Monday, November 7, 2011

ஞாபகம் ...



தீபாவளிஞாபகம்
தீபாவளி முடிந்து சென்னைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன், பேருந்தில் "பத்திரமா போய்ட்டு வா,போன உடனே கால் பண்ணு,மணி பர்ஸ் எல்லாம் பத்திரம்!" என்ற பாசமான உரையாடலை கேட்டுக்கொண்டே அப்போது என் கவனம் பஸ் ரேடியோவில் அரைகுறையாக இருந்தது, சார் இந்த பெட்டியை மேல வைக்க முடியுமா என்ற குரலை எங்கயோ கேட்டது போல இருக்கே என்று திரும்பி பார்க்கையில் ....

அருகில் அவள், அவளது அம்மா,ஒருவயது குழந்தை. வந்ததது கவிதா என்று புரிந்தது. "என்ன ஜீவா எப்படி இருக்க? உன்ன பார்ப்பேன் நினைக்கவே இல்லை..எங்க போற?" என்று கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை முழி பிதுங்க வைத்து விட்டாள்..சம்பரதாய விசாரிப்புகளுக்குப் பின் அவள் அம்மாவிடம் என்னை அறிமுக படுத்தி விட்டு அவள் புராணத்தை தொடர்ந்தாள்.

அருகில் இருப்பவர்களை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லைவில்லை, இப்பவும் அவளின் வெளிப்படையான தன்மை மாறவில்லை என்பதை கண்டு உள்ளுக்குள் சந்தோசம். வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆம் ஆம் இல்லை என்று பதில் கூறுவதை விட வேறு வழி தெரியவும் இல்லை.

"பள்ளி முடிந்து பத்து வருடம் கழித்து முதன் முதலாக பார்க்கின்றேன், அதுவும் இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை ஜீவா" என்றாள் மறுபடியும்..பிளாஷ் பாக்: பள்ளிமுடிந்ததும் அவள் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாறுதல் கிடைத்து விட்டதாகவும், அங்கே கல்லூரி படிப்பு முடித்து கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க்கொண்டு இருக்கும்போது திருமணம் முடிந்ததாக கூறி முடித்தாள்.

சரவெடி வெடித்து முடிந்தது போல இருந்தது அவளின் உரையாடல்கள்..அவளிடம் பிடித்த விஷயம் ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசும் பண்புதான். இப்போவும் மாறாமல் இருக்கிறது, ஒருமுறை கணக்கு பாடத்தில் ஏதோ கேட்க எனக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கணக்கு வாத்தியார் வர இசகு பிசகாக மாட்டிக்கொண்டு அவர் என் காதைத் திருகி அடிவாங்கியதை அடிக்கடி சொல்லி கேலி செய்து பிறகு மன்னிப்பு கேட்டதும் திடீரென்று நினைவில் வந்து போனது.."உனக்கு ஞாபகம் இருக்கா ஜீவா என்னால தான அன்னைக்கு நடராஜன் சார் கிட்ட திட்டு வாங்கின?" என்று அவளும் நினைவு கூர்ந்தது எனக்கு வியப்பை கொடுத்தது.

வகுப்பில் எட்டு பேரு மட்டும் பெண்கள் மீதி நாற்பது பேர் பசங்க. அந்த எட்டில் கவிதா மட்டும் என்னிடம் பேசி பழகியது இப்போது நினைத்தாலும் கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்.
மற்ற நண்பர்களிடம் பழகியது போலத்தான் உன்னிடம் நட்புக் கொண்டு இருந்தாலும் மற்றவர் பார்வையில் தவறாய் படும் என்று விலகி விலகிப் போனது உனக்கு என்றாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
மறுபடியும் பேசிக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை, அவள் இறங்கும் இடம் வந்ததும்
"போயிட்டு வரேன் ஜீவா, கவனமா இரு, சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு!" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சென்ற உடன் பள்ளி இறுதி நாள் அன்று என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று ஞாபகம் வந்து போனது. "ஜீவா என்ன கல்யாணாம் பண்ணிகிறியா?" அப்போதும் பதில் தெரியாத திரு திரு வென்று முழித்தது

நினைத்து எனக்குள் ஒரு குறும் சிரிப்பு
எப்போவும் வந்து போகும்..

diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..

55 comments:

Mahi said...

/சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு.../கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! திஸ் இஸ் டூஊஊஊஊஊ மச்!

கதை நல்லா இருக்குது சிவா.

சாகம்பரி said...

