Thursday, August 11, 2011

இந்திய வரலாற்றில் முதன் முறையாக....

அன்பார்ந்த பெரியோர்களே!
எனது பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக!

சீரக இறால் வறுவல் செய்வது எப்படி....ஒரு நிமிஷம் இருங்க சாமிய வேண்டிக்கிறேன்
(/\)சாமி இந்த ப்ளாக் படிக்கறவங்கள மட்டும் காப்பாத்து.

சீரக இறால் வறுவல்-

ஓகே! தேவையான பொருட்கள்...

இறால் - அரை கிலோ, ஏன் என்றால், அதை சுத்தம் செய்த பிறகு கால் கிலோதான் வரும்.
பெரிய வெங்காயம் - நான்கு

சீரகம் - இரண்டு பெரிய ஸ்பூன்
பெரிய சீரகம் (சோம்பு) - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு-கொஞ்சம்
ஒரு முழு பூண்டு
பிறகு இஞ்சி- (பூண்டு அளவு)... ஒரு குத்துமதிப்பா எடுத்துக்கோங்க.
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகாய்ப்பொடி - சிறிது
எண்ணெய்-தேவையான அளவு.

முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும்.
பிறகு அதில் பாதி எடுத்துக் கொண்டு வெட்டப்பட்ட இஞ்சியும், உரிக்கப்பட்ட பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, கொஞ்சம் கறிவேப்பில்லை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் சமையல் பாத்திரத்தை வைத்து, அதாங்க எண்ணை சட்டி வைத்து எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்கு காயவிடவும். அதில் கடுகு கறிவேப்பிலை போட்டு, உடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். பொன் வறுவல் வந்த உடன் அரைத்த இஞ்சி பூண்டு கரைசல், வெங்காயம் சேர்க்கவும்

பிறகு நன்கு கழுவி மஞ்சள்தூள் போட்டு குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை சட்டியில் போடவும்.
பூண்டு இஞ்சி வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.

வாசனை குறையும் தறுவாயில் கொஞ்சம் மிளகாய்ப்பொடி போட்டு அதன் மீது கொஞ்சம் எண்ணெய் விட்டு சற்று மிதமான
தீயில் வதக்கவும்.

சூடான சுவையான இறால் வறுவல் ரெடி.

பின்குறிப்பு:
பெயர்க்காரணம்
கடந்த வாரம் இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது..சுவை சற்று அதிகம் என்பது கூடுதல் தகவல்..:)

வெங்காயம் அதிகமா சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும் .
பாதி வெங்காயம் பூண்டுடன் அரைத்தும் விடுவதால் தேங்காய் போடவேண்டியது இல்லை.
மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும்.

முக்கிய குறிப்பு:
இதுபோல செய்து எதாவது ஆகிவிட்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல...


44 comments:

இமா க்றிஸ் said...

//நிர்வாகம் பொறுப்பு அல்ல... // அது எப்புடீ!! நிர்வாகம்தான் பொறுப்பு.

ஹை! றால்வடை போல இருக்கே! ;)

இமா க்றிஸ் said...

//பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக!// ம். ;)

அட! வெங்காயம் 4! சூப்பர் படம். ;) அப்புடியே 2 ஸ்பூன்... அப்புறம்.. குத்து, மதிப்பு எல்லாம் படம் போட்டு இருக்கலாம். ;)

//கடந்த வாரம் இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது.// இந்த வாரம்... வெங்காயம் அதிகம் சேர்ந்தா 'வெங்காய றால் வறுவல்' நெக்ஸ்ட் வீக்... கறிவேப்பிலை றால் வறுவல். கை தவறி கடுகு கொட்டினா... கடுகு றால் வறுவல். பேர் வைக்கிறதுக்கு சுப்பர் ஐடியா சிவா. ;)

(ஒரு டவுட்! நளமகாராசாதானே சமைப்பாங்க! சோழர்குல இளவரசருமா!!)

