உணர்வுகளை
எல்லாம்
என் மௌனங்களின் மூலம்
தெரியப்படுத்த
விரும்புகிறேன்..
எப்பொதும்
மௌனமாய் இருக்கும் நீ
என்றாவது ஒரு நாள்
புரிந்துகொள்வாய் என
பத்திரமாய்
வைத்து இருக்கிறேன்...!
தினம் தினம்
பேசும் வார்த்தைகள்
எல்லாம்
நிமிடமாய்
கரைந்து
போனாலும்
மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...
என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்.....!
மறுக்கப்பட்ட
விடுதலை போல
சிறைப்பட்டேன்
உந்தன்
பார்வையில்....!
இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...
இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.