கடைசி வார்த்தையை அவள்தான் கேட்டிருப்பாள் என்று நம்புகிறேன். நல்ல எழுத்து நடை.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஆட்டோகிராப்பை மிஸ் பண்ணிட்டீங்களே ஹி ஹி...!!!

இந்திரா said...

தேர்ச்சி மிகுந்த எழுத்துக்கள்.

வாழ்த்துக்கள் சிவா.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா.... மூன்று கிழமையால ஒரு அயகான கொயந்தை பிறந்திருக்குது... நில்லுங்க பார்த்திட்டு, சே...சே... படிச்சிட்டு வாறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன ஜீவா இப்படிப் பண்ணிட்டீங்க... அன்றே ஓம் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்போ பிளாஸ்பல்ப்பில சே... பக்கில திங் பண்ணி என்ன பண்ணலாம்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

அழகான கதை, கணவர் குழந்தை எனச் சந்தோசமாகத்தானே இருக்கிறா... வாழ்க வளமுடன்.....

முற்றும் அறிந்த அதிரா said...

எனக்கும் இப்படிக் குட்டிக் கதை எழுத + படிக்கப் பிடிக்கும், ஆனா எப்படி திங் பண்ணினாலும் பெரிசாகிடுது, அதனால எழுதுவதை விட்டுவிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

// அவரிடம் கதை திருகி அடிவாங்கியதை ///

காதை எனத் திருத்திடுங்க சிவா... இது ஸ்பீட்டாகப் படிக்கும்போது “கதை திருடி” என அர்த்தம் தருகுது, ஆனா அப்படி வந்தாலும் பொருந்துதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..///

இல்லை சாமீஈஈஈஈஈஈஈ, படிக்கிறவங்க சேவ் ஆகத்தான் இருக்கிறாங்க... இந்த ஜீவாவை... சொறி.. சொறி.. சிவாவைக் காப்பாத்திடுங்க சாமீஈஈஈஈஈஈஈ:))).

Priya said...

நல்ல கதை... அழகான நடையில் எழுதி இருக்கிங்க சிவா!

Angel said...

கதை நல்லா இருக்கு சிவா .வாழ்த்துக்கள் .

Unknown said...

மகி said...
/சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு.../கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! திஸ் இஸ் டூஊஊஊஊஊ மச்!

கதை நல்லா இருக்குது சிவா.

ஹஹா..அது சும்மா அன்பான மிரட்டல்

நன்றி மகிமா

Unknown said...

சாகம்பரி said...
கடைசி வார்த்தையை அவள்தான் கேட்டிருப்பாள் என்று நம்புகிறேன். நல்ல எழுத்து நடை.

November 8, 2011 12:35 பம்//



மிக்க நன்றி டீச்சர்

உங்கள் வருகைக்கும

Unknown said...

Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

November 8, 2011 1:01 பம்//



அட இது புதுசா இருக்கே..அவ்வ

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
அருமையான ஆட்டோகிராப்பை மிஸ் பண்ணிட்டீங்களே ஹி ஹி...!!!

November 8, 2011 5:04 பம்//



அண்ணே உங்க ஆட்டோ கிராப் போலவா

.நன்றி தங்கள் வருகைக்கு அண்ணாச்சி

Unknown said...

இந்திரா said...
தேர்ச்சி மிகுந்த எழுத்துக்கள்.

வாழ்த்துக்கள் சிவா.

November 8, 2011 5:53 பம்/



வாங்க புரட்சி கவிதை

நன்றி

Unknown said...

athira said...
அடடா.... மூன்று கிழமையால ஒரு அயகான கொயந்தை பிறந்திருக்குது... நில்லுங்க பார்த்திட்டு, சே...சே... படிச்சிட்டு வாறேன்.

November 8, 2011 6:26 ப//



என்னடா இன்னும் வரலே பாத்தேன் ..ம் வந்துட்டாங்க

குழந்தைய பக்க வரச்ச

பழம் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வரணும்



ஓகே படிச்சுட்டு வாங்க (nammai நம்பிகூட வராங்க )

Unknown said...

என்ன ஜீவா இப்படிப் பண்ணிட்டீங்க... அன்றே ஓம் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்போ பிளாஸ்பல்ப்பில சே... பக்கில திங் பண்ணி என்ன பண்ணலாம்:)))).//

சொல்லி இருக்கலாம் எனக்கு இப்போ போலவே
அப்பவும் விவரம் இல்லை avvv
நீங்கதான் எனக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லி erukkeengala அதான் அப்போவே வேணாம்னு...:)

Unknown said...

athira said...
அழகான கதை, கணவர் குழந்தை எனச் சந்தோசமாகத்தானே இருக்கிறா... வாழ்க வளமுடன்.....