இருங்க... நான் இதே முறைல செய்து பார்ப்பேன். படத்தில இருக்கிற மாதிரி வரவேணும். இல்லாட்டா நான் புதுசா பேர் வச்சுருவேன். ;) (மனசுக்குள்ள பேர் ரெடி)

அருண் பிரசாத் said...

//இறால் - அரை கிலோ, ஏன் என்றால், அதை சுத்தம் செய்த பிறகு கால் கிலோதான் வரும்.
பெரிய வெங்காயம் - நான்கு //

பெரிய வெங்காயத்தை உரிச்சா 2 தான் வருமா?

Chitra said...

ஆஹா .... அப்படியே ஒரு ப்ளேட் பார்சல்!!!
:-)

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. இறால் வறுவல் உங்க ரெசிப்பியா?

Anonymous said...

சிவா...நான் சைவங்க...இந்த இறால்லாம் டேஸ்ட் மாட்டேங்க...

அப்படியே ஒரு கட்டு கட்டுவோம்ல ....

பிடித்தது இறால் குழம்பு...எங்க ஊர் பக்கத்துலே தூக்கலா புளி விட்டு ...சொல்லும் போதே நாக்கு ஊறுது...

படம் நல்லாயிருக்கு...அடுத்த வாரம் செஞ்சுட்டு உயிரோட இருந்தா வந்து சொல்றேன்...

athira said...

//அன்பார்ந்த பெரியோர்களே!
எனது பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக! //

இப்பூடிக் கூப்பிட்ட பிறகும் நான் வராட்டில் அதுக்கு ஒரு மரியாதையே இல்லை.... பிரசண்ட் சிவா... மீத 1 ஸ்ட்:)).

என்ன நடந்தது, சமைச்சால் பிரபலம் ஆகிடலாம் என்றுதானே எல்லோரும் கிச்சினுக்குள் கால் வைக்கத் தொடங்கியிருக்கிறீங்க:))..

athira said...

பெரிய வெங்காயம் 4, எனச் சொல்லிப்போட்டு சின்ன வெங்காயம் 4 எடுத்து வச்சிருக்கிறீங்களே.. அப்போ இதுக்கு மேல குறிப்பைப் படிச்சால் என் கதி என்ன ஆவுறது?:)))...

athira said...

//குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை //

ஹா..ஹா..ஹா... தோய வார்க்கப்புடாதோ?:))).

பார்க்க நல்லாத்தான் இருக்கு வறுவல்.. ஒரு தடவை செய்துபோட்டு வந்து சொல்கிறேன் பீட்பக்:)))).

Mahi said...

அடேங்கப்பா! சூப்பர் ரெசிப்பியா இருக்கே!!

//சீரகம் - இரண்டு பெரிய ஸ்பூன் // பெரிய ஸ்பூன்னா? எம்பூட்டு பெரீஈஈஈஈய்ய ஸ்பூன்?

//பிறகு இஞ்சி- (பூண்டு அளவு)... ஒரு குத்துமதிப்பா எடுத்துக்கோங்க. // யு மீன்,ஒரு பல் பூண்டு ஆர் ஒரு பல்ப்(!) பூண்டு? குத்துமதிப்புன்னா...குத்தும்போது ஒரு பல்லு(இது வேற பல்லு;)) கழண்டுவிழுந்தா போதுமா,இல்ல நாலஞ்சு பல்லு விழுந்து மூக்குல ப்ளட் வரோணுமா?! ;)

//பிறகு நன்கு கழுவி மஞ்சள்தூள் போட்டு குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை// அவ்வ்வ்வ்வ்வ்வ்! மங்களகரமா மஞ்சள்பூசி குளிப்பாட்டி சாப்பிடறீங்களோ?! ;)


//இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது..// ஹாஹாஹா! இப்ப தெரிஞ்சுபோச்சுல்ல சீரகம் போட்ட ஸ்பூன் எவ்வளவு பெரிசுன்னு! ;)

சிவா சமையலைத் தைரியமா சாப்பிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு! ;) சீக்கிரமா சைவத்தில் எதாச்சும் ரெசிப்பி போஸ்ட் பண்ணுங்க சிவா!

