சிவா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
சிவா என்பது சுருக்கம்
முழுப்பெயர் நாகநாதன் சிவாசங்கர் (அப்பா பெயர் நாகநாதன்).
காரணம் : இதை பெயர் வைத்த பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
இதுபோல ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை....
ஆனால் ஒரு நல்ல வாசகனாக வலைபதிவில் இருக்கிறேன் என்று கூறிகொள்கிறேன்...(ஏன் சார் இருக்கிறவங்க பத்தாதுன்னு நான் வேறையா???)
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
அட நீங்க நல்ல பதிவு எழுதினால்தானே பிரபலம் ஆகமுடியும். அதைவிட வாசிக்கின்ற அனைத்து பதிவுகளுக்கும் பின்னோட்டம் இடவேண்டும்.அப்போதுதான் பிரபலம் ஆகமுடியும். எந்த இரண்டும் இல்லை.
பிறகு பிரபலம் என்னும் ஆக வில்லை என்பதையும் காலர் தூக்கிவிட்டு சொல்லிகொள்கிறேன்.
ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன் (என்ன காரணம் என்றால் Dr .A P.J. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொல்லி இருப்பதை மனதில் படித்து முயற்சி செய்து வருகிறேன்...(எப்புடி.?)
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? ...
ம் இல்லை...
எழுதினது நாலு பதிவு அத்தனையும் சொந்த கதைதாங்க...
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிகளின் மூலம் நம்பிக்கையும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து வரும் நட்புகளையும் சம்பாதிக்க...

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஆங்கிலம் - இல்லை(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) --எல்லாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நம்பிக்கையில்.
ஹிந்தி - ஒன்று(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) -தேசிய மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்
தமிழ் - ஒன்று இருக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் முடிந்த...(நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்)
(ஒரு ப்ளாக் ஒழுங்கா எழுத முடியல இதில இதுக்கு எவ்ளோ பில்டப்பான்னு நீங்க நினைக்கேறது புரியுது,ஓகே அடுத்த கேள்வி. )
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோவம் நிறைய இருக்கு...பதிவர் பெயரை சொல்லமாட்டேன்...
யாரு அடிவாங்கறது...அப்பறம் வாங்க இத்தபத்தி தனியா சொல்றேன்....
பொதுவா எல்லோரயும் பிடிக்கும் சிலரின் கருத்துகள் பிடிக்கவில்லை அவ்ளோதான். அவர்கள் மீது எப்பொதும் தனி மரியாதையை உண்டு.
9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...
இமா...
என் எழுத்துகளில் உள்ள பிழைகளை நீக்க மட்டும் உதவவில்லை...
எந்தன் தவறுகளை அம்மாவாக,நல்ல குருவாக எடுத்து சொல்லி என்னை நல்வழிபடுத்தும் எனது ஆசிரியை...அவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
நல்ல கேள்வி...
இருங்க யேசிக்கேறேன்...
நான் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு சொல்லி கொடுங்க...எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...
இப்பவும் எப்பவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.
முடிந்த வரையில் யாரையும் காய படுத்தாதீங்க....
இருக்கின்ற வரையில் உதவுவோம்...
பின்குறிப்பு:
வாழ்க்கை போகும் கொஞ்சம் தூரத்தில என்னையும் உங்களோட பயணத்தில சேர்த்துகோங்க...
இந்த தொடரை யாருக்கு விருப்பம் இருக்கோ என்னை போன்ற புதியவர்கள் தொடரலாம்..
"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."

(சும்மா.. எல்லாரும் பஞ்ச டயலாக் பேசுறாங்க)
படிச்சிட்டு அடிக்கலாம் வரகூடாது)