November 8, 2011 6:28 பம்/



அது எல்லாம் நல்லாத்தான் இருக்கிறா .

பேபி அதிரா இது கதை மட்டுமே ..சரி வாழ்க வளமுaடன் நீங்களும்

Unknown said...

athira said...
//diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..///

இல்லை சாமீஈஈஈஈஈஈஈ, படிக்கிறவங்க சேவ் ஆகத்தான் இருக்கிறாங்க... இந்த ஜீவாவை... சொறி.. சொறி.. சிவாவைக் காப்பாத்திடுங்க சாமீஈஈஈஈஈஈஈ:))).

November 8, 2011 6:31 //



நோ நோ உங்க எல்லாரையும் சாமி பாத்துக்கும்

மிக்க நன்றி உங்கட குட்டி பயன் எனது அண்ணாவும் அவரது அண்ணாவும் நலமாய் இருக்காங்களா ..kethathaga chollavum.
:)thank you baby athira.

Unknown said...

Priya said...
நல்ல கதை... அழகான நடையில் எழுதி இருக்கிங்க சிவா!

November 9, 2011 1:38 அம//

வாங்க ஓவிய அரசி

மிக்க சந்தோசம் உங்கள் வருகைக்கு

Unknown said...

angelin said...
கதை நல்லா இருக்கு சிவா .வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்கும் வருகைக்கும்

மிக்க நன்றி தேவதை அக்கா ..

Unknown said...

athira said...
எனக்கும் இப்படிக் குட்டிக் கதை எழுத + படிக்கப் பிடிக்கும், ஆனா எப்படி திங் பண்ணினாலும் பெரிசாகிடுது, அதனால எழுதுவதை விட்டுவிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

// அவரிடம் கதை திருகி அடிவாங்கியதை ///

காதை எனத் திருத்திடுங்க சிவா... இது ஸ்பீட்டாகப் படிக்கும்போது “கதை திருடி” என அர்த்தம் தருகுது, ஆனா அப்படி வந்தாலும் பொருந்துதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

November 8, 2011 6:30 பம்//



இடையில விட்டுட்டேன் .மிக்க நன்றி இதுபோல விமர்சங்கள் வரவேற்க படுகின்றன ...:)



மாற்றி விட்டேன் தங்க யு பேபி அதிரா .:)

கதை திருத்தம் உதவி-மகி,பேபி அதிரா -
ஸ்பெஷல் தேங்க்ஸ் டு மகி.(/\)

முற்றும் அறிந்த அதிரா said...

//சொல்லி இருக்கலாம் எனக்கு இப்போ போலவே
அப்பவும் விவரம் இல்லை avvv
நீங்கதான் எனக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லி erukkeengala அதான் அப்போவே வேணாம்னு...:)///

அடடா சிவா இன்னும் பால்குடி மறக்காத தம்பி:))). நீங்க அப்படியே விபரம் இல்லாத தம்பிபோலவே இருங்க, நான் உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறேன், எதுக்கும் 2012 வரட்டும் ஓக்கை?:)).. டோண்ட் அவசரம்:)).

உங்கட குட்டி அண்ணாக்கள் நலமே:))).

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது இம்முறை புரூவ் ரீடர் மகியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... தேங்காய் பர்பி நல்லாவே வேர்க் பண்ணுது:))). படிச்சதும் கிழிச்சிடுங்க ஸ்ஸ்ஸ்வா:))).

Unknown said...

athira said...
//சொல்லி இருக்கலாம் எனக்கு இப்போ போலவே
அப்பவும் விவரம் இல்லை avvv
நீங்கதான் எனக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லி erukkeengala அதான் அப்போவே வேணாம்னு...:)///

அடடா சிவா இன்னும் பால்குடி மறக்காத தம்பி:))). நீங்க அப்படியே விபரம் இல்லாத தம்பிபோலவே இருங்க, நான் உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறேன், எதுக்கும் 2012 வரட்டும் ஓக்கை?:)).. டோண்ட் அவசரம்:)).

உங்கட குட்டி அண்ணாக்கள் நலமே:))).

November 9, 2011 12:42 பம்//



ஹஹா

ஆமாம் எதுக்கு வரை ? அப்போ உலகம் அழிந்து போய்ட்ட என்ன பண்றது அவ்வ

உங்க ப்ளாக் படிக்க முடியாதே :(((



நன்றி நன்றி :அதிரா :)

Unknown said...

athira said...
என்னாது இம்முறை புரூவ் ரீடர் மகியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... தேங்காய் பர்பி நல்லாவே வேர்க் பண்ணுது:))). படிச்சதும் கிழிச்சிடுங்க ஸ்ஸ்ஸ்வா:))).

