Tuesday, December 20, 2011

தலைப்பு தெரியாத கவிதைகள்...




கிறுக்கி வைக்கிறேன்

வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...


மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்.


உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.


கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு!

தினம் தினம்
மழை வரும் நேரம்
ஏதோ ஏதோ
ஒரு நினைவு
மழையின்
ஒரு ஒரு துளியிலும்!


உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...


டிஸ்கி :

அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
எல்லாரும் சந்தோசமா எப்பொதும் நலமுடன் இருக்க கடவுளிடம்
வேண்டுகிறேன்.



Friday, December 9, 2011

இந்த வார புலம்பல் ...




என்னால முடியல:....(((((


நண்பனுக்கு கல்யாணம் நல்ல விசியம்தான் ...
நிச்சயம் நல்ல விசியம்தான்..
ஆனால் கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையில இடைவெளி விடக்கூடாது
அப்படி விட்டா..அது அது தொலைபேசி கம்பெனிக்குதான் நல்ல விசியம்
கூட இருக்கும் நமக்கு அது ராகு காலம்...

அப்படி யாருக்காவது பிக்ஸ் ஆகிட்டா..அவங்கள நம்ம கூட கூட்டு சேக்க கூடாது..
யார இருந்தாலும் கழட்டி விட்ரனும் ..இவிங்க தொல்ல தாங்க முடியல சாமி
வேலை விட்டு வந்த ஆரம்பித்த போன் அடுத்த நாள் வேலைக்கு போற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காங்க ...அப்படி என்னதான்(.&*&**&^#^#$^%$^%$#...).....:)

ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...

இனி வேற கல்யாணம் ஆகாத நண்பனா கூட்டு சேர்க்க வேண்டியதுதான் ...அவ்வவ்

லைப் இஸ் டு லவ் மச்சி:

ம் என்ன வாழ்க்கைடா சாமின்னு ஒருசில நேரம் வேண்டி வரும்...
ஆனால் இது உண்மைதான் போல் இருக்கு

போராடிக்கொண்டே இருப்பதால்
வாழ்கையின் நேரம் முடிந்து விடுகிறது
அதனால எல்லாரும்
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...

(தத்துவம் சொன்னவர் - சிவா )


இந்த வாரம் மொக்கை :

ரொம்ப யோசிக்காதீங்க சும்மா...
வாழ்க்கை ஒரு அழகான பயணம்
எவ்ளோதூரம் பயணம் அழகா இருக்கும் என்பது நம்ம கைலதான் இருக்கு...
பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.



இந்த வார கவிதை:

ம்
யோசித்து பார்க்கிறேன்
ஒரு வரிகூட
வர வில்லை
கவிதையாய்
அதனால்
எழுதிய
பேப்பரை கசக்கி
எறிந்தேன் ...

குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்து "

அடடே ...
நமக்கும் கவிதை
வந்துட்டே ...:


(யாரும் அடிக்க கூடாது சிவா பாவம் )

Monday, November 7, 2011

ஞாபகம் ...



தீபாவளிஞாபகம்
தீபாவளி முடிந்து சென்னைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன், பேருந்தில் "பத்திரமா போய்ட்டு வா,போன உடனே கால் பண்ணு,மணி பர்ஸ் எல்லாம் பத்திரம்!" என்ற பாசமான உரையாடலை கேட்டுக்கொண்டே அப்போது என் கவனம் பஸ் ரேடியோவில் அரைகுறையாக இருந்தது, சார் இந்த பெட்டியை மேல வைக்க முடியுமா என்ற குரலை எங்கயோ கேட்டது போல இருக்கே என்று திரும்பி பார்க்கையில் ....

அருகில் அவள், அவளது அம்மா,ஒருவயது குழந்தை. வந்ததது கவிதா என்று புரிந்தது. "என்ன ஜீவா எப்படி இருக்க? உன்ன பார்ப்பேன் நினைக்கவே இல்லை..எங்க போற?" என்று கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை முழி பிதுங்க வைத்து விட்டாள்..சம்பரதாய விசாரிப்புகளுக்குப் பின் அவள் அம்மாவிடம் என்னை அறிமுக படுத்தி விட்டு அவள் புராணத்தை தொடர்ந்தாள்.