Unknown said...

இமா said...
//நிர்வாகம் பொறுப்பு அல்ல... // அது எப்புடீ!! நிர்வாகம்தான் பொறுப்பு.

ஹை! றால்வடை போல இருக்கே! ;)

August 11, 2011 4:54 பம்//



வாங்க உங்களுக்குத்தான் முதல் வடை

Unknown said...

இமா said...
//பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக!// ம். ;)

அட! வெங்காயம் 4! சூப்பர் படம். ;) அப்புடியே 2 ஸ்பூன்... அப்புறம்.. குத்து, மதிப்பு எல்லாம் படம் போட்டு இருக்கலாம். ;)

//கடந்த வாரம் இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது.// இந்த வாரம்... வெங்காயம் அதிகம் சேர்ந்தா 'வெங்காய றால் வறுவல்' நெக்ஸ்ட் வீக்... கறிவேப்பிலை றால் வறுவல். கை தவறி கடுகு கொட்டினா... கடுகு றால் வறுவல். பேர் வைக்கிறதுக்கு சுப்பர் ஐடியா சிவா. ;)

(ஒரு டவுட்! நளமகாராசாதானே சமைப்பாங்க! சோழர்குல இளவரசருமா!!)

இருங்க... நான் இதே முறைல செய்து பார்ப்பேன். படத்தில இருக்கிற மாதிரி வரவேணும். இல்லாட்டா நான் புதுசா பேர் வச்சுருவேன். ;) (மனசுக்குள்ள பேர் ரெடி)

August 11, ௨//



அப்பாட எவ்ளோ பெரிய கம்மெண்டு

படம் எல்லாம் ஆண்டவர் உயபம்

ஓகே நன்றி தங்கள் பாரட்டுக்கு..

மீண்டும் வருக

Unknown said...

அருண் பிரசாத் said...
//இறால் - அரை கிலோ, ஏன் என்றால், அதை சுத்தம் செய்த பிறகு கால் கிலோதான் வரும்.
பெரிய வெங்காயம் - நான்கு //

பெரிய வெங்காயத்தை உரிச்சா 2 தான் வருமா?

August 11, 2011 7:21 பம்//



சற்று யோசிக்க வேண்டிய கேள்வி

அப்பறமா உங்களுக்கு பதில் சொல்றேன்

நன்றி அண்ணா தங்கள் வருகைக்கு

Unknown said...

Chitra said...
ஆஹா .... அப்படியே ஒரு ப்ளேட் பார்சல்!!!
:-)

August 11, 2011 8:09 PM

//

ஹே நம்ம அக்காவுக்கு ரெண்டு plate eral varuval பார்சல்
பண்ணிடு...
ஓகே நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

vanathy said...
சூப்பர் ரெசிப்பி. இறால் வறுவல் உங்க ரெசிப்பியா?

August 11, 2011 8:58 பம்/

ஆமாம் கோப்பி ரைட் உரிமை வாங்கப்பட்டுவிட்டது

நன்றி வானதி அக்கா

Unknown said...

Reverie said...
சிவா...நான் சைவங்க...இந்த இறால்லாம் டேஸ்ட் மாட்டேங்க...

அப்படியே ஒரு கட்டு கட்டுவோம்ல ....

பிடித்தது இறால் குழம்பு...எங்க ஊர் பக்கத்துலே தூக்கலா புளி விட்டு ...சொல்லும் போதே நாக்கு ஊறுது...

படம் நல்லாயிருக்கு...அடுத்த வாரம் செஞ்சுட்டு உயிரோட இருந்தா வந்து சொல்றேன்...

August 11, 2011 9:42 PM

//

யாம் இருக்க பயம் ஏன்
எந்த டவுட் எண்டாலும் உடனே மெயில் பண்ணுங்க

ஓகே நீங்கள் உயருடந்தான் இருப்பீங்க
கடந்த வாரம் செய்து பார்த்து விட்டேன்
நண்பர்கள் நல்லமுறையில் உள்ளனர் :)
நன்றி வருகைக்கு

Unknown said...

athira said...
//அன்பார்ந்த பெரியோர்களே!
எனது பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக! //

இப்பூடிக் கூப்பிட்ட பிறகும் நான் வராட்டில் அதுக்கு ஒரு மரியாதையே இல்லை.... பிரசண்ட் சிவா... மீத 1 ஸ்ட்:)).