November 9, 2011 12:43 பம்//



எஸ் ..எப்படி மாட்டி விடுறீங்களே :)

ம் அடுத்த பதிவு வரும் வரை சிவா எஸ்கேப் .

thanks again athira baby.:)

Anonymous said...

இந்த பிளாக்கை படித்துவிட்டேன் சாமி என்னை காப்பாற்றிவிடும் என்று நினைக்கிறேன் ;-)

Anonymous said...

காதை எனத் திருத்திடுங்க சிவா... இது ஸ்பீட்டாகப் படிக்கும்போது “கதை திருடி” என அர்த்தம் தருகுது, ஆனா அப்படி வந்தாலும் பொருந்துதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).//

இதை நான் சொல்லலாமென நினைத்தேன்.. அதற்குள் முந்திக்கிட்டாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ஆரம்பத்திலேருந்து முழித்துக்கொண்டிருந்தீர்களே.. அன்றே விழித்திருந்தால்... இந்த இனம்புரியாத வலி இருந்திருக்காது... மனதில் ஏதோ பாரத்துடன் செல்லவைக்கிறது கதை.. மிக அருமை சிவா.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Unknown said...

கதை நன்றாக இருக்கு

moosa shahib said...

ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518

Unknown said...

மாய உலகம் said...
இந்த பிளாக்கை படித்துவிட்டேன் சாமி என்னை காப்பாற்றிவிடும் என்று நினைக்கிறேன் ;-)

November 11, 2011 7:59 அம//

வாங்க மாயா

நிச்சயம் காப்பாற்றிவிடும்

:)

Unknown said...

மாய உலகம் said...
ஆரம்பத்திலேருந்து முழித்துக்கொண்டிருந்தீர்களே.. அன்றே விழித்திருந்தால்... இந்த இனம்புரியாத வலி இருந்திருக்காது... மனதில் ஏதோ பாரத்துடன் செல்லவைக்கிறது கதை.. மிக அருமை சிவா.

November 11, 2011 8:03 அம//



அட போங்க பாஸ்..

எந்த வலியும் இல்லை..:
கதை மட்டுமே :)

Unknown said...

மாய உலகம் said...
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

November 11, 2011 10:36 அம//



நன்றி தங்கள் அன்பனா வாழ்த்துக்கும் வருகைக்கும்

உங்களுக்கும் எல்லாம் சிறக்கட்டும்

Unknown said...

சிநேகிதி said...
கதை நன்றாக இருக்கு

November 11, 2011 12:55 பம்/



வாங்க சினேகிதி

வருக தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Unknown said...

moosa shahib said...
ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518

November 12, 2011 3:27 அம/



அட கடவுளே

என்கிட்டே கேக்காமலே விளம்பரம் ..எப்படியோ நல்லா இருங்க :)

அதுவும் ஆட்களே இல்லாத கடைப்பக்கம் வந்து விளம்பரம் ?அவ்வ



என்னத்த சொல்ல

நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...///

அடக்கடவுளே பார்த்தால் கமெண்ட் போடோணுமோ? தெரியாமல் வந்து பார்த்திட்டனே.... ஓக்கை அதுக்காக ஒரு விளம்பரம் போடட்டே சிவா? அனுமதி பிளீஸ்ஸ்ஸ்ஸ்.....:)))))

கூல்....கூல்ல்ல்ல்:)))))

“இதுவும் கடந்து போகும்”...

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்ப் நீங்க டியூப் லைட்டு ஹி ஹி ஹி ஹி...

சுபத்ரா said...

என்ன சிவா.. எல்லாரும் இதைக் கதைனு சொல்லிட்டாங்க :)

அழகான எழுத்து நடை.. அருமையான ஞாபகம்.. மனதை ஏதோ செய்கிறது.

Keep Writing..

Unknown said...

athira said...
//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...///

அடக்கடவுளே பார்த்தால் கமெண்ட் போடோணுமோ? தெரியாமல் வந்து பார்த்திட்டனே.... ஓக்கை அதுக்காக ஒரு விளம்பரம் போடட்டே சிவா? அனுமதி பிளீஸ்ஸ்ஸ்ஸ்.....:)))))

கூல்....கூல்ல்ல்ல்:)))))

“இதுவும் கடந்து போகும்”...

