Monday, September 27, 2010

சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்......

ம். ஒரு வழியா மரத்தடி பக்கமா வந்தாச்சு சாமிய கும்பிட்டுகிட்டு மணிகிட்ட "என்னடா பண்ணணும்? சைக்கிள் எப்படி கீழ விழாம போகுது?" ன்னு கேட்டேன். "இப்படி கேள்வி எல்லாம் கேக்காம இருந்தாதான் சொல்லித் தருவேன்" னு சொன்னான். மெதுவா குரங்கு பிடல் போட்டு இப்படித்தான் மெல்ல மெல்ல ஓட்டணும் என்று சொல்லிக் கொடுத்தான்.

தப்பு தப்பா ஓட்டி, மணிகிட்ட திட்டு வாங்கி - என்ன திட்டினாலும் சிரிச்சுகிட்டே இருப்பேங்க.


இல்லாட்டி மணி சொல்லித்தர மாட்டான். சரியான மொசடு, ஆனால் நல்லவங்க. மறுபடியும் சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம் எனக்கு அப்போல இருந்து இப்போது வரைக்கும் ஒரு வாட்டி சொன்னா புரியாது, இரண்டு மூன்று தடவை சொல்லணும். அப்போதான் கப்புனு பிடிச்சிப்பேங்க. யாருமே வராத ரோட்ல ஓரமா ஓட்டி கத்துகிறேன்னு முள்ளுமேல விழுந்து கை கால் எல்லாம் ஸ்ராய்ப்பு ஏற்பட்டது. உடனே மணி "அப்படி அடிப்பட்டா தான் உனக்கு சீக்கிரம் கத்துகிற ஆர்வம் வரும்." னு என்னைய உசுப்பேத்தி நிறைய அடிபட்டு ஒரு வழியா குரங்கு பிடல்ல போற அளவுக்கு கத்துகிட்டேங்க. அப்படி தனியா போகும்போது அவ்ளோ சந்தோசம் என்னோமோ ப்ளைட்ல போறதுபோல.. ம்

சைக்கிள் எடுத்துகிட்டு நேரா பொன்னி வீட்டு பக்கமா சுத்திகிட்டு இருந்தேன்.
பொன்னிய காணும். அப்புறம் பார்த்தா அது சைக்கிள் சீட்ல உக்காந்து எக்கி எக்கி பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு வருது. எப்படி இருக்கும் நமக்கு. பொன்னி "இப்போதான் குரங்கு பிடலே ஓட்டற. போ போ. உனக்கு எங்க கால் எட்டும்! நீ சைக்கிள் எல்லாம் ஓட்ட முடியாது"ன்னு என்னைய நல்ல ஓட்டிக்கிட்டு இருந்திச்சு. இதுக்குத்தான் இந்த பொன்னி இருக்கிற பக்கமே போறது கிடையாதுங்க.

அப்புறம் ஒரு வழியா சின்ன சைக்கிள் எடுத்து கம்பி மேல போட்டு எப்படியாவது சீட்ல உக்காந்து ஓட்டி கத்துக்கணும்னு வெறியில கீழ விழுந்து அடிபட்டேன். யாரும் நம்மை பாக்கறதுக்குள்ள எழுந்து விடலாம்னு பார்த்தா யாரோ ஒரு புண்ணியவான் எங்க தாத்தா கிட்ட போயி வத்தி வச்சுட்டாங்க. சாயங்காலம் வீட்டுக்கு போன பிறகு என்ன, எனக்கு கச்சேரி ஆரம்பம்தான். சும்மா சொல்லக் கூடாது. எங்க தாத்தா அடிக்கலைங்க. எல்லா மாட்டுக்கும் தண்ணி, வைக்கோல் எல்லாம் என்னைய வைக்கச் சொல்லிட்டு, அதுக்கு காவலா ஒரு ஆள் போட்டுவிட்டு டவுன் பக்கம் போய்ட்டார்.
அப்புறமா எங்க ஆத்தா கிட்ட கெஞ்சி இனிமே சைக்கிள் எடுக்கமாட்டேனு பொய் சொல்லிட்டு ஓடி வந்துவிட்டேங்க...