அருகில் இருப்பவர்களை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லைவில்லை, இப்பவும் அவளின் வெளிப்படையான தன்மை மாறவில்லை என்பதை கண்டு உள்ளுக்குள் சந்தோசம். வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆம் ஆம் இல்லை என்று பதில் கூறுவதை விட வேறு வழி தெரியவும் இல்லை.

"பள்ளி முடிந்து பத்து வருடம் கழித்து முதன் முதலாக பார்க்கின்றேன், அதுவும் இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை ஜீவா" என்றாள் மறுபடியும்..பிளாஷ் பாக்: பள்ளிமுடிந்ததும் அவள் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாறுதல் கிடைத்து விட்டதாகவும், அங்கே கல்லூரி படிப்பு முடித்து கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க்கொண்டு இருக்கும்போது திருமணம் முடிந்ததாக கூறி முடித்தாள்.

சரவெடி வெடித்து முடிந்தது போல இருந்தது அவளின் உரையாடல்கள்..அவளிடம் பிடித்த விஷயம் ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசும் பண்புதான். இப்போவும் மாறாமல் இருக்கிறது, ஒருமுறை கணக்கு பாடத்தில் ஏதோ கேட்க எனக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கணக்கு வாத்தியார் வர இசகு பிசகாக மாட்டிக்கொண்டு அவர் என் காதைத் திருகி அடிவாங்கியதை அடிக்கடி சொல்லி கேலி செய்து பிறகு மன்னிப்பு கேட்டதும் திடீரென்று நினைவில் வந்து போனது.."உனக்கு ஞாபகம் இருக்கா ஜீவா என்னால தான அன்னைக்கு நடராஜன் சார் கிட்ட திட்டு வாங்கின?" என்று அவளும் நினைவு கூர்ந்தது எனக்கு வியப்பை கொடுத்தது.

வகுப்பில் எட்டு பேரு மட்டும் பெண்கள் மீதி நாற்பது பேர் பசங்க. அந்த எட்டில் கவிதா மட்டும் என்னிடம் பேசி பழகியது இப்போது நினைத்தாலும் கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்.
மற்ற நண்பர்களிடம் பழகியது போலத்தான் உன்னிடம் நட்புக் கொண்டு இருந்தாலும் மற்றவர் பார்வையில் தவறாய் படும் என்று விலகி விலகிப் போனது உனக்கு என்றாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
மறுபடியும் பேசிக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை, அவள் இறங்கும் இடம் வந்ததும்
"போயிட்டு வரேன் ஜீவா, கவனமா இரு, சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு!" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சென்ற உடன் பள்ளி இறுதி நாள் அன்று என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று ஞாபகம் வந்து போனது. "ஜீவா என்ன கல்யாணாம் பண்ணிகிறியா?" அப்போதும் பதில் தெரியாத திரு திரு வென்று முழித்தது

நினைத்து எனக்குள் ஒரு குறும் சிரிப்பு
எப்போவும் வந்து போகும்..

diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..

Friday, October 14, 2011

விழிகளிலே ஒரு மயக்கம்...!




கண்ணுக்குள்
இருக்கும்
கருவிழியே
உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !

உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!

இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!

தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!

கோவத்தில்
பார்ப்பாயோ?
இல்லை
தாபத்தில்
அனுதாபத்தில்
பார்ப்பாயோ?
தெரியாது.

ஆனால்
ஒருமுறையாவது
என்விழிக்கு
பார்வை கொடு!

உனக்காய்
நான் தேடிய
ஒரு வார்த்தை
ஒன்று மட்டும்தான்!

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!

டிஸ்கி:

என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?

பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா?

Wednesday, September 21, 2011

குட்டிவாசகம்...




குட்டிவாசகம்:

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது
இருந்தாலும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையில்
அன்பான நட்பின் ஆதரவோடு உண்மையான நட்பின் பாசத்தோடு
சந்தோசமாய் வாழ்வோம்..

இருக்கும்
வரையிலும்
மற்றவரை
சந்தோஷப்படுத்தி
வாழ்வோம்.

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.

எவ்வளவு நாள் இருப்போம் யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை யாரையும் புறம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஓகே போதும் போதும்......

இப்போ ஒரு
குட்டிக் கிறுக்கல்...

என்னவளின்
சாயம் பூசா
இதழ்
பார்த்து
தாமரை

பிரம்மனிடம்
சண்டை இட்டது!

அவள் இதழ்
என்னைவிட
அழகாய் இருக்க
காரணம்
என்னவென்று?..


சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!

அதில்
தவிக்க
வைத்த
நிமிடத்தையும்
சேர்த்து ...!


டிஸ்கி:

இன்று உடன் பிறவா (SIS + FRIEND )தோழிக்கு பிறந்த நாள்
எப்போதும் போல வெற்றிக்கரமாக
முதல் வாழ்த்து சொல்லி வாழ்த்திவிட்டேன்.
இன்று மட்டும் அல்ல எப்போதும் நலமாய் வாழ நீங்களும் வாழ்த்துங்கள்
(முதல் வடை போல முதல் வாழ்த்து சொல்றதுகூட ஒரு சந்தோசம்தாங்க..)
ஹாப்பி பர்த்டே பேபி)

Monday, August 29, 2011

மழையே நீ நல்லா இருப்பியா...


மழை ரொம்ப நல்ல விசயம், ஆனால் ஒரு சிலருக்கு.


"ம்! இந்த பாழாப் போன மழை இருக்கே, நேரம் கேட்ட நேரத்தில வந்து இம்சையா கொடுக்குது," என்ற வசவுகளை கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் பெரு மழை வந்தது. தொப்பலாய் நனையும் முன்பு வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டு இருந்தேன்.

அந்த நேரம் வேகமாய் காற்றும் அடித்தது. வண்டியில் வேகமாய்ப் போய் விடலாம்; இருந்தாலும் எதற்கு இவ்ளோ அவசரம் என்று அருகில் இருந்த மரத்தடியில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த நிழல்குடை கட்டிடத்தில் மழைக்கு நடுங்கிக் கொண்டு என்னைப் போல அங்கே காத்திருக்கும் கூட்டத்துள் நுழைந்தேன்.

தெரிந்த முகமாய் யாரவது இருக்கிறார்களா என்று கண்கள் தேடும்போது இரு காந்தவிழிகள்... என்னைப் பார்த்தும் பாராமலும் நிற்கும் ஒரு காந்த விழியாளைக் கண்டு கொண்டேன்.

கொஞ்சம் சந்தேகம்தான் காந்தக்கண்கள் பார்ப்பது நம்மையா இல்லை வேறு என் அருகில் இருக்கும் யாரையாவதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை யாரும் இல்லை. ஏன் என்றால் அங்கு இருந்தவர்கள் எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். அவ்வாறு திரும்பி பார்க்கும் போது காந்தவிழி புன்னகைக்கவும் தவறவில்லை. இந்த இடத்தில் வைரமுத்து நின்று இருந்தால் ஒரு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போல 'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் வெளியிட்டு இருக்கலாம்.

அந்த மழையிலும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கதை பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு அக்கா, "என் தங்கச்சி ஊரில இருந்து போனவாரம் போன் போட்டு, அக்கா வத்தல் போட்டு வைக்கா. பசங்கலாம் வத்தல் கேக்கராங்க என்று கேட்டு இருந்தா. இன்னைக்கு வத்தல் போடலாம்னு இருந்தேன். இந்த சனியன் மழை வந்து ஒண்ணும் பண்ண விடாம பண்ணிட்டு," என்று பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தது. அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் கேட்டு நாங்கள் சிரித்துக் கொண்டோம்.

அந்த காந்த விழி அருகில் இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பது போல கையில் இரண்டு நோட்டுகளும் வைத்து இருந்தது. ஏதோ ஒரு தைரியம் பேச வேண்டும் என்று தோன்றியது.

"மழை எப்போது விடும் என்று தெரியல," என்று பொதுவாக பேச ஆரம்பித்தோம்.
சினிமா போல கனவா இல்லை நனவான்னு தெரியல. இருந்தாலும் உள்ளுக்குள் மனது மழை விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தது அந்த வத்தல் போட நினைக்கும் அக்காவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

உள்ளுக்குள் இந்த காந்தவிழியுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஊரில பேச முடியாது, ஏன் என்றால் எங்காவது நின்றால் கூட "உங்க பையன் அங்க எதுக்கு நிக்கரப்பல?" என்று தகவல் அப்பாவுக்குப் போய்விடும். கொஞ்சம் பயம் அதனால் எங்கும் நிக்கவும் மாட்டேன் காரணம் இன்றி எவரிடமும் பேசுவதும் கிடையாது. தெரிந்த முகம் என்றால் ஒரு புன்னகை அவ்வளவே. ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.)