November 14, 2011 1:18 பம்//



:ஹஹஹா



எதுவும் கடந்து போகும்



நன்றி நன்றி நன்றி

பேபி அதிரா :)

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
சூப்பர்ப் நீங்க டியூப் லைட்டு ஹி ஹி ஹி ஹி.../

சரியாய் சொல்லிவிட்டீங்க

இரண்டு தடவை சொன்னால் தான் புரியும் .

கொஞ்சம் மக்குதான் :)

நன்றி மனோ அண்ணா

Unknown said...

சுபத்ரா said...
என்ன சிவா.. எல்லாரும் இதைக் கதைனு சொல்லிட்டாங்க :)

அழகான எழுத்து நடை.. அருமையான ஞாபகம்.. மனதை ஏதோ செய்கிறது.

Keep Writing..//

@சுபா
:)

Anonymous said...

Pl check your Spam Folder..

Anonymous said...

சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...//
Sorry No Comments...-:)

Jaleela Kamal said...

அழகான குட்டி கதை.
நல்ல இருக்கு சிவா
என்ன பூஸார் உங்களுக்கு பொண்ணு பார்க்க போறாஙக்ளா?

Unknown said...

ரெவெரி said...
சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...//
Sorry No Comments...-:)

November 24, 2011 8:08 PM

//

நன்றி ரேவரி
:)

Unknown said...

Jaleela Kamal said...
அழகான குட்டி கதை.
நல்ல இருக்கு சிவா
என்ன பூஸார் உங்களுக்கு பொண்ணு பார்க்க போறாஙக்ளா?

November 26, 2011 1:43 ப/

நன்றி ஜலீல் அக்கா

பொண்ணு பாக்க போறேன்னு சொல்லிகிட்டு தான் இருக்காங்க

இன்னும் :(

G.M Balasubramaniam said...

வெகு நாட்களுக்கு முன் என் பதிவுகள் சில படித்து ஊக்குவித்த சிவா அவர்களே. நான் இன்னும் பதிவுகள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். படிக்கிறீர்களா.? கருத்து ஏதும் காண்பதில்லையே.வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் கதை... ஆனா அது "ஜீவா"வா இல்ல "சிவா"வானு மட்டும் clarify பண்ணுங்க... :)
(நான் போஸ்ட் போட்டா மட்டும் சொந்த கதைனு புரளி கிளப்பி விடறீங்'ல... அதான் பழிக்கு பழி...:)
என்னது இந்த ப்ளாக் படிக்கறவங்கள மட்டும் சாமி காப்பாத்தணுமா? என்னா ஒரு வில்லத்தனம்...அவ்வவ்வ்வ்வ்...:))

Suji... said...

happa da :) samy ennai kaapathum. malarum ninaivugal la... enakum inum konja varusam aana ipadi nadakum nu nenaikaren.

Unknown said...

G.M Balasubramaniam said...
வெகு நாட்களுக்கு முன் என் பதிவுகள் சில படித்து ஊக்குவித்த சிவா அவர்களே. நான் இன்னும் பதிவுகள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். படிக்கிறீர்களா.? கருத்து ஏதும் காண்பதில்லையே.வாழ்த்துக்கள்.

November 29, 2011 9:03 பம்//



ஐயா

நன்றி தங்கள் வாழ்த்துக்கு

மீண்டும் வருகிறேன்

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
சூப்பர் கதை... ஆனா அது "ஜீவா"வா இல்ல "சிவா"வானு மட்டும் clarify பண்ணுங்க... :)
(நான் போஸ்ட் போட்டா மட்டும் சொந்த கதைனு புரளி கிளப்பி விடறீங்'ல... அதான் பழிக்கு பழி...:)
என்னது இந்த ப்ளாக் படிக்கறவங்கள மட்டும் சாமி காப்பாத்தணுமா? என்னா ஒரு வில்லத்தனம்...அவ்வவ்வ்வ்வ்...:))

November 30, 2011 1:42 எ/

வாங்க வாங்க இட்லி கடை ஒவ்நேர் அப்பாவி அவர்களே

ஏன் இப்படி??

அது கறபனை ...

ம் எப்படி மிரட்டினாலும் வர மாட்டுறாங்க:)

Unknown said...

Puppykutty :) said...
happa da :) samy ennai kaapathum. malarum ninaivugal la... enakum inum konja varusam aana ipadi nadakum nu nenaikaren.

December 5, 2011 1:19 PM


siva said...///

WELCOME PUPPUBKUTI..
THANKS...

நன்றி வருகைக்கு
உங்களுக்கும் பழைய நியாபகங்கள் இருக்கும் எடுத்து விடுங்கள்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...