Friday, February 18, 2011

டீக்கடை.....(ஐம்பதாவது பதிவாம் )

முஸ்கி : சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு.....





"ஏய்! அவன் இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்லடா.. கூட இருந்தே இப்படி பண்ணுவானு.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பண்ணிட்டு நம்மை எல்லாம் தலை குனிய வச்சுட்டு போய்ட்டான். அவன் மட்டும் என் கையில சிக்கினான்னு வை, மவனே அவன் காலிடா," என்றான் குமார்.

சதீஷ் "ஏன்டா அவனுக்கு மூளை இப்படி நாசமா போனது? எப்போவும் ஒண்ணும் தெரியாதவன் போல இருப்பான். நானும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்குடா," என்று அவன் பங்குக்கு
புலம்பித் தள்ளினான்.

"இதுக்குத்தான் அவன நம்மகூட சேர்க்காதீங்கனு அப்போவே சொன்னேன்," என்ற ரமேஷ் "நீங்க தான் பாவம் அது இதுன்னு சொல்லிவிட்டு இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க," என்று அவர்களை உசுப்பி விட்டான். "எனக்கு அப்போவே தெரியும். இந்த ராஸ்கல் எதாச்சும் பண்ணிட்டு நம்மை நாளைக்கு மாட்டிவிடாம போகமாட்டான் என்று," அவர்களை இன்னும் ஏத்தி விட்டுக் கொண்டு இருந்தான்.

சரி, விடுங்க அப்படி என்னதான் பண்ணிட்டான்னு கேக்கறீங்களா? அந்த மூணாவது தெரு மாரி.. நல்லவந்தாங்க எந்த பழக்கமும் இல்லை. ஆனாலும் இவர்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டான். டெக்னிசியனாக ஒரு கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க சுமாராக இருந்தாலும் கொஞ்சம் அமைதியானவன். ஒரு கோவில் திருவிழாவில் அந்த கமலாவின் கருவிழியில் எப்படியோ மாட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்வையால் மனதை பரிமாறிக் கொண்டு... நம்ம
தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணு கமலாவ டாவடிச்சு... பொண்ண கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.

'எப்பவும் இந்த எடுபட்ட வீணாப் போன நண்பர்கள் கூட சேர்ந்துகொண்டு டீக்கடையில் போற வரவங்களை கிண்டல் பண்ணி காலத்தை ஓட்டினாலும், பையன் கில்லாடி தான் அந்த வாத்தியாருக்கு ஒரே பொண்ணு எப்படியும் அவர்களைக் கண்டு பிடிச்சு அடிய போட்டாலும் கடைசியா மருமகனா ஏத்துப்பாங்கனு ஒரு திட்டம் போட்டு பொண்ணை கொண்டு போய்ட்டான்,' என்று ஒன்றுக்கு நூறாக கிராமத்துக்குள் பேசிகொண்டார்கள்.

அவன் நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்களையும் விடவில்லை தெரு மக்கள்.
ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கேள்வி கேட்டு ஒருவழி செய்து விட்டனர். எத்தனையோ முறை "அவன் எங்கு சென்றான் என்று தெரியாது," என்று கூறியும் விடவில்லை.

அந்த வாத்தியார் பாவம் நல்லவர். என்ன, திருக்குறள் தவறாகச் சொன்னால் முட்டி போடச் சொல்லுவார். திரும்பச் சரியாகச் சொல்லும் வரையிலும் விடமாட்டார்.

அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் பட்டுத் திருந்தட்டும் என்று சொல்லிவ் விட்டு அவர் வேலையைப் பார்க்கத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.

கிராமத்திலும் ஒரு மாதம் மட்டும் அந்த பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தது. அவர் காதில் விழுந்தால் அப்போது அவர் கண்கள் கொஞ்சம் கலங்கும் தாய். இல்லாமல் பாசம் காட்டி வளர்த்த பெண் அல்லவா? இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய், 'தன் பெண் எங்கு இருந்தாலும் நலமாய் இருக்கட்டும்,' என்று வேண்டிக் கொண்டார்.

ஒரு சில உறவினர்கள் கூறும் கேலிப் பேச்சும் உற்ற நண்பர்கள் கூறும் ஆதரவும் அவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அவரின் மௌனம் அதிகம் ஆகியது. அந்த மௌனமே அனைவரின் பேச்சையும் குறைக்கச் செய்தது.

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரின் மகள் கைக் குழந்தையுடன் கணவனோடு பிறந்த ஊருக்கு வருகிறாள். ஊரே வியப்புடன் பார்க்கின்றது. அவன் மிக நல்ல படியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளது புன்முறுவலில்,

முகத்தில் காட்டிய சந்தோஷத்தில் அனைவரும் அறிந்து கொண்டனர். ஒருவர் ஒருவராக விசாரிக்கத் தொடங்கினர்.