அந்த காந்தவிழி கல்லூரியில் படிப்பதாகவும், புதிதாய் அந்த ஊருக்கு குடி வந்து இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள் என்றும் அறிமுகப் படலம் ஆயிற்று. என்னைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாய் கூறிக்கொண்டேன். ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன் மழை விடுவதற்குள் நாங்கள் பேசும்போது எல்லாம் பக்கத்தில் இருந்த தாத்தா நூறுமுறை மணி கேட்டு தொல்லை பண்ணிவிட்டார். எனது கடிகாரத்தை அவரிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அவருக்கு மணி பார்க்கத் தெரியுமா என்பது வேறு விசயம்.

மெல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. முன்பு மழை பிடித்தும் உணராமல் இருந்து இருக்கிறேன். இந்த மழை அழகாய்த் தெரிந்தது கொஞ்ச நேரம் மட்டுமே.

காந்தவிழியுடன் பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை நிற்கும் போல சத்தம் குறைந்து ஒருவர் ஒருவராய் நகர ஆரம்பித்தனர். கடைசி வரை நின்று கொண்டு இருந்தது நாங்கள் மட்டும் இல்லை; மணி கேட்டு தொல்லை பண்ணின அந்த பல்லு போன தாத்தாவும்தான். பிறகு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அவரவர் வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்.

மழை நின்று விட்டது அவளின் காந்த விழிகள் என்னைவிட்டு போகவே இல்லை..... நாங்கள் நிஜமாவே பல்லுபோன தாத்தாவை திட்டவில்லை.

நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.

மழையே நீ நல்லா இருப்பியா...

அந்த மழை வராமல் போய் இருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தோம்.


டிஸ்கி :
இந்த சின்ன முயற்சிக்கு பதிவில் உள்ள தவறுகளை திருத்தி மாற்றம் பண்ணிகொடுத்த இமா டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்..


Thursday, August 18, 2011

நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள் ...



வாழ்த்த வர உங்களுக்கு ....


அண்ணே
நம்ம ஊரைப் பத்தி எப்படி ஒரு ஒரு இடத்தையும்
அப்படியே என்றும் நினைவில் வைத்து
அலை போல என்றும் நீங்காது இருக்கும்
உங்கள் நினைவுக்கும்

கதைமுதல்
கவிதை வரை
கட்டுரையிலும்
விளையாட்டிலும்
மேலும்

கம்ப்யூட்டர் கதைகளை எழுதும் சுஜாதாவை போல
க்ரைம் தொடர் கதைகள் எழுதும் ராஜேஷ்குமார் போல
நகைச்சுவையும் கலந்து
எல்லாம் கலந்த கதம்பமாய்
பதிவுலகில்
திறம் வாய்ந்த ஒரு வேந்தனாய் வளம் வரும்
உங்களுக்கு எந்த தம்பியின் அன்பான
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

என்றும் இளமையுடன் நீண்ட
ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .

ஒரு ஒரு பதிவையும் லிங்க் கொடுத்து படிப்பதை விட
ஒரு லிங்க் உங்கள் சரித்திரம் பதிவு வரலாற்றில் என்றும் இருக்கும்
என்று நம்புகிறேன்.

வாழ்த்த வயதில்லை
இருந்தலும் வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் சந்தோசமாய் இருக்க
எனது அன்பான பிராத்தனைகள் அண்ணா.

இன்னைக்கு நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள்
முடிந்தால் நீங்களும் வாழ்த்துங்கள்
டிஸ்கி : உங்களுக்கு பிடித்த இட்லியும் கூட தேங்காய் சட்னியும்,இட்லிபொடியும்...
.



நம்ம ஊரு மைனர்

Thursday, August 11, 2011

இந்திய வரலாற்றில் முதன் முறையாக....

அன்பார்ந்த பெரியோர்களே!
எனது பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக!

சீரக இறால் வறுவல் செய்வது எப்படி....ஒரு நிமிஷம் இருங்க சாமிய வேண்டிக்கிறேன்
(/\)சாமி இந்த ப்ளாக் படிக்கறவங்கள மட்டும் காப்பாத்து.

