
கண்ணுக்குள்
இருக்கும்
கருவிழியே
உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !
உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!
இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!
தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
கோவத்தில்
பார்ப்பாயோ?
இல்லை
தாபத்தில்
அனுதாபத்தில்
பார்ப்பாயோ?
தெரியாது.

ஆனால்
ஒருமுறையாவது
என்விழிக்கு
பார்வை கொடு!
உனக்காய்
நான் தேடிய
ஒரு வார்த்தை
ஒன்று மட்டும்தான்!

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!
டிஸ்கி:
என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?
பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா?