அனைவருக்கும்
கொஞ்சம் தாமதம் மன்னிக்கவும்...
காரணம் எப்போதும் போல வேலைகள் அதிகம்
கடமைகளும் சேர்ந்து என்னை கவலை இல்லாது வேகமாய் ஓட செய்து விட்டது.
அன்பான வலை உலக உறவுகள்,நட்புகள் இவர்கள் கொண்டுள்ள பாசம் என்னை மீண்டும்
வர வைத்து இருக்கிறது.
உண்மையில் வாழ்க்கை இத்தனை வேகம் நகரும் என்று எதிர்பார்க்க வில்லை.திடீர் திடீர் திருப்பங்கள் வரும் மர்ம நாவல் போல தொடர்கிறது.அதுகூட படிக்கும்போதுதான் வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...
ஒரு சுழலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அடுத்த கரைக்கும் தொடுவதருக்குள் அடுத்த அடுத்த சுழல்! என்ன இருந்தாலும் சமாளித்து மெதுவாய் ஆற அமர உணர்கிறேன் வாழ்வின்
ஒரு சிறிய கணத்தை!இன்னும் நிறைய இருக்கிறது என்று உணரும்போது சிறிது மயக்கம் .
இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கையின் ஊடே போகிறேன் விடை தெரியாத வாழ்வை நோக்கி....
இத்தனை கஷ்டம் இருந்தாலும் அன்பான உறவுகள் நட்புகள் கூட இருக்கும்போது கஷ்டங்கள் தெரிவது இல்லை. சூழ் நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் இல்லாது போனாலும் மீண்டும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வலை உலக உறவுகளை சந்திக்க வருவேன் என்ற நம்பிக்கையோட..
இது மகிமாவுக்கு ஒரு சின்ன கிப்ட்

இது அஞ்சு அக்காவுக்கு உங்களுக்கு.


இது பேபி அதிராவுக்கு


இது கிரி அக்காவுக்கு

இமா அவர்களுக்கு

பிறகு அனைவருக்கும்

இது என் அத்தை பொண்ணு பொன்னிக்கு...

மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....
ஓகே மீண்டும் சந்திபோம் விரைவில்
இந்தியா ஒலிம்பிக்கில் நிறைய பதக்கம் பெற்று வர
எங்கள் சங்கம் வாழ்த்துகிறது..