அனைவரிடமும் தன் கணவன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேறு ஊரில் தங்கிவிட்டதாகக் கூறினாள். அனைவரும் திட்டிய திட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு "நல்லபடியா இரும்மா," என்று வாழ்த்தி விட்டு அவளது வீடு வரைக்கும் வந்து அவளது தந்தையிடம் சமாதனம் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து அழ அவர் மனம் இளகி, பேரப்பிள்ளையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டு சாமிமாடம் நோக்கிச் சென்றார். அவரின் மௌனமும் மெல்ல குழந்தையின் கொஞ்சலில் கரைந்தது.

ம்.. நம்ம மாரிமுத்து வீட்டில் முதலில் எற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு ஒருவழியாக அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

அவனது நண்பர்கள் ரமேஷ், குமார் எல்லாம் வந்து அவனை கிண்டல், கேலியோடு கொஞ்சம் அடியும் போட்டு மீண்டும் டீக்கடையில் ஐக்கியம் ஆனார்கள்.


டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."

45 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இருபது வருடங்களுக்கு முன்பு என்ன... இப்பவும் இப்படி நிறைய நடக்கதான செய்யுது..

அப்பறம் அதென்ன "தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."?????????????

கேர்ள் பிரண்டு கண்டிப்பா நல்ல தோழியாவும் இருப்பாளே..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம், ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது//

ஹா ஹா ஹா...செம... எப்படி இப்படி எல்லாம்? அது என்ன இருவது வருஷம் முன்னாடி...ஓ சொந்த கதை....இருவது வருஷம் முன்னாடி அந்த மாரி நீங்க தான் கரெக்ட்ஆ? சரி சரி... :)
(but on a side note...a girl friend can't be a girl friend if she is not a friend too...:))))

Chitra said...

"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."


....கல்வெட்டுல பதிக்க மறந்துடாதீங்க... ஹா,ஹா,ஹா,ஹா...

Vasagan said...

Well try, still need some narration, don't worry its a starting only.

You have +ve vision so you can make it.

Vasagan said...

Beautiful fish tank, and feeding the fish with mouse great idea.

Priya said...

ம்ம்... டீக்கடை கதை நல்லா இருக்கு, அது ஏன் 'சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு'... எதுவும் ப்ளாஷ் பேக் இல்லையே:)

இமா க்றிஸ் said...

கமலான்னு கோபிகா படம் போட்டு இருக்கீங்க? ;))

Unknown said...

@j.j
Comment deleted
This post has been removed by the author.

February 18, 2011 4:28 PM//


வாங்க ஜெ ஜெ
வந்து என்னோமோ திட்டி எழுதி இருக்கீங்க அப்புறம் மனசு மாறிட்டு...:)
கமென்ட் போட்ட போதும்

Unknown said...

இருபது வருடங்களுக்கு முன்பு என்ன... இப்பவும் இப்படி நிறைய நடக்கதான செய்யுது..

அப்பறம் அதென்ன "தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."?????????????

கேர்ள் பிரண்டு கண்டிப்பா நல்ல தோழியாவும் இருப்பாளே..//



அப்படி இருந்தா சந்தோசம்

அதுபோல ஒரு பொண்ணு கிடைச்ச எவ்ளோ நல்லா இருக்கும்

நன்றி தங்கள் வருகைக்கும்

மேலான கருத்துக்கும்

Unknown said...

//தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம், ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது//

ஹா ஹா ஹா...செம... எப்படி இப்படி எல்லாம்? அது என்ன இருவது வருஷம் முன்னாடி...ஓ சொந்த கதை....இருவது வருஷம் முன்னாடி அந்த மாரி நீங்க தான் கரெக்ட்ஆ? சரி சரி... :)
(but on a side note...a girl friend can't be a girl friend if she is not a friend too...:))))

February 18, 2011 11:10 பம்//



என்னது சொந்த கதையா??? கிர்ர்

என் கற்பனை கதை

யாரு மாறி பேரு நல்லா இல்லை மி நேம் இஸ் சிவா கான்

மீண்டும் வருக


FOR SIDE NOTE: I AGREE WITH YOUR POINT. THANKS

Unknown said...

தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."


....கல்வெட்டுல பதிக்க மறந்துடாதீங்க... ஹா,ஹா,ஹா,ஹா...