சீரக இறால் வறுவல்-

ஓகே! தேவையான பொருட்கள்...

இறால் - அரை கிலோ, ஏன் என்றால், அதை சுத்தம் செய்த பிறகு கால் கிலோதான் வரும்.
பெரிய வெங்காயம் - நான்கு

சீரகம் - இரண்டு பெரிய ஸ்பூன்
பெரிய சீரகம் (சோம்பு) - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு-கொஞ்சம்
ஒரு முழு பூண்டு
பிறகு இஞ்சி- (பூண்டு அளவு)... ஒரு குத்துமதிப்பா எடுத்துக்கோங்க.
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகாய்ப்பொடி - சிறிது
எண்ணெய்-தேவையான அளவு.

முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும்.
பிறகு அதில் பாதி எடுத்துக் கொண்டு வெட்டப்பட்ட இஞ்சியும், உரிக்கப்பட்ட பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, கொஞ்சம் கறிவேப்பில்லை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் சமையல் பாத்திரத்தை வைத்து, அதாங்க எண்ணை சட்டி வைத்து எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்கு காயவிடவும். அதில் கடுகு கறிவேப்பிலை போட்டு, உடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். பொன் வறுவல் வந்த உடன் அரைத்த இஞ்சி பூண்டு கரைசல், வெங்காயம் சேர்க்கவும்

பிறகு நன்கு கழுவி மஞ்சள்தூள் போட்டு குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை சட்டியில் போடவும்.
பூண்டு இஞ்சி வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.

வாசனை குறையும் தறுவாயில் கொஞ்சம் மிளகாய்ப்பொடி போட்டு அதன் மீது கொஞ்சம் எண்ணெய் விட்டு சற்று மிதமான
தீயில் வதக்கவும்.

சூடான சுவையான இறால் வறுவல் ரெடி.

பின்குறிப்பு:
பெயர்க்காரணம்
கடந்த வாரம் இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது..சுவை சற்று அதிகம் என்பது கூடுதல் தகவல்..:)

வெங்காயம் அதிகமா சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும் .
பாதி வெங்காயம் பூண்டுடன் அரைத்தும் விடுவதால் தேங்காய் போடவேண்டியது இல்லை.
மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும்.

முக்கிய குறிப்பு:
இதுபோல செய்து எதாவது ஆகிவிட்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல...


Saturday, August 6, 2011

எங்க கிராமத்துல நடந்த என்னோட கதை...

இதோ உங்கள் முன்..

ஏம்பா இந்த

கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க? - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.

இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.

சரி

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants..... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில்
சொல்றது இவங்க வேலை.
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க?
MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்? - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
சரி இவங்க போய் பேசின உடனே client project (atwood) கொடுத்துடுவானா?அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?

இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு புலம்ப
ஆரம்பிப்பான்.
அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.
CR-னா?
Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.
அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

இதுக்கு அவன் ஒத்துபானா?

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?

முதல்ல ஒரு டீம் (atwood team) உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. (prabir) இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.

அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.

பாவம்பா

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.

நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!
இவருக்கு கீழ டெக் லீட், (JH) மோடுல் லீட், (FUN) டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், (gopal) டெஸ்டர்னு (muthukumar,kathir) , அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.

எப்படி?

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.

அப்புறம்?

ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.

அப்புறம்?

அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.எதுக்குடா இந்த மானங்கெட்ட பொலப்பு...........


டிஸ்கி: இதுஇமெயிலில் வந்த ஒரு கதை ....

Sunday, July 31, 2011

என்னைத் தேட வேண்டாம்....


என்ன யோசிக்கிறேன்
என்று தெரியாமலே
யோசிக்கிறேன்.
எங்கு செல்கிறது
என்மனம்!
அதுவும் தெரியவில்லை
தெரிந்துகொள்ள
விரும்பவும் இல்லை.

மூச்சு முட்டாத சுவாசம்,
கண்ணைப் பறிக்காத
சூரிய ஒளி,

காதைக் கிழிக்காத
வண்டுகளின்
ரீங்காரம்,

மயங்க வைக்காத
மலரப் போகும்
பெயர் தெரியாத
பூக்களின் வாசம்.