ஒரு வழியா சைக்கிள் கத்துக்கிட்டேன். அப்புறம் கொஞ்சம் doubles அடிக்கற அளவுக்கு கத்துக்கிட்டேங்க. அப்படியே கைய விட்டு போறது ரொம்ப பிடிக்கும். என்னதான் சைக்கிள் கத்துக்கிட்டாலும் எங்க வீட்டில உடனே சைக்கிள் வாங்கி கொடுக்கல. நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.

இது எல்லாம் நடக்கிற காரியமா..?

கொஞ்ச வருசத்துக்கு சைக்கிள் பத்தி வீட்டில பேசவே மாட்டேன்.
ம்முனு மறுபடியும் சோகமா மூஞ்ச வச்சுக்கிட்டு இருப்பேன். ஒரு வழியா எட்டாம் வகுப்பில இரண்டவது ரேங்க் வாங்கினேங்க. (நம்புங்க ப்ளீஸ்.) அப்போதான் சைக்கிள் கிடைச்சது. அம்மாகிட்ட "அம்மா, என்னைவிட சின்ன பையன் எல்லாம் சைக்கிள் ஒட்ராங்க. எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுங்க," ன்னு அடம் பிடித்து வாங்கிட்டேங்க.


புது சைக்கிள் ரெட் கலர். கேப்டன் வண்டி, முதல் தடவை புது சைக்கிள் வாங்கி அத ஓட்டிகிட்டு போற சுகம் இருக்கே. அனுபவித்தால்தான் தெரியும்.. அப்புறம் கைய விட்டு போறது பழகி போச்சு. வாரம் வாரம் சைக்கிள் எண்ணை போட்டு தொடச்சு புதுசு போலவே வச்சு இருப்பேன்.

இந்த சைக்கிள் வாழ்கையில மறக்கவே முடியாது. இது போல உங்களுக்கும் இருந்தால் சொல்லுங்க.

நன்றி வணக்கம்.

Saturday, September 25, 2010

சைக்கிள் ஓட்டிய கதை..


சிவா சைக்கிள் ஓட்டிய கதை..

முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, திரும்ப படியுங்க படித்துக்கொண்டு இருக்கும்போது முழுபரிட்சை முடிந்து எங்கள் தாத்தா வீட்டிக்கு செல்வது வழக்கம்.


தாத்தா வீடு ஒரு பஸ் போகாத கிராமம். அப்போவே தாத்தாகிட்ட ஒரு மாட்டு வண்டி இருந்துச்சு. அதில வைக்கோல் எல்லாம் போட்டு அதில ஜமுக்காளம் போட்டு பேரப்பிள்ளைங்களுக்கு உடம்பு வலிக்குமாம், வைத்து இருப்பார். அதில அம்மா தம்பிங்க நானும் எல்லாம் போவோம். எங்களுக்காக பகோடா அப்புறம் பூந்தி, காரபூந்தி எல்லாம் வாங்கி வச்சுருப்பார். மாட்டு வண்டி கொஞ்ச தூரம் போறதுக்குள்ள எல்லாம் காலி பண்ணிடுவோம்.


அந்த இரண்டு மாதம் போறதே தெரியாதுங்க, டெய்லி எதாச்சும் சேட்டை பண்ணிக்கிட்டு எப்போதும் ஓடிப்பிடிச்சு, திருடன் போலீஸ், புளியமரம் ஏறுறது, மாங்காய் அடிக்கிறது, இந்த

புளியமரம் சோட்டன் இருக்குல, அது எனக்கு ரொம்ப பிடிக்கும். புளிப்பு இருக்கும். அதில உப்பு வச்சு சாப்பிடற சுகம் இருக்கே... உங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்குமே.. ம்

அப்புறம் என் கூட்டாளிங்கள மறந்து விட்டேனே. பால்வண்டி மணி, எலும்பு பிரபு, மக்கு கிருஷ்ணா, அப்புறம் குட்டி சிவா.. (நாந்தாங்க சின்ன பிள்ளையாக்கும்). எப்போ பார்த்தாலும் அவங்க கூடத்தான் அந்த ஏப்ரல், மே லீவ் போகும்.. அடிக்கிற எல்லா மழை வெயில் எல்லாமே எங்களுக்காகத்தான்...