February 18, 2011 11:19 பம்//



வாங்க சித்ரா அக்கா //கல்வெட்டுல பதிக்க மறந்துடாதீங்க //கல்வெட்டில இருக்கோ எல்லோயோ

எங்க பதிவுலக கல்வெட்டில நீங்க இருக்கீங்க.நன்றி மீண்டும் வருக

Unknown said...

@இமா said...
கமலான்னு கோபிகா படம் போட்டு இருக்கீங்க? ;))

//

வாங்க இமா

கமலா படம் தேடினேன் கிடைக்கல

சோ

இ லைக் கோபிகா :)

போட்டுட்டேன்

நன்றி தங்கள் வருகைக்கும்

Unknown said...

@Vasagan said...
Well try, still need some narration, don't worry its a starting only.

You have +ve vision so you can make it.

February 19, 2011 4:54 எ//



வாங்க வாசகன் மாமா

தங்கள் மேலான வருகைக்கு முதல் நன்றி

தங்கள் அடுத்த நன்றி

தங்க யு போர் யுவர் சப்போர்ட்

Unknown said...

@Vasagan said...
Beautiful fish tank, and feeding the fish with mouse great idea.
//
February 19, 2011 5:20 அம/



ஹாய் நீங்க கூட அழகா SHORT STORY ஒரு மீண்ட்தொட்டி கதை எதை வச்சு ஒரு போஸ்ட் ...PODAPOREN.
:)


தங்க யு

திரு வாசகன் மாமா

Unknown said...

Priya said...
ம்ம்... டீக்கடை கதை நல்லா இருக்கு, அது ஏன் 'சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு'... எதுவும் ப்ளாஷ் பேக் இல்லையே:)

//



வாங்க ஓவிய சிகாமணி ப்ரியா மேடம்
ப்ளாஷ் பேக் மறந்து போயிடு ..:((((
மீண்டும் வருக :))

இமா க்றிஸ் said...

//இ லைக் கோபிகா// grrrr

'I' ;)))

Mathi said...

Very nice siva...intha girl friend concept enaku konjam puriyalaye

ரேவா said...

"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."ஹா,ஹா,ஹா,ஹா...
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை

ம.தி.சுதா said...

நல்லாத் தான் முன்னக்கு போயிருக்கிங்கள்.... அதெல்லாம் சரி இதுக்கள்ள என் கோபிகா வந்து நிக்கிறா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

ம.தி.சுதா said...

தங்களை பின் தொடர்ந்து விட்டுப் போகிறேன் முடிந்தால் நம்ம ஓடைக்கும் வாங்க...

மாணவன் said...

சொந்த அனுபவமோ?? நல்லாருக்கு சிவா :)

மாணவன் said...

// இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது///

கேர்ள் ப்ரண்டு வேற தோழி வேறயா?? ஒன்னுமே புரியலையே...

மாணவன் said...

// இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது//

கேர்ள் ப்ரண்டு இல்லைன்னு சொல்லல இருந்தா நல்லதுன்னு சொல்றேன் :)

மாணவன் said...

//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...//

“அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை” சொல்லிட்டு வன்முறையா இருக்கு... ஹிஹி

:)

Unknown said...

@Mathi said...

Very nice siva...intha girl friend concept enaku konjam புரியலையே///



எனக்கும்தாங்க புரியலை...

வருக்கைக்கு நன்றி மதி

Unknown said...

ரேவா said...
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."ஹா,ஹா,ஹா,ஹா...
அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை

//



அட வாங்க கவிதை தோழி

என்ன புரிந்து விட்டது என் ப்ளாக் எப்போ கமெடி பீஸ் ஆய்ட்டு போல

நன்றி வருகைக்கு

Unknown said...

ம.தி.சுதா said...
நல்லாத் தான் முன்னக்கு போயிருக்கிங்கள்.... அதெல்லாம் சரி இதுக்கள்ள என் கோபிகா வந்து நிக்கிறா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

//



வாங்க சுத்த அண்ணா

அவங்க நிக்கட்டும் நீங்க வாங்க வந்து அமருங்கள்...

உங்கள் ப்ளாக் மிக அருமை அண்ணா

Unknown said...

ம.தி.சுதா said...
தங்களை பின் தொடர்ந்து விட்டுப் போகிறேன் முடிந்தால் நம்ம ஓடைக்கும் வாங்க...

February 20, 2011 10://



கண்டிப்பாக தொடர்கிறேன்

நன்றி மீண்டும் வருக

Unknown said...

மாணவன் said...
சொந்த அனுபவமோ?? நல்லாருக்கு சிவா :)

February 20, 2011 11:08 எ//



அட போங்க மாணவன் அண்ணா

அனுபவ பட்ட நண்பர்களின் கதை
நன்றி தங்கள் வருகைக்கும்

Unknown said...

