதெல்லாம் ஒரு காலம்தான் சிவா... மறக்க முடியாத பசுமை நினைவுகள்.... அழகாக எழுதியிருக்கிறீங்க.. ஆனா அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))

முற்றும் அறிந்த அதிரா said...

// கலை said...
சின்ன சின்ன நியாபகம்கங்கள்...///



ரீச்சர் ஓடி வாங்கோ ....தலைப்புலையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...அங்கிள் தலைல குட்டுங்கோ ...//

சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பிடிக்குமளவுக்கு முன்னேறிட்டா:))))

முற்றும் அறிந்த அதிரா said...

//Siva sankar said...
athira said...
..தோஓஓஓஒ வந்திட்டேன்.. ஆஆஆ கச்சான் அல்வா போச்சே:)) மகிக்கு கர்ர்ர்ர்:)))

May 14, 2012 5:42 PM //

வாங்க பேபி அதிரா ..
அடடா சரி பரவல்ல உங்களுக்கு தனிய அல்வா எடுத்து வைத்து இருக்கிறேன்
பார்சல் வருகிறது :)///

உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))

Angel said...

உங்களுக்கு தனிய அல்வா //

MADE WITH DHANIYA /CORIANDR SEEDS :))))))))))))))

Angel said...

SIVA ....7 C

தொடருங்க சிவா .நல்லா இருக்கு

Angel said...

உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))

முற்றும் அறிந்த அதிரா said...

//angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))////

பொறந்தாப் பொறக்கணும் புள்ளை இவ போல:)) என்னா அன்பு என்னா பாசம்.....

இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பிங் கலரில வேணும்:))

vanathy said...

வயசான (!!!!) பின்னர் பழசை எல்லாம் அசை போடுறது இன்பம் இல்லையா சிவா.
சூப்பரா இருக்கு. நாங்கெல்லாம் படிக்கிற போது நல்ல பிள்ளைகள் ஆக்கும். நோ குழப்படி.

Unknown said...

இமா said...
டீச்சருக்கே கேள்வித்தாள் செட் பண்ணுறீங்களோ சிவா?
ஹ்ம்! இதோ சிறுகுறிப்பு... http://vanathys.blogspot.co.nz/2010/05/blog-post_07.html

May 14, 2012 6:24 PM /
நோ நோ நீங்க கேள்வி எல்லாம் சொல்ல வேணாம் எந்த கேள்வி எல்லாம் வாராது எண்டு மட்டும் சொல்லுங்கோ போதும்
டோமர் செம சிரிப்பு பட் கதை இன்னும் முடியாலலிய் அவ்வ்வ்வ் நன்றி வானதி அக்கா அண்ட் இமா

Unknown said...

athira said...
அந்தநாள் ஞாபகம்... சிவாட நெஞ்சிலே வந்ததே.. பொன்னியே..பொன்னியே..பொன்னியேஏஏஏஏஏஏ:))

May 14, 2012 6:29 PM //

வரலே வரலே வரலே ஹஹஹா

Unknown said...

athira said...
அதெல்லாம் ஒரு காலம்தான் சிவா... மறக்க முடியாத பசுமை நினைவுகள்.... அழகாக எழுதியிருக்கிறீங்க.. ஆனா அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))

May 14, 2012 6:30 PM //

என்னது ஒரு காலாமா அவ்வ ரொம்பா நாள் எல்லாம் ஆக வில்லை :)
நோ நோ ஓவரானா சேட்டை...எது பண்ணினாலும் அப்போ ஒரே விட்டு சிரிப்புதான்
நன்றி பேபி அதிரா

Unknown said...

athira said...
// கலை said...
சின்ன சின்ன நியாபகம்கங்கள்...///



ரீச்சர் ஓடி வாங்கோ ....தலைப்புலையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...அங்கிள் தலைல குட்டுங்கோ ...//

சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பிடிக்குமளவுக்கு முன்னேறிட்டா:))))

May 14, 2012 6:31 PM /

உங்க சிஷ்யை ஆச்சே
ரொம்ப ரொம்ப முன்னேறிட்டாங்க
குட்டு எல்லாம் வேணாம்
சிவா பாவம்

Unknown said...