மணி அப்பா பால் வியாபாரம். பால்வண்டி மணி.. பிரபு அவ்ளோ ஒல்லியா இருப்பான் - எலும்பு பிரபு.. கிருஷ்ணா அப்பா வாத்தியார் (அதான் அறவே படிக்கமாட்டான். பின்ன எப்போ பாரு முழு பரீட்சை லீவிலும் படி படின்னு சொல்லிகிட்டே இருந்தா கோவம் வராதா கிருஷ்ணாவுக்கு) அதனால அவங்க அப்பாவ எப்படி திட்டுவான்னு எங்களுக்கு மட்டுமே தெரியும்... சொல்லி சிரித்துக்கொண்டே இருப்போம்... நேரம் போறதே தெரியாது.


இதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்.. (நம்புங்க).. அதனாலே கிருஷ்ணாவுக்கும் எங்களுக்கும் சண்டை வரும், "உன்னாலதாண்டா எங்க அப்பா என்னைய திட்றார்"னு எங்க மேல அப்போ அப்போ கோவப்படுவான்.

அப்பறம் மணி, நிறைய இவனை பத்தி சொல்லலாம். கொஞ்சமா சொல்றேங்க, அப்புறம் மீதி சொல்கிறேன். மணி வந்து கிருஷ்ணாவுக்கு அண்ணா போல. இவனும் சுத்தமா படிக்க மாட்டாங்க. ஆனால் பிற வேலைகள் சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வாங்கி தின்றது, அப்பறம் என்னைய மாட்டு கொட்டில கட்டி போட்டு பயமுறுத்துதல், அப்புறம் சைக்கிள் நல்ல ஓட்டுவான். களிமண்ணு பொம்மை செய்றதுக்கு அவன்கிட்ட இருந்துதாங்க கத்துகிட்டேன். அப்புறம் அதில எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டேங்க, அது வேற விசியம்...

குரங்கு பிடல் சைக்கிள் ஓடறதுன்னா என்னனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். அதாவது அந்த கம்பிக்குள்ள பிடல் போட்டு ஓடறது தான் குரங்கு பிடல்.. ம் எனக்கு சைக்கிள் ஓட்றதில எல்லாம் பெருசா விருப்பம் இல்லைங்க. எதாச்சும் விளையாடறது, சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் எங்க அத்தை பொண்ணு, பேரு பொன்னி - அது எங்கயோ சைக்கிள் ஓட்ட.. அதும் குரங்கு பிடல் அளவுக்குத்தான் ஓட்டும். அதுதான் முதல்ல சைக்கிள் ஓட்டிகிட்டு என்கிட்ட வந்து காமிச்சுக்கிட்டு இருந்திச்சு. என்ன பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டுச்சுங்க.... என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......


எப்படியாவது அந்த லீவில சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் என்று முடிவு பண்ணி நேரா மணிகிட்ட போய் "டே மணி எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தாடா"னு கேட்டா அவன் என்னைய மேலும் ஒரு முறை மொறச்சிட்டு "போடா சொல்லித்தர மாட்டேன்"னு சொல்லிட்டான்.. அப்புறம் அவன ஐஸ் வச்சு "டே மணி, உனக்கு தேன் முட்டாய், பர்பி, டீ cakku, பால் பண்ணு எல்லாம் வாங்கி தாரேன்"னு சொல்லி சேர்த்து வச்சு இருந்த காசு எல்லாம் அவனுக்கு வாங்கிக் கொடுத்து, அப்புறமா சைக்கிள் மாமாக்கிட்ட அழுது பிடிச்சு கேட்டு அந்த சைக்கிளை அப்படியே மெதுவா தள்ளிகிட்டே வந்தது புளிய மரத்தடி பக்கம் வந்தாச்சு.. அப்பறம் ரொம்ப களைப்பா இருக்கு அடுத்த பதிவில சொல்றேங்க...

Monday, September 20, 2010

தேடல்...


!!!

பிரிதலின்
துயரத்தை
புரியவைத்த
இந்த
தேடலின்
தொலைவில்
காணமல்
போய்விட்டேன்.


நட்பும்
நேசமும்
கொஞ்சமும்
குறையாத
கோவமும்
எல்லாம்
அன்பால் வந்த
விளைவுகள்தான்
என்பதை
அழகாய் புரியவைத்தது
இந்தத் தேடல்.