என்ன நடந்தது, சமைச்சால் பிரபலம் ஆகிடலாம் என்றுதானே எல்லோரும் கிச்சினுக்குள் கால் வைக்கத் தொடங்கியிருக்கிறீங்க:))..

August 12, 2011 12:18 AM

//

உங்களுக்கு ௭வது இடம்தான் முதல் இடம் இமாவுக்கு..
உங்களுக்கு பூரண கும்ப மரியாதை உண்டு ..கமென்ட் போடவில்லை எண்டாலும்
என்ன நடந்தது, சமைச்சால் பிரபலம் ஆகிடலாம் என்றுதானே எல்லோரும் கிச்சினுக்குள் கால் வைக்கத் தொடங்கியிருக்கிறீங்க:))..//

நோ நோ already am பிரபல பதிவர்...:)

அதெலாம் ஒரு கதை அப்பரம் சொல்றேன்

Unknown said...

thira said...
பெரிய வெங்காயம் 4, எனச் சொல்லிப்போட்டு சின்ன வெங்காயம் 4 எடுத்து வச்சிருக்கிறீங்களே.. அப்போ இதுக்கு மேல குறிப்பைப் படிச்சால் என் கதி என்ன ஆவுறது?:)))...

August 12, 2011 12:20 எ//



நீங்கள் சிறந்த கண்டோச்டேரை அணுகவும் :)

அது பெரிய வெங்காயம் கொஞ்சம் சிறிய வடிவில் இருக்கிறது ..

உங்களுக்கு ஒண்டும் ஆகாது நீங்கள் தான் கெட்டகிருமிகள் சங்க தலைவி ஆச்சே.:)

nandri athirma.

Unknown said...

athira said...
//குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை //

ஹா..ஹா..ஹா... தோய வார்க்கப்புடாதோ?:))).

பார்க்க நல்லாத்தான் இருக்கு வறுவல்.. ஒரு தடவை செய்துபோட்டு வந்து சொல்கிறேன் பீட்பக்:)))).

August 12, 2011 12:22 அம//

தோய வார்க்கபுடதோ ?அப்படி என்றால் என்ன?



பிறகு நன்றி தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும்

கண்டிப்பா நல்ல இருக்கும்..

எவ்ளோவோ பண்றீங்க எதையும் பண்ணி பாருங்க

Unknown said...

Mahi said...
அடேங்கப்பா! சூப்பர் ரெசிப்பியா இருக்கே!!

நன்றி சமையல் அரசி..:(/\) வணக்கம்

//சீரகம் - இரண்டு பெரிய ஸ்பூன் // பெரிய ஸ்பூன்னா? எம்பூட்டு பெரீஈஈஈஈய்ய ஸ்பூன்?


...ம் தெரியலை :)




//பிறகு இஞ்சி- (பூண்டு அளவு)... ஒரு குத்துமதிப்பா எடுத்துக்கோங்க. // யு மீன்,ஒரு பல் பூண்டு ஆர் ஒரு பல்ப்(!) பூண்டு? குத்துமதிப்புன்னா...குத்தும்போது ஒரு பல்லு(இது வேற பல்லு;)) கழண்டுவிழுந்தா போதுமா,இல்ல நாலஞ்சு பல்லு விழுந்து மூக்குல ப்ளட் வரோணுமா?! ;)

//பிறகு நன்கு கழுவி மஞ்சள்தூள் போட்டு குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை// அவ்வ்வ்வ்வ்வ்வ்! மங்களகரமா மஞ்சள்பூசி குளிப்பாட்டி சாப்பிடறீங்களோ?! ;)



ம் கிருமி எல்லாம் மஞ்சள் தூளில் அழிந்து விடும் அதனால் :)


//இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது..// ஹாஹாஹா! இப்ப தெரிஞ்சுபோச்சுல்ல சீரகம் போட்ட ஸ்பூன் எவ்வளவு பெரிசுன்னு! ;)

சிவா சமையலைத் தைரியமா சாப்பிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு! ;) சீக்கிரமா சைவத்தில் எதாச்சும் ரெசிப்பி போஸ்ட் பண்ணுங்க சிவா!