காற்றுப் புகாத இடத்திலும்
என் மனம்
பரந்த விண்வெளியில்
விரிந்து கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேல் மரங்களின்
புன்னகை வெள்ளம்,

அடுக்கடுக்காய்
அழகான
மலைப்பாதைகள்,

அடர்ந்த காட்டில்
நீண்டு திரும்பும்
வகிடிடப்பட்ட
ஒற்றையடிப்பாதைகள்,

அழகாய்
வரவேற்கும்
வானவில்.

கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்....

என்னைத் தேட வேண்டாம்.!

Friday, July 15, 2011

கிராமத்து கனவிலே...(2)..The end

ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள், இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர்.

இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....

ஐந்தாம் வகுப்பில் காலணாவுக்கு கடலை மிட்டாயும் மீதிக்கு தேன்மிட்டாயும் வாங்கிகிட்டு
அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு அவனது அருகில் வந்து யாரும் பார்க்காம போது அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் அவனோட அத்தை பொண்ணு ரேவதி தான் அவன் கனவுக்கு காரணம்.


ரேவதியைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிட்டு. இப்போது எப்படி இருப்பா!! அப்போ

'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம். இப்போ பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

உப்புக்கும் காரணம் இல்லாத ஒரு சின்னக் குடும்பச் சண்டையில் இரு குடும்பமும் வெகு தொலைவு பிரிந்து விட்டார்கள்.

அப்போது ராஜேஷ், "ஏய் ஜீவா! தமிழ் வாத்தி வாந்துட்டாரடா." என்று எழுப்பிவிட்டான்.

கன நேரம் எல்லாம் மறந்து ரேவதியை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்.

ஜீவா பொதுவாக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான், சோம்பேறியும் கிடையாது. அதே சமயம் "அவன் வேலையில் சமத்தாக இன்று வரை இருந்து இருக்கிறான்." என்று மற்றவர்கள் கூறக் கேட்டு இருக்கிறான்.

இந்த சமயத்தில் திடீரெண்டு ரேவதி நினைவுக்கு வரவும் ஒரு வித மனக்கலக்கம் அடைந்து இருந்தான்.

இந்த வருடம் விடுமுறையில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் சொல்லிகொண்டே இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. காலாண்டு, அரையாண்டு, மூன்றாம் பருவத் தேர்வும் பள்ளி இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டது.

இந்த தேர்வு நல்லபடியாக எழுத வேண்டும் என்று தந்தை அறிவுரை கூறிகொண்டே இருந்தார். "சரி, சரி" என்று கேட்டுக்கொண்டே அவனால் முடிந்த அளவுக்கு தேர்வையும் எழுதி முடித்து இருந்தான்.


அவனது எண்ணம் எல்லாம் நகரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும்.


பள்ளி தேர்வுகள் வெளி வந்தன. அவனும் நண்பனும் முதல் வகுப்பில் தேறி இருந்தனர். இருவரில் ராஜேஷ் கணேஷை விட கூடுதல் மதிப்பெண்கள் பெற்று இருந்தான்.

ஜீவாவும் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்று இன்ஜினியரிங் கல்லூரி செல்லும் தனது கனவை நிஜமாக்கிக் கொண்டான்.

இதற்கு இடையில் கிராமத்தில் முக்கிய தலைவர் ஒருவர் திருமணத்தில் இரு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ஜீவா எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ரேவதியைப் பார்ப்போம் என்று.

திருமணத்தில் பரிமாறும் இடத்தில் ஜீவாவும் நண்பர்களும் சேர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு பரிமாறி கொண்டு இருந்தனர்.


அப்போது "ஏன்பா, சாம்பார் கொஞ்சம் இங்க போடு." என்ற ஒரு தேன்குரல். ஜீவாதான் அது என்று ரேவதிக்குத் தெரியாது.

ஜீவாவுக்கு மட்டும் தெரியும் அந்த குண்டு விழி பார்வையும், அழகான கன்னக்குழி அழகும் இவள்தான் ரேவதி என்று புரிந்து கொண்டான். ரேவதிக்கும் எங்கோ பார்த்த நியாபகம் என்று யோசித்து அறிந்து கொண்டாள்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் பால்ய நினைவுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் தந்தை குரல் கேட்டு பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

அந்த நேரம் மாமாவின் மேல் வந்த கோவத்துக்கு அளவே இல்லை. பின்னாடி அவன் நண்பன் ராஜேஷ் வந்து, "யாருடா அது? சொல்லவே இல்லை." அப்படி இப்படி என்று இவனை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டு இருந்தான்.

