Thursday, January 20, 2011
நிலவும் நினைவும் ....!
அழகான
இரவுகளின் நடுவில்
ஒரு நாளில் உன் முகம்
மேக இருட்டில் இருந்து
வெண்தங்கத்தை
முலாம் பூசிக்கொண்டு
கொண்டு
வான்வழியில் நீ
மாதம் ஒரு முறை
வந்து கரைந்து போகிறாய்..
உன்னைத் தொடும் முயற்சியில்
பூமியின் மேற்பரப்பில்
அடுக்கடுக்காய்
செங்கல்
எல்லாம்
வண்ணம் பூசிய
கட்டிடங்கள்..
நீடித்திடும்
இரவின் தனிமையில்
மட்டும் இல்லை..,
முடிந்து
போகும்
ஒரு
ஒரு
தினமும்
சருகுகளின்
மீது
கால் பதித்த
தடம்
போல
என்னைச்சிறைபிடித்திடும்
உந்தன் நினைவுகள்
தூரச்சென்று
திரும்பி பார்க்கும்
பார்வைகள்
நீண்டு போகாத
என்று எண்ணிய
நிமிடங்களும்
முடிந்து போகாத நாட்களும்
மறந்துவந்து
கரைந்து
போயின...
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
வணக்கம் வணக்கம் அனைவருக்கும் கொஞ்சம் தாமதம் மன்னிக்கவும்... காரணம் எப்போதும் போல வேலைகள் அதிகம் கடமைகளும் சேர்ந்து என்னை கவலை இல்லாது வேகமாய...
11 comments:
நினைவுகள் இனிமையானதுதான்.... என்றுமே!
நல்லா இருக்கு சிவா!
அருமையான கவிதை சிவா!
//வெண்தங்கத்தை
**முலம் பூசிக்கொண்டு// முலாம்
//வந்து கரைந்து **போய்கிறாய்// போகிறாய்
//நீண்டு **போகாத // போகாதா
ஆங்காங்கே இருக்கும் எழுத்துப்பிழைகள் நிலவை மூடிய மேகங்களாய் இருக்கிறது.
அவற்றை கொஞ்சம் கவனமாகக் களையலாமே தம்பி?!
Priya said...
நினைவுகள் இனிமையானதுதான்.... என்றுமே!
நல்லா இருக்கு சிவா//
நன்றி ப்ரியா
கருத்துக்கும் வருகைக்கும்
அருமையான கவிதை சிவா!
//வெண்தங்கத்தை
**முலம் பூசிக்கொண்டு// முலாம்
//வந்து கரைந்து **போய்கிறாய்// போகிறாய்
//நீண்டு **போகாத // போகாதா
ஆங்காங்கே இருக்கும் எழுத்துப்பிழைகள் நிலவை மூடிய மேகங்களாய் இருக்கிறது.
அவற்றை கொஞ்சம் கவனமாகக் களையலாமே தம்பி?!//
நன்றி மகி அக்கா
திருத்திவிட்டேன்
ஒரு இடம் இன்னும்....திருத்தவில்லை..
ஒரு வரி மேலே போனதும் தவறு சரி ஆகிவிட்டது ....???
very nice.
.//உன்னைத் தொடும் முயற்சியில்
பூமியின் மேற்பரப்பில்
அடுக்கடுக்காய்
செங்கல்
எல்லாம்
வண்ணம் பூசிய
கட்டிடங்கள்../
ஓ , நிலாவ பிடிக்கரதுக்குத்தான் கட்டிடம் கட்டுறாங்களா அண்ணா ? ஹி ஹி
//தூரச்சென்று
திரும்பி பார்க்கும்
பார்வைகள் /
ஓ , காதல் கவிதை போல ..
Sema Sema :-)
சுபத்ரா said...
Sema Sema :-)
February 1, 2011 6:12 PM
//
nandri..
சிவா உங்கள் கவிதைகள் அற்புதம்.....
சருகுகளின்
மீது
கால் பதித்த
தடம்
போல
என்னைச்சிறைபிடித்திடும்
உந்தன் நினைவுகள்...
superb lines....siva...i like it
வாழ்துக்கள்
Thanks great blog
Post a Comment