விரைவில் :)

ஏதோ உங்கள் புண்ணியத்தில் ரசம்,தக்காளி தொக்கு,வெந்தியசாம்பார்,புளிக்குழம்பு,மீன்குழம்பு,எறால்குழம்பு இவை மட்டுமே தெரியும் :)



இதுவரை நான்கு நண்பர்கள் எனது சமையல் சாப்ட்டு பார்த்து வேற ரூம் போய் இருக்கிறார்கள் ..:)

நன்றி வசிஷ்டர் mahima.

இமா க்றிஸ் said...

//மீண்டும் வருக// ம். வந்தேன்... சந்தேகத்தோடு. ;)

//ஓகே நன்றி தங்கள் பாரட்டுக்கு..// !! நான் எப்போ சார் கிளி கொடுத்தேன்!! ;))

//நோ நோ already am பிரபல பதிவர்...:)// ஹக்! கிக் கிக் ;) இப்பிடி சிரிக்க வைக்கப்படாது ஷிவ்ஸ் ;)))

இமா க்றிஸ் said...

//நீங்கள் சிறந்த கண்டோச்டேரை அணுகவும் :)// நோட் திஸ் பாயிண்ட் அதீஸ். சாதாரண டொக்டர் எல்லாம் சரிவர மாட்டாராம். ;)

அதிரா மட்டுமா! எல்லாரும் தான் போக வேணும் போல இருக்கு சிவா. ;)

Unknown said...

இமா said...
//மீண்டும் வருக// ம். வந்தேன்... சந்தேகத்தோடு. ;)

//ஓகே நன்றி தங்கள் பாரட்டுக்கு..// !! நான் எப்போ சார் கிளி கொடுத்தேன்!! ;))

//நோ நோ already am பிரபல பதிவர்...:)// ஹக்! கிக் கிக் ;) இப்பிடி சிரிக்க வைக்கப்படாது ஷிவ்ஸ் ;)))

August 12, 2011 12:45 பம்


வருக வருக

ம் பாரட்ட வில்லையா ...திட்டினாலும் சந்தோசமே :

//நோ நோ already am பிரபல பதிவர்...:)// ஹக்! கிக் கிக் ;) இப்பிடி சிரிக்க வைக்கப்படாது //

உண்மை சொன்ன உலகம் என்னைக்கு ஒதுக்கிட்டு இருக்கு..

Unknown said...

இமா said...
//நீங்கள் சிறந்த கண்டோச்டேரை அணுகவும் :)// நோட் திஸ் பாயிண்ட் அதீஸ். சாதாரண டொக்டர் எல்லாம் சரிவர மாட்டாராம். ;)

அதிரா மட்டுமா! எல்லாரும் தான் போக வேணும் போல இருக்கு சிவா. ;)

August 12, 2011 12:48 PM

// ஹயோ ஹயோ நான் தவறாய் கமெண்டி விட்டேன்
சிறந்த கண் மருத்துவரை அணுகவும் என்று இருக்க வேண்டும்
(அதிராம am on leave for வீக் ).

escapeu..:)

ம.தி.சுதா said...

///இதுபோல செய்து எதாவது ஆகிவிட்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல... ////

பயத்தைக் கிளப்பீட்டாய்ங்களே..

இமா க்றிஸ் said...