முகம் காணா
தொலைவில் இருந்தும்
அருகில் இருப்பதாய்
ஒரு கற்பனை!

கல்லூரி முடிந்து
வரும்
பிரிவின் துக்கம்
சொல்ல முடியா
வலி..

இதயத்தின்
வலியை
கண்ணீரால்
வெளியேற்ற கூட
முடிவில்லை...

தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...

எல்லாம்
சரியாகிவிடும்
என்று
நம்பிக்கையில்
ஒரு
ஒரு
தினமும்
அனுபவம்
என்ற
வார்த்தையின்
அர்த்தம்
உணர
முயற்சிக்கிறேன்..!

Wednesday, September 15, 2010

என்னத்த சொல்ல...

என்னதான் சொல்லுங்க எவ்ளோதான் காசு கொடுத்தாலும் விடியல் காலையில ஏழு மணி வரையில தூங்கிற தூக்கம்..அம்மா சுட சுட சுட்டு வைக்கும் பஞ்சுபோன்ற இட்லி

அப்பறம் இட்லி பொடி,கூட புதினா சட்னி,கொஞ்சம் மிளகாய் சட்னி(கொஞ்சம் தக்காளியும்)..அத நல்ல வயுறு முட்ட சாப்பிட்டுவிட்டு...

ஸ்கூல் போனபிறகு அங்க வாத்தியார் பாடம் நடத்தும்போது ..


வரும் ஒரு தூக்கம் பாருங்க..அதுவா எல்லாம் ஒரு கனா காலம்...

அப்பறம் நைட் studynu சொல்லிபுட்டு நண்பர்கள்கூட சேர்ந்து அரட்டை அடிச்சு..அப்பறம் நேரம் போனது தெரியாம அவசரம் அவசரமா இரண்டு பக்கங்களை படித்துவிட்டு பிறகு எல்லாம் பரிட்சைக்கு முன்னால அரைமணி நேரம் எல்லாமே மறந்து போனது போல ஒரு பயம் வருமே அந்த பயம் கூட ஒரு சுகம்...

அதைவிட பரீட்சை பேப்பர் கொடுக்கும்போது யாரு யாரு எவ்ளோ மார்க்குன்னு தெரிஞ்சிக்கிற ஒரு ஆர்வம் நம்மைவிட ஒரு பொண்ணு கூட ஒரு மார்க்கு வாங்கிட்டா அது பண்ற அலப்பல் அப்போ நாம படும் வேதனை இது எல்லாம் சொன்னா புரியாதுங்க அனுபவிக்கணும்....


அப்புறம் நம்ம வகுப்புக்கு புதுசா ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துவிட்டால் அதுகிட்ட பேசி ப்ரெண்டா ஆக நாம எடுக்கும் கஜினி முகமதுவின் முயற்சிகள்...என்னத்த சொல்ல....அந்த புள்ள நம்ம கிட்ட கடைசிவரைக்கும் பேசும் நினைக்றீங்க?...அத பத்தி எல்லாம் கேட்க பிடாது...!

பிடித்த எதாவது ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு..அப்படி கொஞ்சம் ஸ்டைலா நடந்து வரும்போது நம்மை விட நண்பன் ஒரு நல்ல சூப்பர் டிரஸ் போட்டுகிட்டு வந்தா நமக்கு வருமே ஒரு சின்ன பொறாமை....(இது வெளியில சொல்ல மாட்டோம் மனசுக்குள்ளே..


அவன நாம எவ்ளோ திட்டுவோம் தெரியுமா)...
பட் அவன்தான் நம்ம நல்ல நண்பனா இருப்பாங்க...


மீண்டும் (காலையில லேட்டா எழுந்திரிச்சு அம்மாகிட்ட அப்பாகிட்ட இருந்து வரும் வசவும் ஒரு சுகம்தாங்க)... தொடரும்...
பி.கு: (படத்தில் காட்டியுள்ள இட்லி அப்பாவி தங்கமணியின் இட்லி கடை இட்லி அல்ல அல்ல என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்)

Saturday, September 11, 2010

நம்ம அசினும் தமனாவும் அப்பறம் நம்ம அணில் குட்டி

நம்ம அசினும் தமனாவும்...