அந்த திருமணத்தில் மீண்டும் இரு உறவுகளும் பழசு மறந்து வழக்கம் போல பேசிக்கொண்டு இருந்தது இருவருக்கும் மனதில் ஒரு சந்தோசத்தை கொடுத்தது.

இந்த வருடம் கல்லூரிக்கு செல்வது பற்றி அவனது பெற்றோர் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் வீட்டில் பின்பக்கக் கூடத்தில் ரேவதி கண்களில் நேசமும், குறும்பு பார்வைகளும், ஜீவாவை பேச விடாமல் திணறடித்துக்கொண்டு
தலையாட்டி பொம்மையாக வைத்து இருந்தது. பிறகு தொலை பேசி எண்கள் பரிமாறப்பட்டன

அதற்குள் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.

பிறகு மூன்று ஆண்டுகள் ஜீவா ரேவதி உபயத்தால் ஒரு தொலைபேசி நிறுவனம் நன்கு செழித்து வளந்தது இவர்கள் நேசத்தைப் போல.

படிப்பு முடிந்ததும் நல்ல வேலையில் ஜீவா சேர்ந்தான். திருமணப் பத்திரிகை அச்சடித்து கிராமத்து வீட்டில் திருமணம்


வெகு சிறப்பாக நடைபெற்றது.


டிஸ்கி:

* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது.
வேகமாய் முடித்த காரணம் 'மண்டையில் அவ்வளோதான் மசாலா இருக்கு.' என்று எண்ணிக்கொள்ளவும்

* சூழ்நிலையும் சாதகமாக இல்லை, அதனால் அதிகம் ப்ளாக் பக்கம் வரமுடிவது இல்லை.

*எழுதுவதை விட வாசிப்பது பிடிக்கின்றது. ஆனால் மீண்டும் நேரம் கிடைக்கும் போது என்னுடைய மொக்கைகள் தொடரும்.

*அப்பாட இன்னும் கொஞ்ச நாளைக்கு வரமாட்டேனு சந்தோசமா ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்கள்
ம் ம் ம்
ஓகே ஸ்வீட் எடு கொண்டாடு....:)
மீண்டும் பொறுமையுடன்
படித்தமைக்கு நன்றி

Thursday, May 26, 2011

கிராமத்து கனவிலே...(1)




மிதமான காலைப்பொழுது அழகாய் பகலவன் பல் துலக்கி அதிகாலையிலே எழுந்து விட்டான் போல. அதுவரை கனவில் இருந்தான் ஜீவா. அழகான கிராமம், பெயர் தெரியாத குருவிகளின் ரீங்காரம், குயில்களின் கூவல், பொழுது விடிந்து இரை தேடப் புறப்படும் பறவைகள், அல்லி அதிகமாக இருந்த குளக்கரை ஓரம் ஒற்றை காலில் நடனம் ஆடும் கொக்கு, நானும் இருக்கேன்னு குளக்கரையில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள்...

இதமாய் ஒரு மெல்லிய காற்று படும் படாமலும் வீசிக்கொண்டு இருந்தது. இந்த இளஞ்சூரியன் லேசாய் சுட்டாலும் அது ஒரு வித உத்வேகம் கொடுத்தது. வண்டுகள் எல்லாம் அதன் பணியை தொடங்க ஆரம்பித்து விட்டன. பூக்களின் தேன் வாசம் காற்றில் வந்து கொண்டு இருந்தது.

அந்த சிறு கிராமம் மெல்ல எழுந்து கொண்டு இருந்தது.

அப்போதுதான், "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

"அவனை விட சின்ன பிளைங்க எல்லாம் காலையில எழுந்து குளித்து அமைதியாக படித்து கொண்டு இருக்கின்றனர். இவனுக்கு மட்டும் ஸ்கூல் இல்லையா?" என்று எப்போதும் பேசும் பாராட்டுகள் ஒரு பக்கம் திரும்பி படுத்தாலும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மெல்ல கனவில் இருந்து எழுந்தான். அம்மா, "இந்தாடா, டீ குடிச்சிட்டு போ." என்று சொல்லி விட்டு அவர் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தார்.

