Thursday, June 21, 2018

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை....

என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொண்டேன் இல்லடா கொஞ்சம் மனசில சில கேள்விகள் எதிர்காலம் பற்றி
அதை தாண்டி அம்மா அப்பா பத்தி யோசித்துக்கொண்டு இருந்தேன் என சமாளித்து அங்கு இருந்து கிளம்பினேன் ...

சில வருடங்களுக்கு முன் ------(

ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருந்தேன் அவளின் வருகைக்காக
ஒரு நாள் காலை விடியலில் வாடகை  காரில் வந்து அனைவரும் இறங்கினார்கள்
அதில் எனது தேவதையும்..பார்த்தவுடன் ஒரு சந்தோசம் மிதப்பது போன்று
வெளிகாட்டிக்கொள்ளவில்லை இருந்தாலும்..
சம்பர்தாய விசாரிப்புகள் முடிந்து அனைவரும் சற்று ஓய்வு எடுக்க என் கண்கள் அவளை தேடியது...சின்னதாய்ஒரு  சிரிப்பு..என்ன கொடுத்தாலும் தகும் அந்த புன்னகைக்கு...கம்பனாய் பிறக்கவில்லை கவிதை வரவில்லை ஆனாலும் ஒரு வரி
தேடி பார்த்தேன்

எதுவும் கிடைக்கவில்லை போகட்டும்ம் என்று என்ன பண்ற எப்போ படிப்பு முடியும் என்ற விசாரிப்புகள் தாண்டி சாதாரணமாக போய்க்கொண்டு இருந்தது அங்கே இருந்து என்னடா பண்ற அவ தூங்கட்டும் அப்பறம் பேசிக்கலாம் என்று அம்மா குரல் கொடுக்க ஒரு ஓட்டம் பிடித்தாள்...!

நானும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நிமிடங்களை மெனக்கெட்டு நகர்த்த ஆரம்பித்தேன்..என்ன பேச எது பேச ஆனாலும் பேச தோணும் எதுனா பேச  தோணும் அவளிடம் மட்டும்.. வார்த்தை மட்டும் காவிரி போல வறண்டு போய்விடும் சில நேரம்..ஒரு மௌனமாய் போகும் கண் இமைகள் மூடும்  கணம்  கூடா இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருப்பேன்..அவளின் காந்த கண்களை...


thank you tamilkavithaigal.com
 ......

Wednesday, June 20, 2018

காயம் மாறிடுமா..!


தனியே
தவிக்க
விட்டுச்சென்ற
நிமிடங்கள் ..!

அழுது
தீர்ந்த கண்ணீர் !

நீ வரும்
தூரம் பார்த்து ..
ஏங்கிய நொடிகள் !

மறந்து போன
உன்னை
இருப்பதாய்
நினைத்து
உன் வருகைக்காக
காத்து இருக்கும்
எனது இதயம்..

யாரோ ஒருவரின்
முகச்சாயல் பார்த்து
நீயாக இருக்க கூடாத என்று
ஏமாற்றிக்கொண்ட நொடிகள்...



சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...