athira said...
//Siva sankar said...
athira said...
..தோஓஓஓஒ வந்திட்டேன்.. ஆஆஆ கச்சான் அல்வா போச்சே:)) மகிக்கு கர்ர்ர்ர்:)))

May 14, 2012 5:42 PM //

வாங்க பேபி அதிரா ..
அடடா சரி பரவல்ல உங்களுக்கு தனிய அல்வா எடுத்து வைத்து இருக்கிறேன்
பார்சல் வருகிறது :)///

உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))

May 14, 2012 6:32 PM /

ம் தாங்கோ அனுப்புறன்.பிறகு எல்லாம் ரெண்டு ரெண்டு கிலோ அனுப்புறேன்

Unknown said...

angelin said...
உங்களுக்கு தனிய அல்வா //

MADE WITH DHANIYA /CORIANDR SEEDS :))))))))))))))

May 14, 2012 6:49 PM
நோ நோ wheat powder,paatham,pista,piragu all.
hahaha.

Unknown said...

angelin said...
SIVA ....7 C

தொடருங்க சிவா .நல்லா இருக்கு

May 14, 2012 6:51 PM /

வாங்க அஞ்சு அக்கா
நன்றி வருகைக்கு
நேரம் இருப்பின் தொடர்கிறேன்

Unknown said...

angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))

May 14, 2012 6:52 PM /

மிக்க சந்தோசம் அப்பாட
நீங்களே செய்து அனுப்பிடுங்க
அக்கா என்றால் எப்படி அல்லோ இருக்கணும் :)

Unknown said...

athira said...
//angelin said...
உண்மையாவோ? அட்ரஸ் தரட்டோ? எனக்கு கச்சான் அல்வா, எள்ளுருண்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்:)))//

நான் வேணும்னா செய்து தரட்டா அதீஸ் :))))))))////

பொறந்தாப் பொறக்கணும் புள்ளை இவ போல:)) என்னா அன்பு என்னா பாசம்.....

இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பிங் கலரில வேணும்:))

May 14, 2012 7:07 PM /
அட அட
ரெண்டு பேரும் இப்படி பாசத்தை மாறி மாறி பொழிந்து..அவ்வவ்
நானே ரெண்டு பாக்ஸ் அனுபுறேன் பிங்க் ஒன்று BLUE ஒன்று

Unknown said...

vanathy said...
வயசான (!!!!) பின்னர் பழசை எல்லாம் அசை போடுறது இன்பம் இல்லையா சிவா.
சூப்பரா இருக்கு. நாங்கெல்லாம் படிக்கிற போது நல்ல பிள்ளைகள் ஆக்கும். நோ குழப்படி.

May 14, 2012 11:12 PM //

யாருக்கு வாயசானா ...உண்மைதான்
ஓல்ட் இஸ் கோல்ட்
இன் மெமொரீஸ்

வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா
நன்றி வானதி அக்கா

Anonymous said...

அருமையான ஞாபகங்கள் சிவா. பள்ளிகூட நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க. இப்போ ஊருக்கு போகும் போது உங்க டீச்சர் யாரையாச்சும் பார்த்தீங்களா?

நான் போன தடவை ஊருக்கு போய் இருக்கும் போது என் தமிழ் டீச்சர் எ பார்த்தேன். அவங்கள அடையாளம் கண்டு போய் பேசியது அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். இன்னும் வாய் ஓயாம பேசிகிட்டு தான் இருக்காளா ன்னு என் வீ' காரர பார்த்து கேட்டாங்க ;))

Anonymous said...

//வயசான (!!!!) பின்னர் //

யாருக்கு வயசான பின்னர் வான்ஸ் ? இஸ் இட் பூஸ் பை இனி சான்ஸ் ????


//நாங்கெல்லாம் படிக்கிற போது நல்ல பிள்ளைகள் ஆக்கும். நோ குழப்படி// ஓகே நாங்க எல்லாம் நம்பிட்டோம்ம்ம்ம்ம் :)) இன்னிக்கு நைட் கனவுல சாமி கண்ண குத்த போறாங்க வான்ஸ் :))

Anonymous said...

//அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))// எனக்கும் சேம் டவுட்டு


வான்ச மாதிரி பொய் சொல்ல கூடாது சிவா. அக்காங்க கிட்டே உண்மைய சொல்லிடுங்க பார்க்கலாம் :))

Anonymous said...

//சூப்பர்!!!! என் சிஷ்யை இப்போ, பிழைகளைக் கண்டு பிடிக்குமளவுக்கு முன்னேறிட்டா:))))//

ஆனா அவங்க டைப் பண்ணும் போதுதான் ஏகப்பட்ட :)) ஸ்பெல்லிங் மிசுடேக்கு ;;;)) ஐயோ எனக்கும் வாய் கொழுப்ஸ் சாஸ்தியாகிட்டே வருதே ;))

Anonymous said...

//உங்களுக்கு தனிய அல்வா //

MADE WITH DHANIYA /CORIANDR SEEDS :))))))))))))))// வித் சம் கிரீன் அண்ட் ரெட் சில்லி இத விட்டுட்டீங்களே அஞ்சு :))

Anonymous said...

//வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா //

வான்ச பத்தி கரீக்டா சொல்லிட்டீங்க சூப்பர் சிவா :))


மீ 50!!!

Unknown said...

En Samaiyal said...
//வயசு ஆனாலும் குறும்பும் சேட்டையும் அப்படியே இருக்கு வானதி அக்கா ஹஹஹா //

வான்ச பத்தி கரீக்டா சொல்லிட்டீங்க சூப்பர் சிவா :))


மீ 50!!!

May 16, 2012 //

அக்கா எண்டால் எப்படிதான் இருக்கணும்
வந்தோமா நாலு கொளுத்தி போட்டுட்டு போனோமான்னு
அவ்வவ்
நன்றி கிரி அக்கா...

Unknown said...

En Samaiyal said...
//அதில உங்களைப் பற்றி ஏதும் சொல்லல்லியே?:)) ஒருவேளை சிவா ஓவரான :)) நல்ல பிள்ளையோ?:)))// எனக்கும் சேம் டவுட்டு


வான்ச மாதிரி பொய் சொல்ல கூடாது சிவா. அக்காங்க கிட்டே உண்மைய சொல்லிடுங்க பார்க்கலாம் :))

May 16, 2012 12:02 AM //

நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை.
இல்லை..
இல்லை...

பண்றது எல்லாம் செம சேட்டை..

போதும் என்று நினைக்கிறேன்
நன்றி அக்கா

ஜெய்லானி said...

மீ த ஃபஸ்ட் :-))

ஜெய்லானி said...

சின்ன சின்ன ஞாபகங்கள்தான் வாழ்வின் வசந்த காலத்தை நினைவுபடுத்தி நிகழ்காலத்தை சுகமாகவும் சுமையாகவும் மாற்றி விடுகிறது :-)

Unknown said...

@Jailani anna
thank you very much for ur valuable comments.

thank you

இமா க்றிஸ் said...

!! சிவாவுக்கு மட்டும் valuable comments; எனக்கு வலியபிள் comments!!! ஏனிந்த பாரபட்சம் ஜெய்!!! ;)))

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Bibiliobibuli said...

//."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்//

:))))))

Getleman!!

இமா க்றிஸ் said...

சிவா... check this,, ;) http://kaagidhapookal.blogspot.co.nz/2012/06/siva.html

இமா க்றிஸ் said...

//அது என்ன குரு கூறைப்புடவை அமைப்பு...புதுசு புதுசா சங்கம் ஓபன் பண்றங்கா..// சிவசிவா!! ;)))))

// இந்தப் படத்தில மட்டும்தான் டொமாருக்கு மூக்கால எதுவும் வரேல்லை:))) // ;)) அப்ப இதெல்லாம் கவனிக்காமல் விட்டிருக்கிறன். ஹ்ம்!

ஸ்கூல் கூட்டம் போலவேதான் இருந்தம் கெ.கி எல்லாம். இப்ப ஆளுக்கொரு மூலையாச் சிதறிக் கிடக்கிறம். ;( கெதியா திரும்ப வாங்கோ பிள்ளைகள்!!

Angel said...

சிவா :) சீக்கிரம் வாங்க வலைசரத்துக்கு அக்கா எல்லாரையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகிறேன் :)

Thanks D.D

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...