மெல்ல சோம்பல் முறித்து எழுந்து போர்வை எல்லாம் மடித்து வைத்து விட்டு குளிக்கச்சென்றான். குளித்து வந்து நேரம் பார்த்தப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது. 'ஆகா! நேரம் ஆகிவிட்டதே.' என்று உள்மனம் துடித்துக் கொண்டு இருந்தது. மனசுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ஜீவா. பின்ன! லேட் ஆகி போனால் பள்ளி சென்று அங்கும் திட்டு வாங்க வேண்டுமே. பள்ளியைச் சுற்றி ஓடி வர வேண்டுமே, என்று விரைவாக அம்மா சுட்ட பஞ்சு இட்லியை மிளகாய்ப் பொடியோட தேங்காய் சட்னியையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான்.


மதியம் சாப்பாடும் ரெடி பண்ணி அவன் பையில் வைத்திட்டு "மிச்சம் வைக்காம சாப்பிடு கண்ணா." என்று பாசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தைக்கு "சரிம்மா." என்று சொல்லிக்கொண்டு தனது மிதி வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போகும் வழியில் போகும் வழியில் அவனது நண்பர்கள் ராஜேஷும் ,கணேஷும் சேர்ந்து கொண்டனர். மூவரும் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் நான்காவது குருப்பில் படித்து கொண்டு இருந்தனர். அந்த பள்ளிக்கூடம் அவனது வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சரியாக ஒன்பது நாற்பதுக்கு எல்லாம் வகுப்பில் இருந்தனர். இந்த வருடத்தின் முதன் நாள் முதல் இன்று வரை அனைவரும் வருங்காலம் பற்றிய பயத்துடன்... எப்படி படிப்பது என்று பல யோசனைகள் ஒவ்வொரு மாணவருக்கும் இருந்தது.

இதில் ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதை பொறுத்து இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள். இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர். இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....


ஓகே மீதி அடுத்த பகுதியில்...

Monday, May 23, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...


இந்த போட்டோ எதுக்குன நாந்தான் firstu விஷ் பண்றேன் அதுக்காக ஹாப்பி பர்த்டே பேபி..




வானத்து தேவர்களும்
பூமியின் புண்ணிய
பதிவர்களும்
உலகத்தில் உள்ள அத்தனை
கவிதை அரசர்களும்
நேசம் தரும் தேவதைகளும்
பாசம் தரும் குழந்தைகளும்
நட்பை தரும் நண்பர்களும்...

ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவும்
இந்திய வானொலியும்
தத்தம் வாழ்த்துக்களை

பிரபல பதிவர்
கவிதை நாயகி

(கவிதையை கொலை பண்றவங்க)
சுபத்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றன..

என்றும் நீண்ட ஆயுளோட
நல்ல நலமுடன் வாழ
எல்லாம் வல்ல இறையை
நானும் வேண்டுகிறேன்

சாமி இந்த புள்ளைக்கு நல்ல புத்திகொடு...
கவிதையாய் எழுதி எங்களை எல்லாம் கொன்னுகிட்டு இருக்கு.....

சுபா உங்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி
எல்லாரும் இருந்து சாப்ட்டு




விட்டு பரிசு பொருள் கொடுத்து

வாழ்த்திட்டு போங்க


நூறு பலூன் விட்டு அதில ஹாப்பி பர்த்டே
எழுத விருப்பம்..
பசிக்கிற அனைவருக்கும் சாப்பாடு போட்டு உனக்கு வாழ்த்து சொல்ல விருப்பம் ..
என்னால அவ்ளோலாம் பண்ண முடியுமான்னு தெரியல...

ஆனாலும் பதிவுலகத்தில கிடைத்த நட்பு
மனசார நீ நல்ல இருக்கணும் வாழ்த்றேன்
சந்தோசமா இரு..
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு...
ஒரு சாதாரண வாசகன் சிவா

ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ..
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...


ஓகே ஸ்டார்ட் மியூசிக்


டிஸ்கி:
என்னடா இவன் ஒரு ஒருத்தருக்கும் வாழ்த்து சொல்லியே
போஸ்ட் போடறான்னு திட்ட கூடாது...(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம் .(போஸ்ட் போடாட்டி பிறந்த நாள் குழந்தை திட்டுவாங்க..)இந்த குழந்தை என்ன பண்ணும் நீங்களே சொல்லுங்க...)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...