மாணவன் said...
// இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது///

கேர்ள் ப்ரண்டு வேற தோழி வேறயா?? ஒன்னுமே புரியலையே...

February 20, 2011 ௧௧//



விடுங்க பாஸ் எல்லாமே நமக்கு புரியவா போகுது .....:)

கண்டுக்கட்டீங்க

நீங்க கில்லாடி

எனக்கும் ஒன்னும் புரிலை பாஸ்...

Unknown said...

மாணவன் said...

"கேர்ள் ப்ரண்டு இல்லைன்னு சொல்லல இருந்தா நல்லதுன்னு சொல்றேன்
//


இல்லாம இருக்கிறது தான் நல்லதுன்னு சொல்றேன் :)

Unknown said...

மாணவன் said...
//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...//

“அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை” சொல்லிட்டு வன்முறையா இருக்கு... ஹிஹி

:)//

நண்பா அடிக்கிற கைதான் அணைக்கும் பாடல் கேட்டது இல்லையா?"

நன்றி தங்கள் நான்கு கருத்துக்களுக்கும்.

Unknown said...

நோட் ::)
நம்ம மொக்கை இளவரசன்
கோமாளி செல்வா
காணமல் போய்விட்டார்
கண்டு பிடித்து தரவும்

டேர்றோர் பாண்டியன் அண்ணாவையும் காணவில்லை

சாமக்கோடங்கி said...

உங்கள் கதையா..? ஐ மீன்..உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமா..?? மிக மெல்லிய கதை.. எனக்கு பிடித்து இருந்தது.. நன்றி.

Unknown said...

சாமக்கோடங்கி said...
உங்கள் கதையா..? ஐ மீன்..உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமா..?? மிக மெல்லிய கதை.. எனக்கு பிடித்து இருந்தது.. நன்றி.

//

அண்ணா வாங்க
சொந்த கதை இல்லைங்க
சொந்த கற்பனை கதை
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனேயே :)
நன்றி மீண்டும் வருக

RVS said...

வெரி குட். நன்றாக இருந்தது... கடைசியில் வேகவேகமாக நகர்த்தியது போன்ற உணர்வு.. வாழ்த்துக்கள். ;-)

Unknown said...

@RVS said...வெரி குட். நன்றாக இருந்தது... கடைசியில் வேகவேகமாக நகர்த்தியது போன்ற உணர்வு.. வாழ்த்துக்கள். ;-)

February 21, 2011 1:03 பம்//



நன்றி நம்ம ஊரு காரரே

பிரபல பதிவரே

ம் முடிக்க வேண்டும் என்று நகர்த்தி விட்டேன்

நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது

m m இதுல இருந்து தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா அண்ணன் கிட்டே கைவசம் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க... ம் ம்

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
டிஸ்கி: இந்த வார தத்துவம்
m m இதுல இருந்து தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா அண்ணன் கிட்டே கைவசம் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க... ம் ம்

February 21, 2011 6:41 //



ஹஹா

அண்ணா எப்படி அண்ணா கண்டு பிடித்தீங்க அப்படி என்றால் தங்களுக்கும் அதிகம் கேர்ள் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்காங்க என்று அர்த்தம்

நன்றி தலைவா வருகைக்கும் கண்டுபிடிப்புக்கும்

செல்வா said...

அண்ணா கதை எல்லாம் விடுறீங்க ? ஹி ஹி .. நல்லா இருக்கு .. ஏன்னா நாம படிக்கும் போது எதாவது திருப்பம் இருக்கும் அப்படின்னு நினைப்போம் .. அப்படி எதிர்பார்த்து படிக்கும் போது அப்படியே சந்தோசமாவே கதைய கொண்டுபோனது நல்லா இருக்கு .. ஹி ஹி .. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்தனுமா ?

Unknown said...

@கோமாளி செல்வா said...//
நீங்கள் வந்ததே சந்தோசம்
வாழ்த்தக்கள் வேற கூற வேண்டுமா ?
வேண்டாம்

கதை சும்மா உங்க மொக்கை போல வராது அண்ணா
நன்றி வருகைக்கும்

Anonymous said...

அம்பதாவது பதிவா???
பிரபல பதிவராய்ட்ட சிவா வாழ்க..

அந்த டிஸ்கி சூப்பரப்பூ..

Unknown said...

@இந்திரா said...
அம்பதாவது பதிவா???
பிரபல பதிவராய்ட்ட சிவா வாழ்க..//


நன்றி

Jaleela Kamal said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்,

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...