Wednesday, July 28, 2010

(வெண்பா)






மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி )



பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு

செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு

சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை

ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

(மார்கழி)

(வெண்பா)

3 comments:

Priya said...

ஒரு பெண் மனதின் ரசனையை அழகாக வெளிப்படுத்தும் பாடல்!

சாமக்கோடங்கி said...

நான் ரசித்த பாடல் வரிகள்..

இமா க்றிஸ் said...

அந்தப் படத்தில இருக்கிறதுதான் மார்கழிப்பூவா!!! ;))

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...