//ஹயோ ஹயோ நான் தவறாய் கமெண்டி விட்டேன்// இப்போ மட்டும்தானா!! ;)
//சிறந்த கண் மருத்துவரை அணுகவும் என்று இருக்க வேண்டும்// ம். ;)

சிவா... 'அதிராம' லீவானாலும் அதிர்ந்து கொண்டு லீவானாலும் விட மாட்டோம். தமிழ் வளர்த்த சோழர் பரம்பரையில் இப்படி ஒரு இளவரசரா!! ஒழுங்காக தமிழ் டைப் ப்ளீஸ்ஸ்.. ;))

மாலதி said...

சூப்பர் ரெசிப்பி

Jaleela Kamal said...

அட இது எப்போது இருந்து.

நான் இத முயற்சி பண்ணிபார்த்து என்ன ஆச்சுன்னு வந்து சொல்றேன்

athira said...

உஸ்ஸ்ஸ் அப்பா... ஸ்சிவா எசுக்கேப்பூஊஊஊஊஉ என்பதை கன்போம் பண்ணிக்கொண்டே வந்தேன்... என்னை அதிரமா:) என்றால், இனிமேல் சிவா சாரு அப்பூடித்தான் அழைப்..பேன்...போம்:)) ஓக்கேயா?.

//அது பெரிய வெங்காயம் கொஞ்சம் சிறிய வடிவில் இருக்கிறது ..//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிறிய வடிவென்றால் அது சின்ன வெண்டாயம் தேன்ன்ன்:)).

athira said...

முக்கிய அறிவித்தல்...:))).

”கெட்ட கிருமிகள்” க்கு தலைவி இல்லை, தலைவர்தான் உண்டு...:)) க்கி..க்கி...க்கீஈஈ(அது எக்கோ சிரிப்பூ).

athira said...

நாம், குளிப்பதெனில்..... தோளில் தண்ணி வார்ப்பதைத்தான் அப்படிச் சொல்வோம்(தலை நனையாது:)).

தோய்தல், தோய வார்ப்பதெனில்... தலையில் தண்ணி ஊத்தித் தோய்தல்.

புரிஞ்சுதோன்னோ? புரியாட்டில் போய்த் தண்ணி எடுத்து தலையில் ஊற்றிப் பாருங்கோ புய்யும்... மீ எசுக்கேப்பூஊஊஊஊ.. ஐ ஆம் வெரி பிசி யாஆஆஆஆ:))))).

athira said...

கண் டாக்டர்:)), கண் மருத்துவர்:).. இமா, சிவா கொயம்பிட்டார்...:)))))).

( - - )
*
-
(..) (..)
ஐ.... நான் பூஸ் குட்டி கீறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).

Unknown said...

மாலதி said...
சூப்பர் ரெசிப்பி

August 14, 2011 1:04 பம்//

வாங்க மாலதி

நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

Jaleela Kamal said...
அட இது எப்போது இருந்து.

நான் இத முயற்சி பண்ணிபார்த்து என்ன ஆச்சுன்னு வந்து சொல்றேன்

August 15, 2011 2:18 பம்/

வாங்க சமையல் ராணி ஜலீல் அக்கா

ம் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

நன்றி வருகைக்கு

Unknown said...

உஸ்ஸ்ஸ் அப்பா... ஸ்சிவா எசுக்கேப்பூஊஊஊஊஉ என்பதை கன்போம் பண்ணிக்கொண்டே வந்தேன்... என்னை அதிரமா:) என்றால், இனிமேல் சிவா சாரு அப்பூடித்தான் அழைப்..பேன்...போம்:)) ஓக்கேயா?.-- நோ நோ நாட் ஓகே. பின்ன உங்களை எப்படி அழைக்கிறது அதிரா என்றால் மரியாதையை குறைவாக இருப்பது போல ஒரு உணர்வு.

சரி பேபி அதிரா என்று என்று முதல் அழைக்கின்றேன்...

//அது பெரிய வெங்காயம் கொஞ்சம் சிறிய வடிவில் இருக்கிறது ..//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிறிய வடிவென்றால் அது சின்ன வெண்டாயம் தேன்ன்ன்:))...

பெரிய வெங்காயம் சிறிய வடிவிலும் கிடைக்கும் :))

நன்றி பேபி அதிரா

Unknown said...

முக்கிய அறிவித்தல்...:))).