நம்ம அணில் குட்டி

நம்ம ஊரு தாங்க

இது வீட்டை விட்டு கோவில் கிளம்பும்போது எடுத்த படங்கள்.1

இது வீட்டை விட்டு கோவில் கிளம்பும்போது எடுத்த படங்கள்.1

இது நம்ம பாலடிக்காத்தான் சாமி...

இது நம்ம ஐய்யனார் சாமி வாகனம்ங்கோ ... .

பில்லா..


AM BACK ....

ADA ONUM ELLAINGA..NAN THIRUMBVAUM VANTHUVITEN..

SUMMA ORU VILAMBARAM....

Saturday, August 14, 2010

சித்திரம் தோணுதடி



சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..




மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்..

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்..

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..

கனவில் வாழும் மானிடா





மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா



(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ...

காதல் கடிதம்


கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா



நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

( கண்ணுக்குள் நூறு நிலவா.... )


தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?

வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது..

சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?


(கண்ணுக்குள் நூறு நிலவா....)


ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போதும்...


(கண்ணுக்குள் நூறு நிலவா....)

காதல்


ரகசியமானது காதல்


ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்



சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல..

(ரகசியமானது)

Tuesday, August 10, 2010

ஹேய்


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே


பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி



ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்

Wednesday, August 4, 2010

ஆரிராரோ



கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...



கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

எங்கள் முதல் வணக்கம்


ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்



தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட


கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

Tuesday, August 3, 2010

கண்டேனடி தோழி


கனா கண்டேனடி தோழி....
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..
கனா கண்டேனடி...

(கனா....)

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி... கனா கண்டேனடி


(கனா.......)

எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனா.........)

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்
நிறம் இல்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்

Monday, August 2, 2010

என்ன பத்தி


ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
கேளுங்கட
வாய போத்தி


ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

கடா வெட்டி
பொங்க வெச்ச
காளி ஆத்த
பொங்கல் அட
துள்ளிக்கிட்டு
பொங்க வெச்ச
ஜல்லி கட்டு
பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

போக்கிரிய சுட்டாலே சூடு
இவன் நின்னால அதுரும்ட ஊரு
அட கை தட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டம்
நீ விருப்பொம்
மடிப்போம்
களிப்போம்
இவன் வந்தாலே விஸ்ட்லே அடிக்கும் பாரு
எனாளுமே
பரப்போம்
அதில்தான்
கலப்போம்
போடு

பச்ச புள்ள
பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும்
வேல செஞ்ச
முந்தாணியில்
தூளி கட்டும்
தாய் மாரே நீயும்
கொஞ்சம் தள்ளி வெச்ச
ஆத்த உன்ன மன்னிப்பாள
தாய் பால் உனக்கு கொக-கொல
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
கால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப தெருப்பு
என்னோட பொரப்பு
நடமாடும் நெருப்பு

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

(சொருச்)

மழை காலத்தில்
குடிசைஎல்லாம்
கண்ணீரில் மிதகின்ற கட்டுமரம்
வெய்யில் காலத்தில்
குடிசைஎல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ளே
பொரக்க வேணும் பேர புள்ஸ்
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல
பட்ட படிப்பு தேவ இல்ல
தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கோளுத்து
இதுதான் என் கருத்து

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

கடா வெட்டி
பொங்க வெச்ச
காளி ஆத்த
பொங்கல் அட
துள்ளிக்கிட்டு
பொங்க வெச்ச
ஜல்லி கட்டு
பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஒளித்துளி




தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒளித்துளி பேசியதே
இனி எல்லாம் காதல் பயம்
எனைக் கொன்றாய் விந்தையுகம்

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

சித்திரை மாதம் மார்கழியானது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே

பூத்து நிற்க்கும் பூக்களை செதுக்கி
காலணி செய்து தருவேனே

வானவில்லில் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவேனே.



மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே

என் இதயம் சிறகாச்சு
என் இளமை நியமாச்சு

வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே...

என்கிட்ட மோதாதே


என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா
வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா




இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
அட...
அப்புறமா
குத்துப்பட்டு
ஓடாதே



என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா..

வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா

தாமரை மேலே




மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே!.... என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே!.... என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!

தென்பாண்டிச் சீமையில


தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.

வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..



தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...