Monday, January 31, 2011

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்...




எனக்குள் வந்தது ஒரு மடல்....

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்.

ஹாய் பிரவின்,

எப்படி இருக்க? நலமா?

நானும் நலமாய் இருப்பதாய்ப் பொய் சொல்லுகிறேன். உண்மையில் அப்படி இல்லை; ஏதோ ஒரு மாற்றம் என்னில் உணர்கிறேன். அருகில் இருந்த தருணங்களில் எதையும் அறிய முடியவில்லை, நீ தொலைவில் சென்ற பிறகு உணர்கின்றேன்.

என் உணர்வுகளையும் மதிக்கும் ஒரு மனிதனை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். நேர்கொண்டு பார்க்கும் உன் கண்கள் முதற்கொண்டு, அளவாக உள்ள உனது கால் நகம் வரைக்கும் என் நெஞ்சில் புகைப்படமாய்.. வந்து கொண்டே இருக்கிறது..

காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.

உன்னை நான் மட்டும் தேடவில்லை; பக்கத்து வீட்டு வாண்டுகளும் "பிரவின் அண்ணா மீண்டும் எப்போ வருவாங்க?" என்று என்னை நச்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதில் நானும் அடங்கும் எப்போது மீண்டும் என்னிடம் வம்பு இழுப்பாய் என்று...

பட்டம் விட்டு சிறுவர்களோட சேர்ந்து நீயும் கண்ணாம்மூச்சி ஆடி..அவர்களில் ஒருவனாய்
நீ செலவிட்ட விடுமுறைத் தினங்கள் அவர்களோடுதான் அதிகம். இருந்தாலும், கிடைத்த இடைப்பட்ட நேரங்களில் என்னிடம் குட்டிக் குட்டி வம்பு, சண்டைகள் தவறாமல் இழுத்துக்கொண்டே தான் இருந்தாய். அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.

தொடரும்...

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!

19 comments:

Chitra said...

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!


.....அழகு.... ரசித்தேன்.

ரேவா said...

காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!

இரண்டையும் மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சிவா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க... எழுதின விதம் அந்த உணர்வுகளை கண் முன் கொண்டு வந்தது தான் வெற்றி... அது எல்லோருக்கும் கை வரும் கலை அல்ல... சூப்பர்... கடைசி கவிதை சூப்பர்...

vanathy said...

super, Bro. well written.

செல்வா said...

//காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை. /

எப்பவுமே , எல்லாத்தை விடவும் மனம் வேகம்தான் அண்ணா ..

செல்வா said...

//அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.//

அண்ணா உண்மைலேயே ரொம்ப நல்லா இருக்கு .. உணர்வுகள் அப்படியே காட்டிருக்கீங்க ..

செல்வா said...

//மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...//

ஹய்யோ எப்படி அண்ணா இப்படியெல்லாம் ?

Priya said...

உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் கடிதம்.....அருமை!

Anonymous said...

உணர்வுகள் மிகுந்த கடிதம்.

என்னை பாதித்த வரிகள்..

//காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. //

எல்லோர்க்கும் இந்த வலி உண்டு.

Unknown said...

Chitra said...
கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!


.....அழகு.... ரசித்தேன்.///



வாங்க சித்ரா அக்கா மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!

இரண்டையும் மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சிவா

///



வாங்க ரேவா முதல் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

உங்கள் கவிதையும் மிக அருமை ..

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க... எழுதின விதம் அந்த உணர்வுகளை கண் முன் கொண்டு வந்தது தான் வெற்றி... அது எல்லோருக்கும் கை வரும் கலை அல்ல... சூப்பர்... கடைசி கவிதை சூப்பர்...

////



வாங்க இட்லி புகழ் அப்பாவி தங்கமணி அவர்களே

உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் சந்தோசம் மீண்டும் வருக

//அந்த மீரா தொடர் வாரம் இருமுறை பதிவிட வேண்டுகிறோம்//

Unknown said...

கோமாளி செல்வா said...
//காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை. /

எப்பவுமே , எல்லாத்தை விடவும் மனம் வேகம்தான் அண்ணா ..

//



வாங்க செல்வா அண்ணே நல்ல இருகீங்களா..

நீங்கள் சொல்வதும் உண்மைதான் அண்ணா

Unknown said...

@vanathy said...
super, Bro. well written.

//February 3, 2011 10:07 எ
நன்றி சகோ

நன்றி

Unknown said...

@கோமாளி செல்வா said...
//அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.//

அண்ணா உண்மைலேயே ரொம்ப நல்லா இருக்கு .. உணர்வுகள் அப்படியே காட்டிருக்கீங்க ..

//



மிக்க நன்றி செல்வா அண்ணா தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க சந்தோசம்

Unknown said...

@Priya said...
உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் கடிதம்.....அருமை!

February 3, 2011 7:59 பம்//



நன்றி ப்ரியா..

தங்கள் வருகைக்கும்..

Unknown said...

இந்திரா said...
உணர்வுகள் மிகுந்த கடிதம்.

என்னை பாதித்த வரிகள்..

//காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. //

எல்லோர்க்கும் இந்த வலி உண்டு.

///

வாங்க பிரபல பதிவர் இந்திரா அவர்களே

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்குக்ம்...

மிக்க சந்தோசம்

மீண்டும் வருக

vanathy said...

super!!!

Unknown said...

@vanathy said...
super!!!

February 9, 2011 9:48/

மிக்க நன்றி

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...