”கெட்ட கிருமிகள்” க்கு தலைவி இல்லை, தலைவர்தான் உண்டு...:)) க்கி..க்கி...க்கீஈஈ(அது எக்கோ சிரிப்பூ).

August 16, 2011 2:28 அம//



யாரு அது ?

" ketta kirumaigal தலைவரே: எப்படிதான் உங்கள் உறுபினர்களை எல்லாம் சமாளிக்கிறீங்களோ தெரியவில்லை :)))

Unknown said...

இமா said...
//ஹயோ ஹயோ நான் தவறாய் கமெண்டி விட்டேன்// இப்போ மட்டும்தானா!! ;)
//சிறந்த கண் மருத்துவரை அணுகவும் என்று இருக்க வேண்டும்// ம். ;)

சிவா... 'அதிராம' லீவானாலும் அதிர்ந்து கொண்டு லீவானாலும் விட மாட்டோம். தமிழ் வளர்த்த சோழர் பரம்பரையில் இப்படி ஒரு இளவரசரா!! ஒழுங்காக தமிழ் டைப் ப்ளீஸ்ஸ்.. ;))

August 12, 2011 3:56 பம்//



இனிமேல்தான் தமிழ் பள்ளிக்கூடம் போகவேணும் எல்லாம் மறந்து விட்டது

நன்றி டீச்சர்

Unknown said...

athira said...
கண் டாக்டர்:)), கண் மருத்துவர்:).. இமா, சிவா கொயம்பிட்டார்...:)))))).

( - - )
*
-
(..) (..)
ஐ.... நான் பூஸ் குட்டி கீறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).

August 16, 2011 2:36 அம/



மியவு மியாவு .........அவ்வவ் ..:(((((((

டீச்சர் பேபி அதிரா என்னை கீறிடான்கள்..mmmmmm..(((...(am crying)

கொஞ்சம் என்னவெண்டு கேளுங்கள் ...:)

Unknown said...

athira said...
நாம், குளிப்பதெனில்..... தோளில் தண்ணி வார்ப்பதைத்தான் அப்படிச் சொல்வோம்(தலை நனையாது:)).

தோய்தல், தோய வார்ப்பதெனில்... தலையில் தண்ணி ஊத்தித் தோய்தல்.

புரிஞ்சுதோன்னோ? புரியாட்டில் போய்த் தண்ணி எடுத்து தலையில் ஊற்றிப் பாருங்கோ புய்யும்... மீ எசுக்கேப்பூஊஊஊஊ.. ஐ ஆம் வெரி பிசி யாஆஆஆஆ:))))).

August 16, 2011 2:30 அம//



பேபி அதிரா எனக்கு புரியவில்லை :)))))

மறுமுறை சொல்லுங்கோ ..

உங்களை ஒரு ப்ளோகில தேடிக்கொண்டு இருக்காங்கோ ...

முற்றும் அறிந்த அதிரா said...
This comment has been removed by the author.
முற்றும் அறிந்த அதிரா said...

ங்ங்ங்ங்.....ஙேஙேஙேஙே? தேடீனம்???:))) ரெடியாகிட்டேன்... அதிராவோ கொக்கோ:))))

......(\_/)
......( '_')
..../""""""""""""\======░ ▒▓▓█D
/"""""""""""""""""""\
\_@_@_@_@_@_/

Unknown said...

ங்ங்ங்ங்.....ஙேஙேஙேஙே? தேடீனம்???:))) ரெடியாகிட்டேன்... அதிராவோ கொக்கோ:))))

வாருங்கள் பேபி

என்ன இது சின்ன புள்ள தனமா துப்பாய்க்கு எல்லாம் வச்சுக்கிட்டு
நோ terorism
நோ அன்பே சிவம்

சாகம்பரி said...

ரெஸிபி நம்பிக்கை தருவதாகவே உள்ளது செஃப் சிவா.

Unknown said...

ரெஸிபி நம்பிக்கை தருவதாகவே உள்ளது செஃப் சிவா./

நன்றி டீச்சர் தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...